Followers

Showing posts with label ஏன் எதற்கு எப்படி. Show all posts
Showing posts with label ஏன் எதற்கு எப்படி. Show all posts

Friday, October 11, 2013

நானூறு மில்லியன் வருட பழமையான இயந்திரம்


கடந்த ஜூலை மாதத்தில் ஆங்கிலத்தில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது அந்த செய்தி சொல்லும் சேதி இதுதான்.

ரஷ்யாவின் விலாடிவாஸ்டோவில் (vladivostok) அலுமினியத்தாலான 400 வருட பழமையான இயந்திர படிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

கம்ஷட்கா பெனின்சூலாவின் ஒதுக்குப்புரமான பகுதியில் அதாவது 150 மைல்கள் தொலைவில் உள்ள டைகில் எனும் கிராமத்தில் புதைபொருள் ஆராய்சியாளர்களுக்கு (செயின்ட் பீட்டர்பர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த) புதை படிமம் ஒன்று கிடைத்தது. இது பற்றி யுரி குளோப்(Yuri Golubev)  என்பவர் இது ஒருவகையான கியர் மெசின் போல் இருப்பதாக தெரிவித்தார். இந்த இயந்திர படிமம் (fossil) 400 மில்லியன் வருட பழமையானது.

இந்த இயந்திர படிமத்தின் படமும் விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேற்படி படிமம் பிரான்ஸில் கண்டறியப்பட்டதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

Ancient machine gears embedded in rock

செயின்ட் பீட்டர்பர்க் பல்கலைகழகத்தில் யுரி குளோப் என்ற பேராசிரியர் இல்லை.

உண்மையில் இந்த படிமமானது பிரெஞ்சு மியூசியத்தில் வைக்கப்பட்டிக்கு, இதன் காணொளி 2007 ல் வெளிப்பட்டதாக தெரிகிறது.

பின் ஏன் ரஷ்யாவில் இப்படி ஒரு செய்தி வெளியிடப்பட்டது ?

டூரிஸ விளம்பரத்திற்காக ரஷ்யாவில் இதுமாதிரியான செய்திகள் வெளியிடப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.

இந்த காணொளியில் வெளியிடப்பட்ட தவறான தகவல் மெசின் படிமம் என்பது. ரஷ்ய செய்தி வெளிப்பட்டபோது இது குறித்து விஞ்ஞானிகள் நிலைத்தகவல் எதையும் வெளியிடவில்லை. இத்தகவல் உண்மையாக இருப்பின் அவ்வாறு விஞ்ஞானிகள் மெளனியாக இருக்க வாய்ப்பில்லை.

Weekly World News  எனும் செய்தி தளமும் தவறான தகவலை வெளியிட்டுள்ளது.


சரி உண்மை என்னவாக இருக்கும் ?

முதலில் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இயந்திரம் என்பதே ஒரு முரண்.

கிரிநாய்ட் அல்லது கடல் லில்லி என அழைக்கப்படும் கடல் உயிரினத்தின் படிமமாக (crinoids steam fossils) இது இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  இது கடலடியில் 6000 மீட்டர் ஆழத்தில் வாழும் ஒரு உயிரினம்) இதனுடைய படிமமே பார்பதற்கு கியர்கள் உள்ள இயந்திரம் போல் தோற்றம் தருகிறது.



Labels : ஏன் எதற்கு எப்படி, crinoids,crinoids steam fossils,கடல் லில்லி,

Download As PDF

Tuesday, October 8, 2013

ஈஸ்டர் தீவின் விளங்காத எழுத்துக்கள்


ஈஸ்டர் தீவின் ஆதி குடிகள் ரொங்கோரொங்கோ எனும் குறியீட்டு எழுத்துக்களை (கீற்றுகள் glyphs ) பயன்படுத்தியுள்ளனர். 

ஸ்பானியர்கள் இந்த தீவிற்குள் நுழைந்ததற்கு பின்னே அதாவது 1770க்கு பின் ஸ்பானிஸ் வார்தைகளை லத்தீன் எழுத்துகளில் எழுதிவந்திருக்கிறார்கள். இது 1860 வரைக்கும் நடைமுறையில் இருந்திருக்கிறது.

1860க்கு பின்நுழைந்த மிஷனரியை சேர்ந்தவர்கள் (missionaries) ஈஸ்டர் தீவின் குறியீட்டு (Rongorongo script) எழுத்துக்களை வடிவங்களின் புதிர்களை விடுவிக்க முயன்றார்கள்.  முயற்சி தோல்வி அடைந்தது.

ரெங்காரெங்கா குறியீட்டை எழுத்தை தவிர அத்தீவு மக்கள் தவு(Ta'u and Mama) மற்றும் மமா என்ற எழுத்துக்களை பயன் படுத்தி இருக்கிறார்கள்.


ரெங்காரெங்கா ஸ்கிரிப்டில் 120  வடிவங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.  பறவைகள், மீன்கள், கடவுள்களை, தாவர குறியீட்டுகளை, பல்கோண வடிவங்களை உள்ளடக்கி உள்ளது.






                                                                  pic : thanks to wikipedia

ஒவ்வொரு குறியீடும் வார்த்தைகளையோ, ஒலியையோ, கருத்து கோர்வையை,எண்களையோ வெளிப்படுத்துவதாக இருக்கலாம்.
ரப்பானூய் பேச்சு மொழி பாலிநேசியன் மொழியை ஒத்தது என்கிறார்கள்.

ரொங்கோரொங்கோ எனும் குறியீட்டு எழுத்துக்கள் இன்னும் விளங்கிக் கொள்ளப்படாத எழுத்து வடிவமாகவும், ஒரு மர்மக் குறியீடாகவே உள்ளது.

தொடர்புடைய பதிவு :   ஈஸ்டர் தீவு சிலைகளின் இரகசியம்

label : Easter Island, Rongorongo script

Download As PDF

Tuesday, August 13, 2013

”ஙப் போல் வளை” என்றால் ஙே என்று முழிப்பது ஏன்?

தொப்புல் கொடியில் இருந்து விடுபட்ட குழந்தை, இவ்வுலகுடன் ஏற்படுத்தும் முதல் ஒலி தொடர்பு ”ங்கா..”.

தமிழின் சிறப்பெழுத்து "ழ”  வைப்போல இன்னொரு எழுத்து “ங”  இந்த எழுத்தை கூர்ந்து கவனித்தால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல இருப்பதை காணலாம்.

சிறுவர்கள் இளம் பருவத்தில் எளிமையாக தமிழை பாடம் செய்ய ஒளவையால் எழுதப்பட்டது ஆத்திசூடி. இவர் வாழ்ந்த காலம் 12ஆம் நூற்றாண்டு.

”ங போல் வளை “

        'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ
        அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.

அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும்

sculptures by Antony Gormley University of oxford
 
இதை விளக்க தமிழறிஞர்கள் பல கோணங்களில் அணுகுகிறார்கள். 
ங இந்த எழுத்து பல கோணங்களை கொண்டது. அதன் கோணத்தின் ஒவ்வொன்றுக்கும் நிமிர், எதிர்ப்பு வந்தால் சாய்ந்துவிடு. மேலும் எதிர்ப்பா கீழ் நோக்கி வா, மறுபடியும் தலை எடுத்து வளைந்து பார், பின் கிட. நிமிர்ந்து நில் என்பதை தான் ங போல் வளைந்து கொடுக்க வேண்டும் என அவ்வை சுட்டி காட்டுகிறார்.

"திரு. நாஞ்சில் நாடன் இது பற்றி இப்படி குறிப்பிடுகிறார்.
 ஆத்திச்சூடி எழுதும்போது ஒளவையாருக்கு ஒரு சிக்கல் வந்திருக்க வேண்டும்.      ‘ங’ எனும் உயிர்மெய் எழுத்தைக் கொண்டு எங்ஙனம் வாக்கியம் அமைப்பது என.            மொழி இலக்கணப்படி ஙகரம் மொழி முதலில் வாராது. அதன் சொந்த மெய்யான ‘ங்’ எனும் எழுத்தைத் தொடர்ந்தே வரும். ஙகர மேயோவேனில் உயிரெழுத்துக்களையும் உயிர்மெய் எழுத்துக்களையும் தொடர்ந்துதான் வரும். எடுத்துக்காட்டு – அங்கு, இங்கு, எங்கு, ஈங்கு, ஏங்கு, கங்கு, சங்கு, பங்கு, தங்கு, நுங்கு, வாங்கு, மங்கு, முங்கு, தங்கம், சுங்கம், கலிங்கம், பாங்கு, தூங்கு, நீங்கு, வாங்கு, வீங்கு, மூங்கில். "

உயிர்மெய் எழுத்தில் க வை அடுத்து ங, ஙா வைத் தவிர உள்ள அந்த வரிசையில் வரும் மற்ற எழுத்துக்கள் வழக்கத்தில் இல்லை. காலப்போக்கில் கரைந்து போய் விட்டது என்று சொல்லலாம்.
ஆனால் அரிச்சுவடியில் 216 எழுத்துகளின் பட்டியலில் மட்டும் ஒன்றாய் கலந்து இருக்கிறது. ”ஙே ” என்று முழிப்பதற்கும் அடுத்தவனை திட்டும் முதல் எழுத்தாக இன்னும் அழியாமல் உள்ளது.
Download As PDF

Monday, July 22, 2013

உலகம் வியக்கும் இந்தியாவின் பழமையான தூண்

1600 ஆண்டுகள் பழமையான இந்த இரும்புத்தூண் இந்தியர்களின் திறமைக்கு அறிவியல் தொழில் நுட்பத்திற்கு கட்டியம் கூறுகிறது.

இந்த இரும்புத்தூண் சுமார் 24 அடி (7.2 மீட்டர்) உயரம் இதனுடைய எடை ஆறு டன் இதனுடைய அடிப்பாகம் நிலத்தினுள் ஒரு மீட்டர் இருக்கும்ங்கராங்க. இத்தூணில் சமஸ்கிருத வாசகங்கள் பிராமி எழுத்துகளை கொண்டு பொறிக்கப்பட்டு உள்ளது.




குத்புதீன் டெல்லியில் கட்டிய முதல் மசூதி குவ்வாத்-அல்-இஸ்லாம் சுமார் 23 இந்து, ஜைனக் கோயில்களை இடித்து உடைந்த பகுதிகளால் கட்டப்பட்டதே.  இந்த பகுதியில் தான் இந்த இரும்புத்தூண் கம்பீரமாய் நிற்கிறது.

இந்த இரும்புத்தூணின் வரலாற்றை இன்னும் பின்னால போய் பார்த்தோம்னா இது இரண்டாம் சந்திரகுப்த விக்கிரமாதித்தியரால் கி.பி.402 ல் செய்யப்பட்டது. இது அப்போதைய உதய கிரியின் (Vishnupadagiri) விஷ்ணு கோயிலின் எதிரில் இருந்த கொடிமரம். தூணின் உச்சியில் கருடன் இருந்ததாக நம்பப்படுகிறது. பின்னாளில், அதாவது 10ம் நூறாண்டில் தற்போது இருக்கும் பகுதிக்கு ராஜபுத்திர அரசர் ஆனங்பாலினால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. இந்த இடத்திலும் விஷ்ணு கோயிலின் முன்னால் கம்பீரமான கொடிமரமாக இருந்தது.

இருந்துட்டு போகட்டும்,  ஆனால் இன்னும் இந்த தூணின் துருப்பிடிக்காத அதிசயம் தான் உலகத்தை ஆச்சர்யப்படுத்துவதாகவே இருக்கிறது.

கான்பூர் ஐ.ஐ டியை சேர்ந்த வல்லுனர்கள் இந்த தூண் துருப்பிடிக்காததன் காரணத்தை ஆராய்ந்தார்கள்.   கடினமான ஒரு முலாம் பூச்சு இதனை துருவில் இருந்து தக்கவைத்து இருப்பதாக சொல்கிறார்கள்.  மேலும் இதில் உள்ளீடு செய்யப்பட்ட பாஸ்பரஸின் (phosphorous) கலப்பு தன்மையே துருப்பிடிக்காத தன்மையை அதற்கு தருவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். ( இதை பற்றிய விரிவான ஆய்வு புத்தகம் 2001 ல் வெளியாகி இருக்கு Delhi iron Pillar new insights by R.Balasubramaniam )

முக்கியமாக இதை உருவாக்கும் போது கடைபிடிக்கப்பட்டிருக்கும் வார்பட டெக்னாலஜி ஒரு பெரும் ரகசியத்தை நமக்கு சொல்வது என்னன்னா ? அது இந்தியர்களின்  “புத்திக்கூர்மை” 

இதே வகையை சேர்ந்த பிரம்மாண்ட இரும்புத்தூண்கள் மத்தியபிரதேசத்தின் தார் மாவட்டத்தில் லாட் மசூதியில் (The Lat Masjid ) காணக் கிடைக்கின்றன. (லாட் = தூண்)



அந்த கால கட்டங்களில் இந்தியாவில் இருந்து போர்வாள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. அலெக்ஸாண்டருக்கு போர்வாள் பரிசு அளிக்கப்பட்டுள்ளதாக வரலாறு.

மேலும் குத்புதீன் பற்றி சில தகவல்கள் :

இஸ்லாமிய மதத்தை இந்தியாவில் பரப்புவதில் முழுமூச்சாக இருந்தவர் சுல்தான் குத்புதீன் அய்பெக்.  இவரால் உடைத்து தள்ளப்பட்ட இந்துக் கோயில்கள் ஏராளம். இப்படி இடிக்கப்பட்ட கோயில்களின் தூண்களையும் படிக்கற்களையும் கச்சிதமாக மசூதி கட்டுவதற்கு பயன்படுத்தி கொண்டார்.

குத்புதீன் துருக்கிய இனத்தை சேர்ந்தவன். அடிமையாக ஒரு வியாபாரிக்கு விற்க்கப்பட்டவன். முகமது கோரியின் கண் பார்வையில் பட்டு குதிரை படை பிரிவில் தலைவனான், பின் பிரதம தளபதியாக உயர்ந்தான். பின்னாலில் கோரியால் பிரதி நிதியாக அமர வைக்கப்பட்டு அடிமைகளின் சாம்ராஜியத்தை நடத்தி காட்டியவர் குத்புதீன். கோரி ஆப்கானிஸ்தானுக்கு போகும் வழியில் மர்மமாக கொல்லப் பட்டார்.

குத்புதீன் நான்கே வருசம் ஆட்சி செய்தான் எதிர்பாரத விதமா, விளையாட்டின் போது குதிரையில் இருந்து எசகு பிசகா வீழ்ந்து இறந்தான்.  குதுப்மினாரின் முதல் அடுக்கு இவரால் எழுப்பப்பட்டது.

எத்துணையோ பிரம்மாண்ட மாளிகைகள் இருந்த இடம் தெரியாமல் போக வரலாற்றில் ஒரு அடிமையால் நிறுவப்பட்ட குதுப்மினார் இன்றைக்கும் அவர் ஆட்சியின் சாட்சியாக இருக்கு.

                                                                  *********

கீழே உள்ள பிரம்மாண்ட ஆலமரம் 250 ஆண்டுகள் பழமையானது. இதுதான் ஆசியாவிலேயே பெரிய பரப்பளவை கொண்டிருக்கும் மரம்.  அதாவது இந்த ஒரு மரமே வேர்களையும் கிளை விழுதுகளையும்(3300) பரவ விட்டு பெரிய காடுபோல் காணப்படுகிறது (சுமார் 4 ஏக்ரா ). இன்னொரு ஆச்சர்யம் இந்த விருட்சம் கிளைவிழுதுகளில் தான் உயிர் வாழ்கிறது அதாவது நடு மரம் இப்ப இல்ல. இது இன்னும் கிளைவிட்டு படர்ந்து வளர்ந்துட்டே இருக்கு பல உயிர்களின் புகழிடமாய்.
இது உள்ள இடம்  ஹெளரா (Howrah, India)






Download As PDF

Thursday, July 18, 2013

முதல் குகை ஓவியம் டிஸைன் எது ?

புதை பொருள் ஆராய்சியாளருக்கு ஒரு பொருள் கிடைத்தால் அது எந்த காலத்தை சேர்ந்ததது என்பதை உறுதிப் படுத்துவதே பெரும் சவால்.  அதிலும் ஒரு கற்கால ஓவியம் கிடைத்தால் (அதை சிதைக்காமல்..?!) அதைப் பற்றிய காலத்தை வரையறுப்பதில் பல நடைமுறைச் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். அப்படியே எடுத்துக்கொண்டுபோய் ஆய்வுக்கூடத்தில் சோதிக்க முடியாது ?!.    பாறை ஓவியங்கள் காலத்தாலும் தட்பவெப்ப சூழ் நிலைகளாலும் மழை வெயில் இவற்றாலும் பாதிப்பு அடைகிறது.

ரேடியோ கார்பன் மற்றும் தெர்மோலுமினெஸென்ஸ்[ thermoluminescence (TL) ]எனும் தொழில் நுட்பத்தின் மூலம் புதைபொருளின் காலத்தை நிர்ணயிக்கிறார்கள்.

தென்மேற்கு நமீபியாவில் ஹன்ஸ் சிகரத்தில் இரண்டு துண்டுகளாக உடைந்து போன ஓவியப் பலகைகளை கண்டு பிடித்தார்கள்.  இது தான் காலத்தின் முந்திய முதல் ஓவியம் அப்படின்னு முடிவு செஞ்சாங்க.  இதோட காலத்தை 26300 முதல் 28400 (B.P) இருக்கலாம்னு சொல்றாங்க. இந்த கற்பலகைக்கு  "அப்போலே 11 " அப்படின்னு பேர் வைச்சாங்க ( Appollo பறந்த சமயமா ? !).  இது கரி துண்டு, மற்றும் மண்நிறமி(Ocher), சுண்ணாம்பு கொண்டு வரைந்து இருக்காங்க.  ஆப்ரிக்க கண்டத்தில கண்டுப்பிடிச்ச பழமையான ஓவியம் இது.


ஆனால்  ப்ளும்பாஸ் குகையில் (South Africa)ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட பொருளின் மேல்  வரைபட டிசைன் போல இருக்கிறது.

இது சுமார் 70000 முதல் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இருக்கும்னு இது பற்றிய ஆய்வு செஞ்ச க்ரிஸ் ஹென்சில்வுட் என்பவர் தெரிவிக்கிறார். (கண்டுபிடிப்பு 2008 ல்)




இந்த கண்டுபிடிப்பு என்ன உணர்த்துன்னா மூதாதை இனமான ஹோமேஸேப்பியன்கள் அறிவுக்கூர்மையானவங்க அவங்களுக்கு வேதியல் , ஜியோமெட்ரிக் எல்லாம் தெரிஞ்சிருக்கு என்கிற முடிவுக்கு வரமுடியும்.


மேலும் இந்த ஆய்வில் கிடைத்த பொருள்கள் கரி படிந்த கடற்சிப்பி (இதிலதான் வண்ணங்கல கலக்க பயன்படுத்தி இருக்காங்க,) எலும்பு துண்டு கலக்கி, சுண்ணாம்பு கட்டிகள்.

இன்னொரு தகவல், வண்ணங்கலவைக்கு சிறுநீரை பயன்படுத்தியிருக்காங்க.
Download As PDF

Saturday, July 13, 2013

டுவோ இரைச்சல் - உங்களுக்கு கேட்குதா?

“டுவோ ஹம்” என குறிப்பிடப்படும் ஒருவித ஓசை 1993 ல் விமர்சிக்கப்பட்ட ஒரு விநோத ஒலி.  நியூ மெக்ஸிகோவின் டுவோ தேசத்தில் இந்த ஒலி உணரப்பட்டது. இந்த ஒலி எதனால் ஏற்பட்டது ? ஆய்வு முடிவுகளுக்கு அறுதி இட்டு கூற முடியாததால் இது விடை தெரியாத விநோதங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டது.

இந்த விநோத இரைச்சல் எல்லோருக்கும் கேட்கவில்லை மக்களில் 2% பேருக்கு கேட்டிருக்கிறது. காதொலி கருவி மாட்டியிருந்தவர்களுக்கு பெரிய பிரச்சனையை கொடுத்திருக்கிறது. இந்த மீ ஒலி இரைச்சல் 30 முதல் 80Hz குள் என மதிப்பிடப்பட்டது.(The sound was extremely low on the frequency scale ­ between 30 and 80Hz.)

இது குறித்து அப்போது கிளரப்பட்ட சந்தேகங்கள் :

மலை இடுக்குப் பள்ளத்தாக்குகளில் விபத்துகுள்ளான வேற்றுகிரக வாகனத்தில் இருந்து இந்த சப்தம் வந்திருக்கலாம்.

இராணுவ இரகசிய கருவிகளால் ஏற்பட்ட ஒலி அல்லது Extremely Low Frequency ( or ELF) சோதனை.

எரிமலை சீற்றத்தின் அறிகுறி

நிலத்தினடியில் நகர்ந்த தட்டுகளின் ஓசை.

இப்படி இதுபற்றி பல சந்தேகங்கள் இருந்த போது நியூரோபோன் ஆராய்சியாளர்கள் தெரிவித்தகருத்து.   “ நம் காது மட்டுமே ஒலிகளை உணர்வதில்லை நம் உடலின் மேல் தோல் ஒலி அதிர்வுகளை நம் மூளைக்கு கடத்துகிறது.  இம்மாதிரியான ஒலிகளை நாம் இந்த வகையில் உணர்கிறோம். ”

இந்த நுண் ஒலியை பதிவும் செய்திருக்கிறார்கள். உங்களுக்கு கேட்குதா ?


இதை பற்றிய கணக்கெடுப்பு ஆராய்ச்சி எல்லாம் நடந்தது. மூன்றாண்டுகளுக்கும் மேலாக, உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை என்கிறார்கள்.

காணொளி

Download As PDF

Sunday, May 19, 2013

ஏன்..எதற்கு ? தொன்மையான பாக்தாத் மின்குடுவை

1938 ல் பாக்தாத் அருகில், இரண்டாயிரம் ஆண்டு பழமையான கிராமத்தில் எதற்காகவோ நிலத்தை தோண்டிய பொழுது வேலையாட்களுக்கு நிலத்தினடியில் ஒரு பொருள் கிடைத்தது. அது பார்பதற்கு ஒரு பூச்சாடி அல்லது குடுவை போல இருந்தது. வெளிர் மஞ்சள் நிறத்தில் களிமண்ணால் செய்யப்பட்டிருந்தது(6 இன்ச் உயரம்). 5 க்கு 1.5 இன்சுகள் உள்ள தாமிர தகட்டால் உருளை வடிவ அடிப்பகம் கருங்காறையால் (asphalt) பற்று வைக்கும் தொழில் நுட்பத்துடன் மூடப்பட்டு இருந்தது. இதனுள் பொருத்தும்படியான ஒரு இரும்பு துண்டு அதன்மேல் முனை கருங்காறையால் மூடப்பட்டிருந்தது.

(இப் பொருளின் காலம் : பார்தியன் காலம் 248 BCE and 226 CE, circa 250 BC to AD 225 )


பாக்தாத் மியூசியத்தில் உள்ள பேட்டரி









தெற்கு ஈராக்கிலும் (2500 BCE) தாமிரத்தால் ஆனா குடுவையும் வெள்ளியிலான உருளை பொருத்தப்பட்ட இதே போன்ற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது (சுமேரியன் காலத்திய இடங்கள் !)

இதே போல் இவற்றின் சில பகுதிகள் எகிப்திலும் தொல்லியல் துறையினருக்கு கிடைத்திருக்கிறது.

ஜெர்மானிய தொல்பொருள் ஆராய்சியாளர் வில்ஹெம் கோனிக் ( Wilheilm König ) (1940) இதை ஆய்வு செய்து, இது அக்காலத்திய பேட்டரி என்று உறுதிப்படுத்தினார். அவரால் இந்த கண்டுபிடிப்பை பற்றி அப்போதே பிரபலப்படுத்தப்படாமல் போனதற்கு காரணம் உலகப்போர். இது அப்படியே மறந்து போனது.

1970 ஆம் வாக்கில் இதனுள் திராட்சை பழ ரசத்தை ஊற்றி பரிசோதித்ததில் இதிலிருந்து 0.87 வோல்ட் மின்சாரம் உருவானது. (அக்காலத்தில் இப்படி பயன்படுத்தி இருப்பார்கள் என்ற ஒரு அனுமானம்)

அலெஸான்ரோ வோல்டா கி.பி 1799 ல் எலக்ரோ வேதியியல் மின்கலனை (electro chemical cell) கண்டுபிடித்தார்.

மிகச்சிறிய அளவு கிடைத்த இந்த மின்சாரத்தை வைத்து என்ன செய்திருப்பார்கள்(ஏறக்குறைய 2 வோல்ட்)  ஏன் எதற்காக இத்தகைய ஆய்வு ?
இந்த கலன் நமக்கு முதலில் உணர்த்துவது பெர்சியன் விஞ்ஞானிகள் மின்சாரத்தை கண்டுபிடிக்க முயற்சித்திருக்கிறார்கள்.

ஆனால் வயர் போன்ற எந்த பொருட்களும் கிடைக்கவில்லை.

மருத்துவத்தில், அக்குபஞ்சர் போல ஊசியை வைத்து வலி உள்ள இடங்களில் இதை பயன்படுத்தி மின்சாரத்தை செலுத்திப் பார்த்திருக்கலாம். ஆனாலும் இது பிரியோசனப்பட்டிருக்காது.

பள்ளியில் இது குறித்து சொல்லி தர உபயோகித்திருக்கலாம்.
 
தாமிர சிலைகளின் உள்ளே பல மின்கலன்களை உபயோகித்து இதை வைத்து கடவுள் நம்பிக்கையை வளர்த்த இதை பயன் படுத்தியிருக்கலாம் என்பது ஒரு சாரரின் கணிப்பு. ( இதுல வைப்ரேசன் இருக்கு தெறிதா? சக்தி இருக்கு புரியுதா? ..இப்படி !! )

இருப்பினும் உலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் பேட்டரி இதுதான்.
Download As PDF

Monday, February 18, 2013

ஏன் எதற்கு எப்படி ? (மர்மப்பொருட்கள்)


அதிசய மர்ம உலோக கோளங்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் தென் ஆப்பிரிக்காவின் சுரங்கத்தில் 2.8 மில்லியன் ஆண்டு பழமையான கற்பாறைகள் கிடைத்தன. அவற்றில் இரண்டு ஒரு இஞ்சு விட்ட அளவு உள்ள அபூர்வ உலோக கோளங்கள் (உருண்டைகள்) கிடைத்தன.  ஒன்று நீல நிற உலோகத்தாலானது. இவற்றின் வெளிப்புரத்தில் நடுவில் குறுக்கு கோடு சரி சமமாக பிரிக்கப்பட்டு  இருந்த்து.  இணையான மூன்று சிறு துளைகள் போடப்பட்டு இருந்தன.
இன்னொரு கோளம் உள்ளீடு அற்றது (காலியான) இதனுள்
பஞ்சு போன்ற பொருள் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தது. எதற்காக யார் இவற்றை உருவாக்கினார்கள் என்ற மர்மம் இன்றுவரை துளங்க வில்லை.


அதிசய கற்பாறை உருண்டைகள்.

1930 ல் கோஸ்டாரிக்காவின் காட்டு பகுதியில் வாழைத்தோட்டம் அமைப்பதற்காக நிலம் சுத்தப்படுத்தப்பட்டது.  அந்த இடத்தில் டஜன் கணக்கிலான சிறிதும் பெரிதுமான கற்கோள உருண்டைகள் கிடைத்தன.
சிறியது டென்னிஸ் பந்து அளவிலும் பெரியது 16 டன் எடையுடன் 8 அடி விட்டத்துடன் இருந்தன.  மிக துள்ளியமான உருண்டைவடிவில் இது இயற்கையாக உருவாக வாய்ப்பு இல்லை மனிதன் உருவாக்கி இருந்தால் எப்படி உருவாக்கி இருக்கமுடியும் எதற்காக? யார் ? இதை உருவாக்கினார்கள் என்பது இன்று வரை மர்மமாக உள்ளது.



Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)