Followers

Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Monday, February 5, 2018

பறவைகள் பலவிதம் - பகுதி 3 (சலீம் அலி)

சலீம் அலி (1896-1987)

இந்தியாவின்  பறவை மனிதன் என்று அழைக்கப் பட்ட பெருமைக்கு உரியவர் சலீம் அலி. ஆதாரப் பூர்வமான் பறவைகளின் புள்ளி விவரத்தை பதிவு செய்த முதல் பறவையியல் விஞ்ஞானி இவர்.

சித்தப்பா அம்ருதீன் கொடுத்த துப்பாக்கியால் ("ஏர் கன்") ஒரு குருவியை சுடுகிறான் பத்து வயது சிறுவன் சலீம்  அடி பட்டு விழுந்த பறவையின் கழுத்து ஏன் மஞ்சளாக  இருக்கிறது என்று கேட்க அவர் அதை பற்றி தெரியவில்லை என்று சொல்லி W.S. மில்லார்டிடம் அழைத்து சென்று அறிமுகப் படுத்தினார். சிறுவனின் ஆர்வத்தை கண்டு வியந்த அவர் பாம்பே நேச்சுரல் கிஸ்டரி சொஸைட்டியின் (BNHS) ஹானரரி செக்ரட்டரி.

பின்னாளில் உயர் கல்வியில் விலங்கியல் பாடத்தை படித்து அதே சொஸைட்டியில் வருபவர்களுக்கு ஆர்வமுடன் பறவைகளை பற்றி விளக்கி சொல்லும் வேலை (அப்போது வயது 20) நிதி பற்றா குறையை காரணம் காட்டி அந்த வேலையும் பறி போனது.

கால சூழல் அவரை கிக்கிம் கிராமத்துக்கு விரட்டியது திருமணமான சலீம் பறவைகள் நிறைந்த அந்த கிராமத்தில் பெரும்பாலான நேரத்தை பறவை ஆராச்சியிலே செலவிட்டார்.  பறவை ஆய்வுக்காக பல இடங்களுக்கும் பயணமானார்.  துக்கணாங்குருவியை பற்றிய ஆய்வு கட்டுரை (1930) அவரை பறவை யியல் நிபுணராக்கியது.

இந்தியா சுதந்திர பெற்றதன் பின்பு, 100 ஆண்டு பழமை பெற்ற BNHSநிதி  நெருக்கடி காரணமாக மூடப்படும் சூழல் ஏற்பட்டது.  நேருவிடம் நிதி உதவி கேட்டு பெற்று மூடப்படுவதில்இருந்து  காப்பாற்றினார்.

1941 ல் "இந்திய பறவைகள்" [The Book of Indian Birds] என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அப் புத்தகம் நன்றாக விற்பனையும் ஆனது. பின்னாளில் டிலான் ரிப்ளே என்பவருடன் இணைந்து 10 வால்யூம்கள் கொண்ட புத்தகம் [Handbook of the Birds of India and Pakistan 1948 ] இந்திய பாகிஸ்தான் வாழிடப் பறவைகள் பெரிய அளவில் பேசப்பட்ட புத்தகம். இது  பறவைகள் பற்றிய விரிவான தகவல் புத்தகம்.  வீழ்ந்த குருவி  [ “The Fall of Sparrow”]  பறவைகளுடனான நேசத்தை பற்றி பேசும் புத்தகம்.

சலீம் அலி பறவை ஆராய்சியாளர் மட்டுமல்ல இயற்கையின் பாது காவலர். அவருக்கு கிடைத்த இண்டர்நேசனல் பரிசுத் தொகை (Golden Ark) 5 லட்சத்தை பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டிக்கு வழங்கினார்.  இந்திய அரசு அவருக்கு பத்மபூசன் விருது (1983)கொடுத்து பெருமைப் படுத்தியது.

அவர் ஆரம்பித்த பறவை ஆய்வு நிறுவனம்  SACON Salim Ali National Parkஇந்தியாவின் பல பகுதிகளில் செயல் பட்டு வருகின்றன [Port Blair, Mayabunder, (Andaman and Nicobar Islands); Singtam (Sikkim); Bharatpur (Rajasthan); Hyderabad (Andhra Pradesh); Upper Bhavani (The Nilgiris); Kukkal (Kodaikannal in TN) and Silent Valley National Park (Kerala)]

91ஆவது வயதில், பறவை நேசனின் உயிர் இவ்வுலகில் இருந்து  பறந்து விட்டது.


* * * * * * * * * * * * * * *  * *

இந்தியா சுமார் 1200 வகையான பறவை இனங்களின் தாயகமாக இருக்கின்றது. இது உலக அளவில் 12 % என்று சொல்லலாம். வட கிழக்கு இந்தியாவில் (சீன எல்லை)



கண்டறியப் பட்ட பாடும் பறவையான  ஜூத்ரா   சலீமலி ( "Himalayan Forest Thrush Zoothera salimalii")  2016 ல் பறவை இனங்களில் ஒன்றாக சேர்க்கப் பட்டது. 97 வகையான பறவையினங்கள் அழிவின் நிலையில் இருப்பதாகவும், அதில் 17 வகையான பறவை இனங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனவாம். இன்னும் பாதுகாக்கப் படவேண்டியவைகளின் பட்டியல் நீள் கிறது.

Download As PDF

Sunday, February 4, 2018

பறவைகள் பலவிதம் - பகுதி 2

#பறவைகள் #பலவிதம் Part 2
##############

கடற்பறவை  அல்பெட் ராஸ்   அளவில் பெரியது இதன் இறக்கை நீளம் 12 அடிகள்.

இது நீண்ட காலம் வாழும் பறவை 70 வருடங்களுக்கும் மேலே. இது தன் வாழ் நாளில் பறக்கும் தூரத்தை சுருக்கமாகச் சொன்னால் பூமியில் இருந்து நிலவுக்கு 8 தடவை போய் வந்திடும் தூரம்.

 இரோஏசியன் கழுகு ஆந்தைகள் சலனமே இல்லாமல் றெக்கை விரித்து பறக்கும். றெக்கையின் நீளம் சுமார் ஐந்தரை அடிகள். இதன் காதுகள் பார்பதற்கு கொம்பு போல இருக்கும்.

பறவைகள் என்றாலே நம்மில் பலருக்கும் மரங்களும் சேர்ந்து ஞாபகத்திற்கு வரும். பறவைகள் என்றால் மரத்தில் வாழும் என்பது தன் காரணம். மரத்தில் வசிக்காத பறவை பபின் (Puffin) இவற்றை கோமாளி பறவை என்றும் சொல்லுவார்கள். இவைகள் மூக்கை மூக்கை உரசிக்கொள்ளும் அழகே தனிதான். வட பசிபிக் தீவு கூட்டம் அதில் நார்தர்ன் தீவின் வட கோடியில் வாழ்கின்றன. அந்த தீவில் மரங்களே இல்லை.இவைகள் முயல் போல குழிகளில் வாழ்கின்றன.

அமெரிக்காவில் "பாராகீத்" என்றழைக்கப்படும் பட்ஜெர் கிளி வகை பறவை ஒன்று  உலக கின்னஸ்  சாதனை புத்தகத்தில் 1995 ம் வருடத்தில் பதிவு பெற்றது.  என்ன சாதனை என்று பார்தோமானால் அதற்கு 1728 ஆங்கில வார்த்தைகள் தெரிந்து இருந்தது.  அது மட்டும் அல்ல அவனுக்கு கோர்வையாகவும் பேசத் தெரிந்திருந்தது.  ஐந்து வருடங்கள் வாழ்ந்த அந்த பறவை கின்னஸ் அங்கீகரித்த பின் இரண்டொரு மாதங்களில் இறந்து விட்டது.

தேனீ வழிகாட்டி (ஹனி கைட்) இது ஒரு ஆப்பிரிக்கப் பறவை.  ஆப்பிரிக்க மலை வாழ் மக்கள் இந்த பறவைக்கு புரியும் படியாக சப்தம் கொடுத்தபடியே சென்றால் அந்த பறவையும். பதில் குரல் கொடுத்த படியே  வழி காட்டி செல்லும்.  தேன் கூடு இருக்கும் இடத்தை காட்டும். தேன் அவர்களுக்கு அதில் இருக்கும் லார்வாக்கள் இந்த பறவைக்கு ( 50  - 50)

அழிந்து போன டோ டோ பறவையை பற்றிச் சொன்னேன்.  எதிரியே இல்லாத தீவில் அவைகள் இருந்தன. இவைகள் ராட்சச சைஸ் புறா என்றே சொல்ல வேண்டும் நன்று தின்று கொழுத்த அவைகள் பறப்பதை மறந்தும் போயின. அதனால் தான் தன்னை கொல்ல வருபவனை கூட அவற்றால் இனங்கான முடியாமல் மடிந்து போயின.

புறாக்களை பற்றி ஒரு சமாச்சாரம் நம்மூர் கிளி ஜோசியக் காரர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். ஆங்கில எழுத்துக்கள் 26 ஐயும் அவற்றால் இனங்கான முடியும் அது மட்டும் அல்ல நிறையபேர் இருக்கும் புகைப் படத்தில் குறிப்பிட்ட இருவரை இனங்காட்ட முடியும் .
தொடு திறையில் ஒரே மாதிரியான இரண்டு டிசைன்களை இனங்காட்டும்.(டிக் டோ).

 புத்தி கெட்ட மனிதர்களால் தீக்கு இறையான மதுரை கோவில் புறாக்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. So Sad.

பறவையால் மனிதனுக்கு வரும் நோயை தடுக்க முடியுமா ? என்று யோசித்தால் முடியும் என்று சொல்லலாம். ஆந்த்ராக்ஸ், காலரா நோய் தாக்கி இறந்த உடலை தின்று ஜீரணம் செய்து நோய் தொற்று பரவாமல் தடுத்து விடுகின்றன வல்லூறுகள்.

தென்கொரிய தலைவன் (Kim Jung Il) "கிம் ஜோங் இல்" தன் அப்பாவின் 80 வது வயசு கொண்டாட்டத்திற்கு 7 லட்சம் குருவிகளை (ஸ்பேரோ) கொன்றான் அந்த பறவைகளின் கழுத்து மென் சிறகுகள் தலை கீரிடத்தை அழங்கரிக்க பயன் படுத்தப் பட்டன என்பதும் இவ்வினிய உலகத்தின் மோசமான விலங்கினம் மனிதன் என்பதை மறுப்பதற்கும் இல்லை.
Download As PDF

Tuesday, January 30, 2018

பறவைகள் பல விதம்

முதலாம் உலகப்போரில் அமெரிக்க இராணுவத்தில் "ஸெர் அமி" ஒரு  தூதுவர் அவசர தகவல் களை கொண்டு சேர்ப்பது அவர் வேலை  அவருக்கு பணியின்  போது ஒரு கண்ணும் காலும் பாதிக்கப் பட்டது ஒரு காலுக்கு பதில் கட்டை கால் பொறுத்தப் பட்டது. பல உயிர்களை காப்பாற்றிய அசகாய  பணிக்கு அவருக்கு ஹீரோ சர்வீஸ் மெடல் வழங்கி சிறப்பித்தார்கள். இடைவிடாது பறந்து பறந்து வேலை செய்பவர். ஆம்...அவர் ஒரு புறா. இறந்த பின் உடலை வாசிங்டன் மியூசியத்தில் பாதுகாப்பாக வைத்து இருக்கிறார்கள்.



இதே போல அமெரிக்காவில் துருக்கிய வல்லூரை எஞ்சினீயர் வேலைக்கு வைத்திருந்தார்கள். இவரோட வேலை நிலத்தடி  கேஸ் (எண்ணெய்) குழாயில் வெடிப்பை கண்டுபிடித்து அறிவிப்பது.

விசம் உள்ள பறவையும் இருக்கா? இருக்கு பப்புவா நியூகினியாவில் பாடும் பறவை பிட்டூய் (hooded pitohui)  இதன் சிறகுகள் மற்றும் தோல் விச தன்மையானது. அதற்கு எப்படி விச தன்மை என்று பார்த்தால் அது உட்கொள்ளும் ஒரு வகை வண்டினால் (Choresine Beetle) என்று கண்டறிந்தார்கள்.


ஒரு கோழியானது வருடத்திற்கு 200 - 300 முட்டைகள் போடும். வெள்ளை லகான் கோழி ஒன்று அதிக பட்சம் 371 முட்டைகள் போட்டு சாதனை செய்திருக்கிறது(1979).

கோழி முட்டையில் மஞ்சள் கரு பார்த்திருப்பீர்கள். அனேகமாக ஒன்று இருக்கும். அதில் அதிக பட்சமாக 9 மஞ்சள் கருக்கள் இருந்தன என்பது ஒரு சாதனை பதிவு.

மொரீசியஸ் தீவில் அதிக வயதான மரங்கள் (600 வருசங்கள்) இருந்தன அந்த வகையில் குறைந்த வயதான் மரங்கள் இல்லை ஏன் ? என்பதை பின்னர் கண்டு பிடித்தார்கள் "டோடோ " எனும் புதர் வாழ் பறவை இந்த மரத்தின் பழங்களை சாப்பிடுமாம். அவற்றின் எச்சங்களில் விழுந்த கொட்டைகள் மூலமாக மட்டுமே அந்த வகை மரம் முளைக்குமாம்.  16 ம் நூற்றாண்டில் இத்தீவிற்கு சென்ற மாலுமிகள் பயம் அறியாத இந்த பறவைகளை வேட்டயாடி அழித்தார்கள்.  இன்று அந்த பறவைகள் இல்லை மரங்கள் மட்டுமே சாட்சியாய்.


சுமார் 120 மிலியன் வருசங்களுக்கு முன்  வாழ்ந்து கொண்டிருந்த பறவை காக்கையை போல் இருக்குமாம். ஆங்கிலத்தில் "ஆர்கியோபேட்ரிக்ஸ்" (Archaeopteryx) ஜெர்மனி வார்த்தையில் இதற்கு "முதல் றெக்கை" எனப் பொருள் படுகிறது.

பறவைகளுக்கும் முதலைகளுக்கும் தொடர்பு இருக்கிறா? என்றால் இருக்கு. 200 மிலியன் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவை முதலைகள் அப்படிப் பட்ட ஊர்வன இனத்தை சேர்ந்த உயிரினத்தின் வழி தோன்றல் பறவை.  டினோசரஸ் எல்லாம் இப்படி தோன்றியவை. 65 மிலியன் வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட மாபெரும் அழிவில் எல்லாம் இறந்து போய் விட்டன. 

தண்ணீர் கலந்த  பாலை அன்னம் தனியாக பிரிக்கும் என்பதெல்லாம் கட்டுகதை.

மடகாஸ்கரில் 17 ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து வந்த  "யானை பறவை" மனிதன் வேட்டை யாடி அழித்தொழித்து விட்டான். இதன் முட்டையின் எடை 27 பவுண்டுகள்.
முட்டைகளில் ஹம்மிங்க் (ரீங்கார)  பறவை யின் முட்டை தான் அளவில் சிறியது.  அப்ப பெரியது என்று எடுத்துக் கொண்டால் அது ஆஸ்ட் ரிச்(நெருப்பு கோழி) பறவையினது.  ஆஸ்ட்ரிச் முட்டையை  (தண்ணீரில்) வேக வைக்க 2 மணிகள் ஆகும்.

ஆஸ்ட் ரிச், கோழி, வாத்து,கடற் பறவை இவைகள் முட்டையில் இருந்து குஞ்சு பொறித்த பின் ஓரளவு வளர்ந்திருக்கும் அதாவது....தாய் இல்லாமல் உணவு தேடி பிழைத்துக் கொள்ளும். ஆந்தை, மரங்கொத்தி, சிறிய பாடும் பறவைகள் இவைகள் முழு வளர்ச்சி அடைய தாயின் அரவணைப்பு தேவைப் படும்.


Download As PDF

Tuesday, February 2, 2016

மனிதனின் முதல் எதிரி !!






கொசுக்கள் ஜுராஸிக் காலத்தில் இருந்து வாழ்பவை (210 மிலியன் வருடங்கள்). நுளம்பிற்கு பயப்ப்பாத கவிஞனுமில்லை, தலைவனும் இல்லை.  பேரரசன் அலெக்ஸாண்டரையே தாக்கி வீழ்த்தியிருக்கின்றன (323 B.C. ல் மலேரியாதாக்கி இறந்தார்). கொசுக்கள் இந்த உலகத்தின் மோசமான விலங்கு (! ?) ஏனென்றால் படு மோசமான மனிதனின் முதல் எதிரி கொசுக்கள் தான். வருடத்தில் சுமார் 10 லட்சத்திற்கும் மேல் மலேரியா நோய்கண்டு இறக்கின்றனர்.  விதம் விதமான கொசு ஒழிப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் எல்லாம் தற்காலிகமாகிப் போய்விடுகின்றன.  அவற்றில் இருந்து மீண்டு மீண்டும் மீண்டும் மனிதனை தாக்குகின்றன.



டீட் (DEET )பெரும்பாலன கொசு விறட்டிகளில் பயன் படுத்தப் படுகிறது.  எதிர்ப்பு மருந்தாக பிகேர்டென் (picaridin)மற்றும் எலுமிச்சை யூக்லப்டஸ் எண்ணெய் ( lemon-eucalyptus oil) ஆகியவை CDC [ Centers for Disease Control ] ஆல் பரிந்துறைக்கப்படுகிறது.

வெளவால்கள் கொசுக்களை பிடித்து தின்பதில்லை.  பறவைகளில் ஈ பிடிப்பான் வகையை சேர்ந்த purple martins இவைகள் கொசுவைப் பிடித்தாலும் விரும்பி உண்பதென்னவோ தும்பிகளை த்(Dragon fly ) தான்.   மீன்களில் கேம்பீஸ் மற்றும் தட்டாம் பூச்சிகள் (தும்பி) கொசு லார்வாக்களை உண்கின்றன.

மனிதனின் முதல் எதிரி கொசுக்கள் தான். அவனை மேலே அனுப்புவதில் முதல் இடத்தையும் அது தான் பெறுகிறது என உலக சுகாதார ( (WHO ) நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. மலேரியா சிக்குன்குனியா..இப்போது புதிதாக ஜிகா (zika) எனும் அஸ்திரத்தால் தாக்குதல் நடத்துகிறது. சிலநாடுகள் பெண்களே கர்பமடையாதீங்க என வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. பாதிக்கப் பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் மூளை ரொம்ப சின்னதாக இருக்கிறதாம். எதிர்கால சந்ததியையே பாதித்துவிடும் என அந்நாடுகள் நடுங்கு கின்றன. பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடும் ரக நாடுகள்....(கொசுக்களால் ஜிகா பரவுகிறதா ? என்பதில் எனக்கு சந்தேகமிருக்கிறது )

 HIV கொசுக்களால் பரவுவதில்லை. HIV தாக்கப்பட்ட கொசுக்களின் வயிற்றில் அவை செறித்துவிடுகின்றன.

கொசுக்களுக்கு ஆங்கிலத்தில் "Mosquito "   ஸ்பானிய மொழியில் "சிறிய ஈ (அ) சிறிய பூச்சி" என்று அர்த்தம். 16 ஆம் நூற்றாண்டில் இருந்து அந்த மொழியில் இந்த வார்த்தை இருகிறதாம். ஆப்பிரிக்க மொழியில் இதை "மொஸீஸ்" என்கின்றனர். இலங்கையில் கொசுவை "நுளம்பு' என்று வழங்குகின்றனர்

கொசுக்களில் 3500 வகைகள் இருக்கின்றன. அவற்றில் 175 வகைகள்  அமெரிக்காவிலும், "ஏசியன் டைகர்" (Aedes aegypti) என்பது எல்லா இடங்களிலும் இருப்பது. மலேரியா கிருமிகளை சுமந்து செல்பவை அனோபெலிஸ் ( Anopheles)
கொசுக்களில் பெண் கொசுக்கள் தான் மனிதர் ரத்தங்களை ருசிக்கிறது. அதற்கு முட்டைகளை உருவாக்க மனித ரத்தம் தேவையாகிறது.

கொசு கடித்துவிட்டது என்று சொல்லுகிறோம் உண்மையில் அவைகளுக்கு பற்கள் (?) இல்லை. அவைகள் நீளமான நுண் துளை (proboscis) உறிஞ்சிகளை வைத்து அவை ரத்தத்தை உருஞ்சுகின்றன.  நுண் உறுஞ்சிகளை நம் உடலின் மேல் தோலில் துளையிடும் அதே நேரத்தில் இன்னொரு குழல் மூலம் இரத்தத்தில் எச்சிலை உமிழ்கின்றன. அந்த சிறு இடத்தில் கொஞ்சம் ரத்தம் உறைதல் ஏற்படுகிறது. அதோடு மரத்துப்போதலும் ஏற்படுகிறது, அதனால் தான் அது கடிப்பது சட்டென உணர முடிவதில்லை.   பெரும்பாலும் அது ரத்தத்தை உறிஞ்சிய பின்பே நமக்கு எரிச்சலும் வலியும் உணரப் படுகிறது.
மலேரியா நுண்கிருமிகள் அதன் எச்சில் மூலம் நம் உடலில் புகுந்து தாக்குதல் நடத்துகின்றன.

அதனுடைய எடையை விட மூன்று மடங்கு எடையுள்ள ரத்தத்தை குடித்துவிடுகின்றன. ஒரு பெண் கொசுவானது ஒரே சமையத்தில் 300 முட்டைகளை இட வல்லது. இதுமாதிரி ஒரு பெண் கொசுவானது அதன் வாழ்நாளில் மூன்று தடவைகள் முட்டைகளை இடுகின்றன.
நீர் பரப்புகளின் மேலே இடப்பட்ட முட்டைகள் 10 நாட்களில் லார்வா, அப்புரம் ப்யூபா வடிவம் பெற்று அடுத்த சில நாட்களில் ரெக்கை முளைத்த கொசுக்களாகின்றன.  ஒரு கொசுவின் வாழ்நாள் 2 மாதங்கள் சில வகைகளுக்கு ஆயுசு 3 மாதங்கள்.

பெண் கொசுக்கள் றெக்கையை நொடிக்கு 500 தடவைகள் வேகமாக அசைக்கின்றன. காற்றில் அவைகள்
ஏற்படுத்தும் ஒலியானது ஆண் கொசுக்களை கவர்கின்றன.  பறக்கும் வேகம் மணிக்கு  1.5 மைல்கள்.

8000 அடி உயரத்தில் இருக்கும் இமயமலைப் பகுதிகளில் கூட இவை வாழ்கின்றன.

அவைகள் அவற்றின் தலையில் உள்ள நுண் சென்சார் மயிர் கால்கள் மூலமாக மனிதனின் மூச்சு காற்றும் மற்றும் வியர்வை வாசனையை வைத்து துள்ளியமாக ரத்தம் உறிஞ்சும் பகுதியை கண்டுபிடிக்கின்றன அதுமட்டும் அல்ல வெப்ப அளவீடுகளைக் கொண்டும் டார்கெட்டை துரத்திப் பிடிக்கின்றன.
 அய்டீஸ் (Aedes) வகை கொசுக்கள் பகல் நேரத்தில் ரத்தம் உறிஞ்சுபவை. க்யூலெக்ஸ் (Culex) வகை இரவானதும் தன் வேலையை துவக்கும்.

(Tags : Mosquito, Mosquitos, கொசுக்கள், கொசு, நுளம்பு )
Download As PDF

Saturday, August 1, 2015

வேற்று மனிதர்களை விரும்பாத தீவு வாசிகள்...மர்மத்தீவு


வேற்று மனிதர்களை விரும்பாத தீவு வாசிகள்...மர்மத்தீவு
இந்த நூற்றாண்டிலும் வெளியுலக மனிதர்களை எந்த விதத்திலும் அனுமதிக்காத, சந்திக்க விரும்பாத, எத்தகைய தொழில் நுட்பத்தையும் மேம்பட்ட நாகரீகத்தை நெருங்க விடாத காட்டுவாசி மக்கள் இருக்கிறார்கள் என்பதே ஆச்சர்யமானது செய்திதான்.

வங்காள விரிகுடாவில் 572 தீவுகளை கொண்ட அந்தமான் நிகோபார்த் தீவுக்கூட்டங்களில் ஒன்று தான் "வடக்கு செண்டினல் தீவு " [North Sentinel Island]. இது மியான்மர் மற்றும் இந்தோனேசியாவிற்கு இடைப்பட்ட கடற்பகுதியில் உள்ளது.

இந்தியாவின் கட்டுப்பாட்டு கடற்பகுதியில் இருக்கும் இத்தீவோடு சேர்ந்த்து இன்னும் சில தீவுகளுக்கு யாரும் செல்லக்கூடாத பகுதி என்ற தடை போடப்பட்டுள்ளது.

செண்டினல் தீவு வாசிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த தீவில் அந்நியரை அனுமதிப்பதில்லை. மீறிச் செல்பவர்களை அவர்கள் விட்டு வைப்பதும் இல்லை அதாவது அந்த தீவில் நுழைபவர்களுக்கு அது " ஒருவழி பாதை" மட்டுமே திரும்பி வர முடியாது.

அப்படியானால் இதுவரை அத்தீவில் யாரும் நுழைய முயற்சிக்கவில்லையா ? அப்படி சொல்ல முடியாது பத்திரிக்கையாளர்கள், மீனவர்கள், அரசாங்க அதிகாரிகள்,மனித இனத்தைப் பற்றி ஆராய்சிசெய்பவர்கள் (anthropologists )..இப்படி அத்துமீறி நுழைபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் ஈட்டிகளுக்கும் அம்புகளுக்கும் பதில் சொல்ல முடியாது மரணிக்கத்தான் வேண்டும். அப்படித்தான் நடந்திருக்கு.


சுமார் 60000 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்க காட்டுவாசிகளுக்கும் இவர்களுக்கும் பாரம்பர்ய தொடர்பு இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இப்போது இவர்கள் 50 முதல் 400 பேர்கள் வரை இருக்கலாம் என்ற புள்ளி விவரம் சரியா எனத் தெரியவில்லை. 28 சதுரமைல்கள் கொண்ட இத்தீவினை முழுக்க முழுக்க காடுகள் சூழ்ந்து உள்ளது கடற் திட்டுகளும் பாசிவகைகளால் நிறைந்து காணப்படுகிறது. இம்மக்கள் விவசாயம் ஏது செய்வதில்லையாம் இயற்கை சார்ந்ததே (வேட்டையாடுவது மீன்பிடிப்பது, காட்டில் விளையும் பழங்கள், தாவரங்கள் இவர்கள் உணவு )

1880 ல் மோரிஸ் விடல் போர்ட்மேன் [British colonial administrator ] என்பவர் தலைமையில் படை பலத்துடன் இத்தீவில் நுழைந்து இருக்கிறார்கள் ஆனால்  இக் காட்டு வாசிகளை இவர்களால் பார்க்க முடிய வில்லை ஓரிரு நாட்களில் வயதான தம்பதி மற்றும் குழந்தைகளை போர்ட் ப்ளேயருக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். தம்பதியர் நோய் கண்டு இறந்து விட்டதால் அந்த குழந்தைகளை திரும்ப அத் தீவில் பரிசுப்பொருட்களோடு விட்டிருக்கிறார்கள்...அவர்கள் காட்டில் ஓடி ஒழிந்து விட்டனர். அதன் பிறகு யாரையும் காணாமல் போர்ட்மேன் குழு திரும்பி விட்டனராம்.
1967ல் இந்திய ஆய்வுக்குழு இத்தீவிற்கு சென்று தீவு வாசிகளை நெருங்க முடியாமல் திரும்பி இருக்கின்றனர்.

அடுத்து 1970ல் சென்ற குழுவினரும் விற்களால் துறத்தி அடிக்கப் பட்டனர். 1974 ல் ஒரு டாக்குமென்றி படக் குழுவினரின் டைரக்டருக்கு பரிசாக தொடையில் அம்பு புக அலறி அடித்து ஓடி வந்துவிட்டனர்.

இந்திய அரசின் ஒத்துழைப்புடன், எண்பது மற்றும் தொண்னூறுகளில் டி.என்.பண்டிட் ஆய்வு குழுவினர் இரண்டொரு தடவை சென்று சின்ன சின்ன வீட்டு உபயோகப் பொருட்களை உபகரணங்களை இத் தீவில் வைத்து விட்டு வந்து விட்டனர். ஆனாலும் அவர்களை அருகில் சந்திக்கவில்லையாம்.
 அதன் பிறகும் இதுவரையிலும் இத்தீவு வாசிகள் வெளியாட்களை தம் பக்கத்தில் அண்ட விடவில்லை.

2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியில் இத்தீவு வாசிகள் பலர் மாண்டிருக்களாம் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவி செய்யப் போன ஹெலிக்காப்டரையும் விரட்டினார்கள்...எந்த உதவியும் உபத்திரவமும் வேண்டாம் என
உறுதிகாட்டினார்கள்..



உலகில் நடக்கும் அநியாயம் அக்கிரமங்களை பார்ப்பதில் இருந்து அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டும் !!




Download As PDF

Thursday, May 7, 2015

சாப்பாட்டில் ரிஸ்க் எடுக்கும் ஜப்பானியர்கள்...



உணவே மருந்து எனச் சொல்கிறோம் நாம் சாப்பிடும் உணவு பொருட்களிலும் நஞ்சு இருக்கிறதே.

கண்டதை கற்றவன் பண்டிதன் ஆவான் கண்டதை தின்றவன் ?  என்று கேட்பார்கள்.


இப்போதெல்லாம் காளான்கள் பெரும்பாளானவர்கள் விரும்பி சாப்பிடும் பண்டம் ஆகிவிட்டது. காளான்கள் உடலுக்கு நல்லது தான்.

காட்டுக்காளான்கள் எனச் சொல்லப்படுகின்ற மரணத்தொப்பி (Death Cap),
அழிக்கும் தேவதைகள் ( Destroying Angels), கொடிய வலைநிழம்பி (Deadly Webcap ) இவை எல்லாம் நச்சுக்காளான்கள்.



மேற்கு ஆப்பிரிக்க, ஜமைக்காவிலே  அக்கி (அத்தி அல்ல) எனற பழம் இருக்கிறது. இது நச்சுடையது ஆனால் அதுவே நன்கு பழுத்து (சிவப்பு) வெடித்த பின்னால் உள்ளுக்குள் இருக்கும் மஞ்சள் சதைப்பகுதியை மட்டும் கவனமாக சாப்பிட வேண்டும். நல்ல சுவை உடையதாம்.
மற்ற பழங்களை சாப்பிடுவது போல் சாப்பிட்டால், இந்த பழத்தில் இருக்கும் நஞ்சு ஹைப்போகிளைசின் (hypoglycin)பாதிப்பால் வாந்தி பின் ஹோமா நிலைக்குப் போய் பின் இறந்து போய்விடவும் வாய்ப்பு உண்டாம். இன்னொரு
சுவையான  ( ? ! )தகவல் அக்கி ஜமைக்காவின் தேசியப் பழம்.

மனிதர்கள் எதைத்தான் விட்டு வைத்தார்கள். ஆமாம் பாம்புகளை சாப்பிடுவார்கள் தெரிந்தது தானே என்கிறீர்களா..?

பலாபழத்தில் முள் இருப்பதற்காக சாப்பிடாமல் விடுகிறோமா.. ஆனால் ஜப்பான் நாட்டில் கொடிய விசமுள்ள மீனை சமைத்து சாப்பிடுகிறார்கள்.  ஃபூகு  ( fugu ) எனும் மீன் கொடிய விசம் உடையது. சயனைடைக் காட்டிலும் 1200 மடங்கு விசத்தன்மை இதன் உடலில் இருக்கு.  இந்த விசம் ட்ரொடோடோக்சின் [  tetrodotoxin ]. ஒரு மீனின் விசம் 30 நபர்களை கொன்று விடும். ஃபூகு விலை அதிகமானாலும் சுவைக்காக உயிரை பணயம் வைத்து சாப்பிடுகிறார்கள்...ஜப்பானியர்.



அதெப்படி விச மீனை சாப்பிட முடியும் ? அந்த மீனின் சில பல (eyes, intestines, ovaries and liver) உறுப்புகளைத் தவிர்த்து மற்ற பாகங்கள் விசம் இல்லாதவை. அந்த பாகங்களை  பக்குவமாக எடுத்து மெலிதாக வெட்டி பல தடவை தண்ணீரில் கழுவி பின் சமைக்கிறார்கள்.  இதை எல்லோராலும் சமைத்து விட முடியாது அதற்கென்று 3 வருட படிப்பை முடித்து லைசென்ஸ் வாங்கியவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர்.  அரசின் அனுமதி பெற்ற நிறுவனமே உணவை தயாரிக்க முடியும். விசமுடைய பாகங்களை எரித்து விடுகிறார்கள்.  ஃபூகு மீனில் 40 வகைகள் இருக்கிறதாம்..ஜப்பானியர்கள் வருடத்தில் 10000 டண் மீன்களை தின்று தீர்க்கிறார்கள்.



சமைப்பதற்காக வெட்டி பக்குவப் படுத்தும் ஃபூகு ... விருப்பம் இருப்பவர்கள் இந்த காணொலியை பார்க்கலாம்.




Rhubarb எனப்படும் வரியாத்து கிழங்கு இதில் தண்டுப் பகுதியை சாப்பிடலாம் இலையை ஒதுக்கி விடவேண்டும்.

tuna, mackerel, bluefish , mahi-mahi இந்த மீன்களையும் ஃபூகு லிஸ்டில் சேர்த்துவிடலாம்.

 டியூனா எனும் மீனை கர்பினிகள் மற்றும் குழந்தைகள் சாப்பிடுவதை தவிற்க வேண்டுமாம். இந்த மீனில் hypoglycin ஹைபோக்ளைசின் நச்சு இருக்கிறது.  இதில் உள்ள மெர்குரி அளவு நரம்பு சம்பந்தமான எதிர் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்கிறார்கள்.

Download As PDF

Wednesday, April 29, 2015

மீசைக்கார வெளவால்களும் ;அதன் மூளையும்



அமெரிக்க யுனிவர்சிட்டியை [Georgetown University Medical Centre ]சேர்ந்த விஞ்ஞானிகள் வெளவால்களிடம் ஒரு ஆராய்சியை செய்து பார்த்தனர். இதற்கென அவர்கள் தேர்ந்தெடுத்த வகை மீசைக்கார வெளவால்கள் ( ! ) [moustached bats ]

வெளவால்கள் இரவில் வேட்டையாடும் உயிரினம்.


வெளவால்கள் பறக்கும் போது மீவொலி எழுப்பிய படியே பறக்கும் அதன் எதிரொலியை வைத்து எதிரில் இருப்பவைகளை அடையாளம் கண்டுகொண்டு அதன் மீது மோதாமல் பறக்கும். அது மட்டும் அல்ல எதிரில் உள்ளது தன் இரையா என்பதை அறிந்து கொள்ளும்.

வெளவால்களின் மூளைச் செயல்பாட்டை பற்றிய ஆய்வில் சில தகவல்களை தெரிந்து கொண்டார்கள். அதாவது மனிதனை போலவே வெளவால்கள் வலது இடது இரண்டு பக்க மூளையையும் ஒலி சமிஞ்சைகளை ஏற்படுத்த புரிந்து கொள்ள உபயோகிக்கிறது.

இதில் அதிசயம் ஒன்னும் இல்லியே டெபனிட்லி மூளைதானே இந்த செயலை செய்ய முடியும் என்கிறீர்களா ? மேலே வாசிக்க;

சப்தத்தை புரிந்து கொள்ள மனித மூளையின் செயல் பாடு.
---------------------------------------------------------------------------------------------

வேகமான சப்தங்களை வலது மூளையை விட இடது மூளையே சட்டென புரிந்து கொள்ளும். அதே சமயத்தில் குரலை வைத்து இன்னாரென புரிந்து கொள்ளும் வேலையை வலது மூளை செய்கிறது.  அதாவது ஹஸ்கி வாய்ஸை இன்னாருடையது என தெளிவு படுத்தும் வேலை வலதிற்கு.
மனிதன் மனிதனோடு ஒத்த குரங்குகளில் மேற்சொன்ன செயல்பாடு நிரூபிக்கப் பட்டு இருக்கு.

வெளவால்களில் இந்த ஒலி தொடர்பு வேலைகளை இடது மூளை பார்த்துக் கொள்கிறது. அதாவது ஒலியின் ப்ரீக்குவன்ஸி எப்படி இருந்தாலும் அதை இடது மூளைதான் முன்னின்று செய்கிறது.

எதிரொலியை (எக்கோவை  Echolocation ) கிரகிக்க வலது மூளையை பயன் படுத்துகிறது.

ஒலி எழுப்புவதும் ஒலியை உள்வாங்குதல் இந்த இரண்டையுமே வெளவால்கள் ஒரே சமையத்தில் செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.
மனிதர்களில் ஆண்கள் வெளியிடும் கூக்குரல் சப்தத்திற்கும்  பெண்கள் வெளியிடும் கூக்குரல் சப்தத்திற்கும் எப்படி வித்தியாசம் இருக்கோ அதே மாதிரித்தான் வெளவால்களும்.

மனிதர்களில் மொழியை உபயோகிப்பதில் பெண்கள் இரண்டு பக்க மூளைகளையும் பயன் படுத்துகிறார்கள்.  ஆண்கள் இதற்கு இடது பக்க மூளையை மட்டும் பயன்படுத்துகிறார்கள்.

சரி வெளவால்களிடம் இந்த ஒலி ஆய்வினால் என்ன பயன் என்றால், மனிதர்களிடம் பேச்சு குறைபாட்டை சரி செய்வதற்கு மற்றும் பேச்சு திறன் அற்றவர்கள் பேச நினைப்பதை கம்யூட்டர் உதவியோடு எளிதில் பேசுவது எதிர்காலத்தில் இன்னும் எளிதாக்கப்படலாம்.

Labels : மனித மூளை, வெளவால்,  brains, bats
Download As PDF

Saturday, February 28, 2015

தவளைகள் அழிந்தால் யார் கவலைப்படப் போகிறார்கள் ?


தவளைகள் சூழற் தகவமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினம்.

 தவளைகள் இயற்கை அழிவுக்கு உட்படுமேயானால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான தடிமனான கோடு எனச் சொல்லலாம்.

உலக அளவில் [ Chytridiomycosis** ] ஸைட்ரிடையோமைகோஸிஸ் எனும் வியாதியால் பாதிக்கப்பட்ட தவளைகளில் 200 வகைகள் சுத்தமாக அழிந்து போய் விட்டது. அதே போல 40 சதவீத   நீர் நில வாழ்வினங்கள் இதனால் பாதிக்கப்பட்டு அழிவு நிலை நோக்கி போய் கொண்டிருப்பதாக ஒரு கணக்கீடு செப்புகிறது.

மேற்கு மலைத் தொடர் காடுகளில் (பகுதிகளில்) மட்டும் சுமார் 217 வகையான  தவளை இனங்கள் உள்ளன. மேற் சொன்ன பங்கஸ் வகை நோயினால் இவைகள் பெரும் பாதிப்பு அடையவில்லை எனச்சொன்னாலும் துறைமுகப் பகுதிகளில் வாழும் நீர் நில நிலை வாழ்விகள் இத்தகைய பாதிப்புக்குள்ளாகின்றன என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

இந்த நோய் கண்ட தவளைகள் இரண்டு வாரங்களில் மரித்து விடும்.

2004 ன் படி IUCN அறிக்கையின் படி இந்தியாவில் 60 வகை நீர் நில வாழ்விகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன  (13 are Critically Endangered, 27 are Endangered and 20 are Vulnerable).



பொதுவாக தவளைகள் அழிவுக்கு வழி வகுப்பவை
1. சுற்றுப்புறத் தூய்மை கேடு,
2. காடுகளை அழித்தல்,
3. நீர் மாசு அதிகரித்தல்

**Chytridiomycosis is an emerging infectious disease of the amphibians caused by Batrachochytrium dendrobatidis a water borne zoospore producing fungi

report any mass death of frogs to the nearest forest department or write to zooreach@zooreach.org / keerthi@zooreach.org / herpinvert@gmail.com
Download As PDF

Friday, January 23, 2015

வற்றிப்போன கடல் !

1960 களில் அந்த கடலில் ஆண்டுக்கு 40 ஆயிரம் டன்கள் மீன்களை அள்ளி எடுத்தார்கள்.  அப்படிப்பட்ட நீர் பரப்பு வற்றிப் போனது ஏன்? உலக வெப்பமயமாதலினால் அது வற்றி போனதற்கு காரணமா ? என்றால் அதுவும் இல்லை பின் என்னதான் காரணமாக இருக்க முடியும் ? கடல் வற்றி விட்டதா ? தொடர்ந்து வாசியுங்கள்...


சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் மிச்சிகன் ஏரியை விடவும் நீர்பரப்பில் பெரிதாக இருந்தது அது. அது உலகத்தின் நான்காவது மிகப்பெரிய ஏரியாக இருந்தது. ஏரி என்பதை விடவும் அதை கடல் என்று சொல்லலாம் அந்த அளவு விரிந்து பரந்தது. தாஷ்கண்ட் நகரத்தில் இருந்து 400 மைல்கள் தொலைவில் இருந்தது. அமுதர்யா, ஸைர்தர்யா எனு இரண்டு ஆறுகள் ஆஃப்கனிஸ்தான், தஜ்கிஸ்தான் மற்றும் க்ரிஜிஸ்தான் மலைத் தொடர்களில் உருவாகி ஓடி வளம் கொடுத்து இந்த ஏரியில் சங்கமித்தன.

நிலப்பரப்பிற்குள் பெரிய தண்ணீர் தீவு போல இருந்ததாலோ என்னவோ இதற்கு ஏரல் கடல் என அழைத்தனர்.  (அவர்கள் மொழியில் ஏரல் = தீவு )
1100 குட்டித்தீவுகள் இதனுள் இருந்தன. அப்போது இதன் பரப்பளவு 68000 சதுர கிலோமீட்டர்கள்.

சோவியத்தின் பொருளாதார வல்லுநர்கள் ஒரு முடிவெடுத்தனர். அதாவது
மத்திய ஆசியாவின் வரண்ட நிலப்பரப்பை வளமாக்க வேண்டுமானால் அந்த பகுதியில் பருத்தி செடிகளை விளைவித்து பசுமையை வரவழைத்து பஞ்சத்தை பஞ்சாக பறக்க வைத்துவிடலாம் என்ற அபார முடிவெடுத்தனர். ஆனால் அதை செயல் படுத்திய விதத்தில் சொதப்பி விட்டனர். அமோக விளைச்சலை கொண்டுவர அதிக அளவில் வேதியல் மற்றும் உரங்களை பயன் படுத்தினர். மேற்சொன்ன இரண்டு ஆறுகளின் நீர் வளத்தை இதற்காக திருப்பி விட்டனர்.  ஏரலுக்கு வரும் நீரை வீழலுக்கு இறைத்தனர்.  நீர் வரத்து குறையத்தொடங்கியது. 1960ல் 4 மில்லியன் பாசனப் பரப்பு 1980ல் இரண்டு மடங்காக அதிகரித்தது. ஆறுகளின் 90 சதவீத தண்ணீர் பருத்தி பயிர் விளைவிப்பதற்காக உபயோகிக்கப் பட்டன.

image in 1989

1970ல் 6 அடிகள் நீர் மட்டம் குறைந்தது.  மட்டம் குறைய குறைய நீரின் உப்பளவு அதிகமானது. அத்தோடு இருந்தால் கூட ஏரல் ஒருவேளை பிழைத்திருக்கலாம். ஆனால் வேதியல் கழிவுகளை முழுக்க முழுக்க ஏரலில் கொட்டினர்.

ஒரு சில மீன் இனங்கள் மட்டுமே ஏரலில் தாக்கு பிடித்த நிலையில் 80 களின் ஆரம்பத்தில் சுத்தமாக அழிந்து போய்விட்டன. மீன் வளம் மட்டுமல்ல அதை சார்ந்து வாழ்ந்த பறவை இனங்களும் விலங்கினங்களும் காணாமல் போயின.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகளை எதிர்ப்பதற்காக பெரிய பெரிய போர் கப்பல்கள் இந்த ஏரலில் நங்கூர மிட்டிருந்தன.  அவைகள் மெல்ல மெல்ல கரை தட்டி மண்ணுக்குள் புதைந்தன.

1991ல் சோவியத் யூனியன் பிளவுபட்ட போது உஸ்பெகிஸ்தான், கஸக்ஸ்தான் கைகளுக்குள் வந்தது ஏரல் ஆனாலும் சோவியத்தின் விவசாய பார்முலாவை விடாமல் பின்பற்றி ஏரலுக்கு சாவு மணி அடித்தன. இதன் மொத்த நீர் பரப்பானது பத்தில் ஒன்றாக சுருங்கிப் போனது.

தண்ணீர் பரப்பு குறைய குறைய அதன் அடிவண்டலில் தடிமனாக படிந்து இருந்த வேதி படிமங்கள் சுழற்காற்றில் அப்பகுதி முழுக்க புளுதிக் காடாக மாற்றியது. இதன் பாதிப்பினால் 10 க்கு 1 குழந்தை ஒருவயதுக்கு முன்னால் மரணித்துப் போனது.

ஆரோக்கியமான சூழ்நிலையில் இருந்த பகுதியை பேராசையாலும் தவரான திட்டங்களாலும் மிதமிஞ்சிய வேதி உரங்களாலும் ”பிசாசுப் பகுதி “ ஆக மாற்றிவிட்டான் மனிதன்.

பின் எப்போதும் மீட்டெடுக்க முடியாத அதல பாதாளத்தில் புதைந்து போனது ஏரல் கடல்.

Images 2000 and 2014 (Naza)

As of June 1, 2010, 500,000 cubic meters of gas had been extracted from the region at a depth of 3 km

Label : Aral sea, ஏரல் கடல், ஆரல் கடல்,

Download As PDF

Tuesday, December 2, 2014

ஆர்டிக் கடற்பகுதியில் மறைந்துள்ள இரகசியம் !



ஆர்டிக் பெருங்கடல் பகுதி பனிபாறைகளால் சூழப்பட்டது. பருவ காலங்களுக்கு தகுந்த படி அதிகமாவதோ அல்லது குறைவதோ நிகழும். ஆயின் கடந்த காலங்களின் அதாவது 35 வருடங்களை கணக்கில் எடுத்து கொண்டால் அவற்றின் பரப்பளவானது 14 சதவீதம் குறைந்து விட்டதாக ஒரு (டேட்டா ) குறிப்பேடு தெரிவிக்கிறது.

ஆர்டிக் பகுதியில் தொடர்ந்த கண்காணிப்புகளும், ஆய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன.  மேலா பார்வையில் இவை மீன்வள ஆய்வாகவே தெரியப்படுத்தப் படுகின்றன.

சொல்லப்போனால்  கடற்படுகையின் வளங்களை பற்றின ஆய்வாகவே அவை கருதப்படுகின்றன.

இந்த வருடம் கனடா புதிதாக இரண்டு பெரிய ஆய்வு கப்பல்களை (Vessels) ஆர்டிக் கடற்படுகைகளை ஆய்வு செய்வதற்காக அமர்த்தி இருக்கிறது.  இம்மாதிரியான நடவடிக்கைகள் ஆக்கிரமிப்பு ரீதியாகவும், வணிக ரீதியாகவுமே உற்று நோக்கப் படுகின்றன. மேற்படி ஆர்டிக் கடற்படுகை பிரதேசங்களில் மறைந்து இருக்கக்கூடிய பெருமளவு எண்ணெய் வளங்களும், வாயுக்களையும் கைக்கொள்வது எப்படி என்பதான பிரதேச போட்டி இது என்று சொல்லலாம்.

2007 ல் ரஷ்யர்கள் குட்டி நீர்மூழ்கிகளை எடுத்துக்கொண்டு ஆர்டிக் பகுதிக்கு  போய் வடகோளம் எமது.. என்பதாக அவர்கள் நாட்டு கொடியியை அங்கு நட்டு வைத்ததார்கள்.


அப்போதிருந்தே ஆர்டிக் கடற்படுகை பிரதேசத்தில் “லொமோனோஸோவ் ரிட்ஜ்”(Lomonosov Ridge) என்ற பகுதி முக்கியமான அவதானிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. (படத்தில் இப்பகுதி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது )  இப்பகுதி முழுக்க தம் சொந்தப்பகுதி என சொந்தம் கொண்டாடியது ரஷ்யா.  ஆனால் அப்படி கருதமுடியாது என்று கீரின்லாந்தை தன் ஆளுமையில் வைத்திருக்கும் டென்மார்க் குரல் எழுப்பியது.  இத்தோடு கனடாவும் சேர்ந்து கொண்டது. தத்தம் நாட்டு புவியியல் பரப்பளவின் எல்லைகளின் படி ஒரே நாடு அப்பகுதியை சொந்தம் கொண்டாட முடியாது என்ற கோரிக்கையும் முன் வைக்கப் பட்டது. அது பற்றிய பஞ்சாயத்து ஒரு பக்கம் போய் கொண்டு இருக்கிறது.

அடுத்த பத்தாண்டுகளில் இப்பகுதி பிஸியான பகுதியாக மாறிப்போவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக தெரிந்தாலும் அதன் பின்னனியில் ஆக்கிரமிப்புகளினால் ஏற்படப்போகும் நிலவியல் மாற்றங்களும் சுற்று சூழல் பாதிப்புகளும் தாம் எமக்கு பூதாகரமாக தெரிகின்றன.

( நன்றி டேவிட் சுக்மேன் கட்டுரை தகவல்கள்...  )

Download As PDF

Wednesday, August 27, 2014

வைரஸ் கிருமிகளற்ற உலகம் சாத்தியமா ?



சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு (the World Health Organization  WHO)  அம்மை சாம்பிள்களை(மாதிரிகள்) ஒழித்து விடுங்கள்  ( ”to destroy the smallpox virus once and for all” ) என்ற அறிவிப்பை சப்தமில்லாமல் தெரிவித்தது.

மனிதர்களுக்கு நோய் வருகிறது அந்த நோய் கிருமிகளை ஆய்வு மையங்களில் எதுக்கு பாதுகாத்து வைக்கனும் ? அதற்கு உலக நாடுகள் சொல்லும் காரணம் திரும்ப அது வேறு வடிவில் தாக்கினால் அவற்றை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைக்கு அது அவசியம் என்பது.  இது வெளிப்படையாக சொல்லப் படும் கருத்து தான்.  ஆனால் உண்மையில் வைரஸ் கிருமிகளின் மாதிரிகளை பாதுகாத்து வைத்துக்கொள்வது ஒவ்வோர் நாடும் எதிரி நாட்டின் மேல் ஏவுவதற்குதான் என்பது மறைக்கப்பட்ட உண்மை.

வெள்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக சொல்லப்படும் சமீபத்திய உயிர் கொள்ளி நோய் “எபோலா” திட்டமிட்டு பரப்பப்பட்டு இருக்கலாம் யார் கண்டது ?

தடைசெய்யப்பட்ட மருந்து வகைகள் சர்வ சாதாரணமாக ஊடுருவி இருப்பதுவும் அத்தகைய ஒரு சதிகளில் ஒன்றுதான்.

80" களில் முற்றாக ஒழிக்கப்பட்டதாக சொல்லப்படும் சின்னம்மைமாதிரிகளை இதுவரை ஒழிக்காததுவும் எதிரி நாடு நம்நாட்டின் மேல் பிரயோகித்தால் என்ன செய்வது? இப்பிடியான வலுவான காரணங்களும் உண்டு.  உலக நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா (அப்போதைய) இதே காரணத்திற்காகத்தான் அந்த மாதிரிகளை அழிக்காமல் வைத்து இருந்தன.  அப்படியானால் அந்த நாடுகள் மட்டும் தான் மாதிரிகளை வைத்து இருந்தனவா என்றால் அதுவும் இல்லை பெரும் பாலான நாடுகள் அம்மாதிரியான வைரஸ் மாதிரிகளை சேமித்து வைத்து இருக்கின்றன.

இன்னும் சொல்லப் போனால் பலப் பல வைரஸ் மாதிரிகள் ஏதோவொரு காரணங்களுக்காக வைக்கப் பட்டிருக்கும்.  அதிகாரப்பூர்வமான ரெக்கார்டுகள் என்பது கண்கட்டு வித்தைதான்.


விஞ்ஞானிகள் சொல்வது ஒரு மனிதனின் டி.என்.ஏ மரபியல் கூறுகளை (GENETIC SEQUENCE) அடுத்த அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது [epigenetics !].  அதன் கட்டமைவுகள் மேம்பட்டு கொண்டே செல்கிறது.  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட டேட்டாவும் அதில் பதியப்பட்டிருக்க வேண்டுமல்லவா? என்று யோசித்தோமால அதற்கும் வாய்ப்பு இருக்கிறது.  உதாரணமாக எகிப்திய மம்மிகளின் உடல் திசுக்களில் இன்னமும் சின்னம்மை கிருமிகள் இருக்கின்றன என ஒரு ஆய்வறிக்கை சொல்லுகிறது. வைரஸ்கள் எவ்வளவு ஆண்டுகாலம் உயிர்ப்புத் தன்மையோடு இருக்கும் என்பதுவும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட விசயமாக இருக்கிறது. 

"smallpox"

ஒரு நோய் முற்றாக அழிக்கப்பட்டதாக சொல்லப்படுவதெல்லாம் ? என்ற கேள்வி எழுகிறது. ஆம் எந்த நோயும் முற்றாக ஒழிக்கப்படவில்லை அந்த கிருமிகள் ஏதோ ஒருவடிவில் ”மோன” நிலையில் இருக்கின்றன. வாழ்க்கையில் ஒரு சுழற்சி திரும்ப திரும்ப வருவது போல அவை மீண்டு எழுவதும் தவிற்க இயலாதது.

இன்னொன்றையும் நாம் கவனித்தில் கொண்டால் எவ்வளவுக்கெவ்வளவு நாம் தடுப்பு நடவடிக்கை எடுத்தாலும் அவ்வளவுக்கு அவ்வளவு ஏதோ ஒரு வடிவத்தில் வைரஸ்கள் தம்மை உருமாற்றிக்கொள்கிறதோ ? ( ! ) என்பதும் சிந்திக்கவேண்டிய விசயம்.




A sophisticated laboratory could resurrect smallpox right now. And at some point in the near future, anyone could. And if that is the case, then what would destroying the samples in these two labs in the US and Russia really accomplish? We might be able to destroy smallpox next year, but we won't be able to destroy it forever.
Download As PDF

Wednesday, July 30, 2014

மீன்கள் விசிலடிக்குமா ?

மீன்கள் சப்தம் எழுப்புமா ? 


மற்ற விலங்கினங்களை போல் அல்லாமல் மீன்களால் சப்தம் எழுப்ப
முடியும்.  மீன்களுக்கு வாயுப் பை [air bladder] என்ற மீச்சிறு உறுப்பு இருக்கு
இந்த காற்றுப்பையில் ரத்தத்தில் இருந்து வாயுக்களை நிரப்பி வைத்துக் கொள்ளும். இது அதன் மிதவை நிலையை தக்கவைத்துக் கொள்ள உபயோகப் படுத்திகொள்கிறது.

தண்ணீர் மேல் மட்டத்தில் சென்றும் வாயுவை நிரப்பி கொள்ளும். சில
மீன்கள் இந்த உறுப்பை கொண்டு சப்தம் செய்கிறது.   சில மீன்கள் பல் போன்ற
உறுப்புக்களை நற நற வென்று கடித்தும் சப்தம் ஏற்படுத்தும்.


(Oyster Toadfish ) தேரைமீன்கள் தம் இணையை அழைக்க விசில் (சீல்கை) சப்தம்
எழுப்புகிறது. இந்த சப்தத்தை மனிதர்களால் கேட்க முடியும்.

(mackerel utter )மேக்ரெல், drumfish டிரம் மீன் வகை மீன்கள் எழுப்பும் ஒலியை நீர் மேல்மட்டத்தில் கேட்டிருப்பதாக மீனவர்கள் சொல்கிறார்கள்.


[drumfish] டிரம் மீன் கள் நீரில் 60 ஆழத்தின் கீழ் இருந்து ஒலி ஏற்படுத்துகின்றன.

அவ்வளவுக்கு ஏன் நாம் வீடுகளில் வளர்க்கும் வண்ணமீன்களில் குறிப்பாக
தங்கமீன்கள் எழுப்பும் "பொளக்"  ஒலியை அவதானிக்கலாம்.

சரி மீன்களுக்கு காது உண்டா சப்தங்களை எப்படி கேட்கிறது?

கடலின் அடியில் சென்றுவரும் "டிரைவர்கள்" கடல் உள்ளே அமைதியாக
இருப்பதாக சொல்கிறார்கள்.  ஆனால் பல சப்தங்களை மனிதனால்
கேட்க முடிவதில்லை என்பதே உண்மை. மேலே சொன்னோம் மீன்கள்
சப்தம் எழுப்புவதாக அப்படி இருக்கும் போது சப்தங்களை கேட்க அவை
களுக்கு காதுகள் இருக்கின்றனவா?  தலைப்பகுதியில் இருந்து வால்வரை நீண்ட நீளமான நுணர் உறுப்புகள் மிக மெல்லிய உறுப்பு மூலம் சப்தங்களையும் அதிர்வுகளையும் அவைகள் உணர்ந்துகொள்கின்றன.


பூனை மீன்களால் [Catfish] எல்லாவித சப்தங்களையும் கேட்க முடியும் என்கிறார்கள். (படத்தில் இருப்பது)

இருட்டில் மீன்கள் ஒன்றை ஒன்று மோதாமல் நீந்துமா?

மீன்களின் செவுள்களில் (Gills )  இருந்து வால்வரை மெல்லிய புலன் உறுப்பு மற்ற மீன்கள் மீது மோதாமல் செல்லவும் எதிரிகளிடம் தற்காத்துகொள்ளவும் உதவுகிறது. இது மிக மெல்லிய அதிர்வலைகளை உடனுக்குடன் உணர்ந்துகொள்ளும். இரவில் எதிரே இருப்பது மீனா பாறையா என்பதை எல்லாம் இந்த நுணர் உறுப்பின் மூலம் அது அறிந்துகொள்ளும்.

(இருட்டில் எதிரே வருபவன் மீது மோதாமல் நம்மால்
போக முடியுமா? )

வலை இல்லாமல் கைகளால் மீன் பிடித்தல் 

(maori) நியூசிலாந்து குக் தீவின மக்கள் "மெளரி" அவர்களின் பாரம்பர்ய மீன்
பிடித்தல் வித்தியாசமானது.  தெளிந்த நீருக்கடியில் சலனமில்லாமல் இருந்தபடியே மீன்களை தடவி (கிச்சு கிச்சு மூட்டுவது போல) பின் அவற்றை வெறும் கைகளால் பிடிக்கிறார்கள்.


Download As PDF

Sunday, July 20, 2014

வெளிநாட்டில் வேட்டி அனுபவம் : கவிஞர் கண்ணதாசன் நினைவலைகள்

சமீபத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் மற்றும் இரு உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் வேட்டி உடுத்திச் சென்றதால் , கிளப்புக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பர்ய உடை மடுமல்ல தன் மான பிரச்சனையாக சட்ட சபை வரை விவாத பிரச்சனையானது வேட்டி. தொடர்ந்து கிளப்புகள் அனுமதி மறுப்பது முதல்வரின் கண்டனத்திற்கு உள்ளானது.


வெளிநாட்டில் வேட்டி கட்டி சென்ற கவிஞர் கண்ணதாசனின் அந்தக் கால சுவரஸ்ய பயண அனுபவத்தை , படித்ததில் இருந்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அதற்கு முன் சின்ன நகைச்சுவை காட்சிகள்.....

‪#‎தலீவரின்_மனைவி‬

ஏனுங்க சபைக்கு போறதா சொன்னீங்கன்னுதான் நாலஞ்சு வேட்டி எடுத்து வெட்சிருக்கேன்...மறக்காம எடுத்திட்டு போங்க. அப்புரம் துண்டக் கானோம் துணியக் கானோமினுட்டு கூவாதீக


‪#‎தலைவனும்_தொண்டனும்

தலைவரே ....உங்க வேட்டி??

அதா இப்ப முக்கியம் சண்டைல காணாம போறது சகஜம்பா...


#அரசியல் வாதி கணவனிடம்...மனைவி

"ஏனுங்க எங்கேங்க உங்க வேட்டி ?"

"அடியேய்..எத வேனா கேளு...வேட்டிய மட்டும் கேட்காத...ஓடுகாலி...ஓடுகாலி"

"வேட்டிஇல்லாம வந்திருக்கீங்களே எங்கேன்னு கேட்டா ஓடுகாலின்றீங்களா? நா அம்மா வூட்டுக்கு போறேன்"

"அய்யய்யோ...கிழிஞ்சது, அவங்க கிட்ட கேட்கப்போறியா? "

"கிழிஞ்சிடுச்சா முன்னமேயே சொல்றதுக்கென்ன"



கவிஞர் கண்ணதாசனின் வெளிநாட்டு பயண அனுபவம், முக்கியமாக வேட்டி அனுபவம் அதில் இருப்பதால் இந்த கட்டுரையை இங்கு பகிர்கிறேன். அந்தக் கால காட்டத்திற்கு நம்மையும் அழைத்து செல்கிறார், கவிஞர்.

சந்தித்தேன் சிந்தித்தேன்....கவிஞர் கண்ணதாசன் நூலில் இருந்து....



ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் நானும், மன்னை அம்பிகாபதியும், மெல்லிசை மன்னர் தம்பி விஸ்வநாதனும், பன்மொழிப் புலவர் தெ.பொ.மீ யும் தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தோம். எங்களில் மன்னை அம்பிகாபதி மட்டும் வேட்டி கட்டி, மேலே ஜிப்பா போட்டிருந்தார். அந்த வேட்டி காபூல் நகரத்துச் சிறுவர்களுக்கு வேடிக்கையாகத் தெரிந்தது. அவர்கள் கூட்டமாகக் கூடி அந்த வேட்டியை இழுத்துப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். அம்பிகாபதிக்கு கோபம் வந்துவிட்டது.

“நீங்கள்தானடா கோமாளிகள்” என்று அவர்களைத் தமிழில் திட்டினார்.

காபூலில் கேலியாகத் தெரிந்த வேட்டி, சோவியத் யூனியனில் துருக்மினிஸ்தான் தலைநகர் அஷ்காபாத்தில் பெரும் மரியாதைக்குரியதாயிருந்தது.

சின்னச் சின்னப் பெண்களெல்லாம் கூட அம்பிகாபதியின் கையைப் பிடித்துக் கொண்டு படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டார்கள்.

நல்ல வேளையாக நானும் வேட்டி கொண்டு போயிருந்தேன்.

துருக்மினிஸ்தானில் சீசன், அசல் பெங்களூர் மாதிரியே இருக்கும். மாஸ்கோவைப் போல் அங்கே பனி பெய்வதில்லை. லேசான வெய்யிலும், குளிர் காற்றும் இருக்கும். ஆகவே, நானும் வேட்டி கட்டிக் கொண்டு போட்டோவுக்கு நிற்க ஆரம்பித்தேன்.

இந்தோ சோவியத் கலாசாரக் கழகத்தின் தமிழகப் பிரிவுக்கு நான் துணைத் தலைவர். சோவியத் அழைப்பின் பேரில் நாங்கள் சென்றிருந்தோம்.

அஷ்காபாத்தில் நாங்கள் போய் இறங்கிய போது, காலை எட்டு மணி. விமானத்தின் கதவு திறக்கப் பட்டதும், வாத்தியங்கள் முழங்கின. படப் பிடிப்புக் காமிராக்கள் சுழன்றன. மாநில மந்திரிகளெல்லாம் வந்திருந்தார்கள்.

”அண்ணே! யாரோ மிகப் பிரபலமான ஒருவர் இந்த விமானத்தில் வந்திருப்பார் போலிருக்கிறது” என்ற படியே விமானத்தை விட்டுக் கீழே இறங்கினார் தம்பி விஸ்வநாதன்.

”நான் தான் அது! “ என்றார் அம்பிகாபதி.

அவர் சொன்னதிலும் தவறில்லை. வந்திருந்தவர்கள் எங்கள் கழுத்தில் மாலைகளைப் போட்டார்கள்.

லெனின் கிராடில் ‘செம்பியன்’ என்ற தமிழறிவு மிக்க ரஷ்யர் எங்கள் துணைக்கு வந்தார்.

லெனின் கிராடைச் சுற்றிப் பார்த்த போது அங்கேயும் அம்பிகாபதிக்குத் தான் சிறப்பான வரவேற்பிருந்தது.

இந்த வேட்டியையும் சட்டையையும் ரஷ்யர்கள் எப்படி மதிக்கிறார்கள் என்பதை அப்போதுதான் பார்த்தேன். ஆனால் மாஸ்கோவில் நிலமை வேறு. அங்கே அடுப்பையே தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டிய அளவுக்குக் குளிர். அங்கேயும் அம்பிகாபதி வேட்டி சட்டையோடுதான் காட்சியளித்தார்.

எனக்கு எங்கேயுமே இருப்புக் கொள்ளாது. அற்புதமான சர்க்கஸ். அதிலிருந்து பாதியிலே ஹோட்டலுக்குப் போக விரும்பினேன். தெ.பொ.மீ க்கு ரொம்ப வருத்தம். கூட வந்த பெண்மணி, “கார் வரத் தாமதமாகும்” என்றார்.

ஒரு கிலோமீட்டர் தொலைவு நடக்க வேண்டும்.

அம்பிகாபதியின் வேட்டியையும், சட்டையையும் பார்த்து மாஸ்கோ ஜனங்களெல்லாம் பரிதாபப் பட்டார்கள். துணைக்கு வந்த அம்மையார் தன் கோட்டுக்குள்ளேயே அம்பிகாபதியையும் திணித்துக் கொண்டு, பனி தாக்காதபடி அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டார்.

இருப்பினும், எனக்கும் அம்பிகாபதிக்கும் அதனால் பாதங்கள் பாளம் பாளமாக வெடித்துவிட்டன. காரணம் நாங்கள் பூட்ஸ் போடவில்லை.

நான் எந்த நாட்டிலும் எந்தப் பெண்ணைக் கண்டாலும் முத்தமிடுவேன். அம்பிகாபதி அதற்குத் தூபமிடுவார். ஒரு கூட்டுப் பண்ணையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற போது தெ.பொ.மீ க்கு கெட்ட கோபம் வந்துவிட்டது.

துருக்மினிஸ்தானில் ‘மாரே’ என்று ஓர் அற்புதமான ஊர். அங்கே அம்பிகாபதியோடு படம் பிடிக்க ஏக கிராக்கி. அந்த ஊரிலுள்ள எல்லோருமே கலைஞர்கள்.

தம்பி விஸ்வநாதனைப் பாடச் சொல்லிவிட்டு. நாங்கள் படத்துக்குப் ”போஸ்” கொடுத்தோம்.

எந்த ஊருக்குப் போனாலும் தெ.பொ.மீ யோடு அம்பிகாபதியைத் தங்க வைத்து விடுவோம். தெ.போ.மீ மிகவும் கண்டிப்பானவர். அம்பிகாபதி அவருக்குக் கட்டுப் பட்டு அவர் கூட இருப்பார். நானும் விஸ்வநாதனும் அறையில் பத்துப் பேரைக் கூட்டி வைத்துக் கொண்டு பாட்டுப் பாடுவோம்.

1967 கடைசியில் சோவியத் யூனியன் சுற்றுப் பயணம் முடித்துத் திரும்பினோம். அதுவரை காங்கிரஸ்காரராக இருந்த அம்பிகாபதி, சோவியத் விஜயம் முடிந்து திரும்பியதும் இந்தியக் கம்யூட்னிஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆனார். இப்போது, சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் அம்பிகாபதி என்னைச் சந்திக்க வந்தார்.
நேற்று (10-1-80) அவர் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். ஒரு மாதம் சிங்கப்பூர் மலேஷியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

சோவியத் யூனியனில் எந்த வரவேற்பிலும் அவர் பெயரை “அம்பிகாபதி” என்று உச்சரிப்பதில்லை. ‘அம்பிகபோதி’ என்றழைப்பார்கள்.

விஸ்வநாதனை “விஷ்வகாந்த்” என்பார்கள்.

தெ.பொ.மீ யை ரெக்டார். நான் கொண்ணதாசன்.

அதோ அந்த துருக்மினிஸ்தானில், கோரகும் கால்வாயில் நானும், தம்பி விஸ்வநாதனும், அம்பிகாபதியும் பிறரும் படகு சவாரி செய்த காலங்கள்.....

* * * * * * * * * * * * * * * * *

Download As PDF

Thursday, June 19, 2014

பழைய கற்கால டயட்டும் குகை மனிதர்களும்



உடல் பருமனாக உள்ளவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனை உடற்பயிற்சி, நடைபயிற்சி முக்கியமாக உணவு கட்டுப்பாடு (டயட்).  முதல் இரண்டை கடைபிடித்தாலும் மூன்றாவதை கட்டுப்படுத்த தான் பலரும் படாத பாடு படுகிறார்கள்.   (ஒரு சாண் வயிற்றிற்கு தானே இந்த பொழப்பு ! அதிலென்ன வஞ்சனை !!).
 
சரி இந்த டயட் அந்த கால குகை மனிதர்களிடம் இருந்திருக்குமா? என்று யோசித்தால் அப்ப அந்த குகை மனிதர்கள் உணவு பழக்கம் இப்போதிருக்கும் உணவு பழக்கம் போல் இருந்ததா ? என்றால் இல்லை (அப்ப ஏது பீட்சா ,பர்கர்,கேக்குகள்... !!)


பாலியோலித்திக் டயட்

பாலியோலித்திக் மனிதர்களின் உணவு என்றால் வேட்டையாடப்படும் விலங்குகள், பழங்கள், கொட்டைகள், அதாவது அம்மனிதர்கள் (2.5 million and 10,000 years ago ) டயட்டை கடைப்பிடித்து இருக்கிறார்களோ இல்லையோ அதுவே அவர்களின் உணவு பழக்கமாக இருந்து இருக்கிறது.
 மனிதனின் வளர்ச்சி கட்டம் அதன் பிறகே உணவு பழக்கங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது.

மனிதனின் மரபியல் கூறுகளும் மாற்றமடைய துவங்குகின்றன.  விவசாயம் செய்யத்துவங்கிய மனிதனின் உணவு பழக்கங்களும் மாறின.  தானியங்கள்,பால் அவனுடைய உணவில் இடம் பிடிக்கிறது.  அதுவரைக்கும் கூட பிரச்சனை இல்லை.  தானியங்களை மாவாக்கி பயன் படுத்த தொடங்கியதில் இருந்து அவன் செரிமான  அமைப்பு முற்றிலும் மாற்றம் பெறுகிறது.

அப்படியாயின் குகை மனிதன் உணவுப் பழங்கங்களை பொறுத்த மட்டில் உணவு கட்டுப்பாட்டில்(டயட்டில்) இருந்து இருக்கிறான்.
அடுத்து உடலுக்கு தேவையான சத்துக்களை பொருத்த அளவில் சரிவிகித உணவு முறை அவன் உணவுப் பழக்கத்தில் இருந்ததா ?
நவீன உணவுப் பழக்கத்தினால் அவன் உடல் உபாதைகளை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுவிட்டான்.

பரவலான நோய்நொடிகளான சக்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், புற்றுநோய் இவைகள் நம் உணவுகட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டவையா ? என்ற கேள்வி எழுவதில் வியப்பில்லை.
ஒன்றை நன்றாக கவனித்தோமானால் இளவயதிலேயே பால் பால் பொருட்டகளின்பால் நம் உடல் சுரப்பிகள் செரிவூட்டப் பட்டு விடுகின்றன.  சிலர் மட்டும் விதி விலக்காக பால் ஆடைகள் ஒத்துகொள்ளாது. தயிர் மோர் சேர்ந்து கொள்ள மாட்டார்கள். இந்த ஒவ்வாமை ஏன் என்று சிந்தித்தோமானால் அது குகை மனிதர்களிடம் கொண்டு சேர்க்கிறது.

இன்னொருபுரம் டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளும், பதப்படுத்தப்பட்ட பழரசங்களும், பதப்படுத்தப்பட்ட நான் வெஜ், ஜங்க் உணவு வகைகளும் உயர்தரமென்று எண்ணுவோர் அதிகமாகி வருகின்றனர்.
எனினும், கற்கால மனிதர்கள் போல் அல்லாமல் நமது மரபியல் கூறுகள், அமைவுகள் மாற்றப்பட்டு விட்டன என்பது மறுக்க இயலா உண்மைகள்.  நிச்சயமாக உணவு பழக்கத்தின் இன்றைய நிலை கவலை அளிப்பதாகவே உள்ளது.



Download As PDF

Saturday, June 14, 2014

டிசைனர் குழந்தைகள் !!



"டிசைனர் குழந்தை " (Designer Baby) இந்த பதம் விஞ்ஞானிகளால் சொல்லபடவில்லை மாறாக பத்திரிக்கையாளர்களால் சொல்லப்பட்டது.

ஒவ்வொருவருக்கும் தம் உடலைப் பற்றிய குறை இருக்கிறது...உயரமா பொறந்திட்டேன், குள்ளமா பொறந்திட்டேன், கருப்பா இருக்கேன், நம்ம கண்னு மட்டும் ஏன் ப்ளூவா இல்ல, இப்படி சொல்லிட்டே போலாம்.  அதெல்லாம் நாம நிர்ணயிக்க முடியாதப்பா... என்பதே பெரும்பாலவர்களின் பதிலாக இருக்கும்.

40 வயசுக்கு மேல இல்ல இல்ல பிறந்த குழந்தையே சக்கர வியாதியோட பிறக்குதே, டாக்டரின்  முதல் கேள்வியே  உங்க அப்பாக்கு சுகர் இருக்கா அம்மாக்கு சுகர் இருக்கா என்பதாக இருக்கும் இது ஒரு வியாதியே இல்லை என்றாலும் நம் உடம்பில் குறைபாடு ஏற்பட உணவு பழக்கம் தவிர்த்து
பெற்றோரிடமிருந்தே அதாவது பரம்பரை பரம்பரையாக ஜீனில் பதியப்பட்டு நமக்கு நம்முடைய மரபணுவில் அப்படியே தொடர்கிறது. இதற்கு தீர்வை விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் ஆய்வு செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதன் படி குழந்தை உருவாக்களில் (கருவிலேயே) மரபணுவை மாற்றி அமைக்க முடியுமா என்றால் முடியும் என்கிறது இன்றைய விஞ்ஞானம்.
நமக்கு பிடிச்ச காரை எப்படி தேரிந்தெடுக்கிறோமே அதுமாதிரி , எதிர்காலத்தில் நம் குழந்தை இப்படி பர்ஸ்னாலிட்டியாக,  இன்னின்ன பரம்பரை நோய் தாக்காத, நம்மமாதிரி ! (ஙே) அறிவு ஜீவியா பிறக்கனும் என்பதை தீர்மானிக்கலாமாம்.



அது படி வெளிப்படையாக தெரியாத தகவல்கள் (Genome kid) மரபியல் நிர்ணயக் குழந்தைகள் ஏற்கனவே பிறந்தாச்சு என்பதுதான்.
ஜீனோம் மேப்பிங் என்ற மரபணு ப்ளூ ப்ரிண்ட் 2003 ல் முழுமையாகியது. அதன்படி எந்த எந்த கூறு இன்னின்ன செயல்களை நிர்ணயம் செய்கிறது என்பதை வரையறுத்து இருக்காங்க. மேலும்  இத்தோட முடிஞ்சது என்று இல்லாமல் அந்த ஆய்வு தொடர்கிறது.  2010 ல் இந்த் ஜீன் மூலக்கூறுகளை மாற்றி அமைக்க முடியும் என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஊமையாகவோ, குள்ளர்களாகவோ, காதுகேட்காது, இருப்பவனின் குழந்தை பரம்பரை பரம்பரையாக அப்படியே பிறக்கனுமா என்ற அவர்களின் மனவருத்தம் போராட்ட அளவில் ஏற்பட இங்கிலாந்து அரசு இதற்கென சட்ட திருத்தங்களை செய்தது. (முழு விவரம் தெரியல)

 ஆங்கிலத்தில் InVitro Fertilisation (IVF) என்று சொல்றாங்க டெஸ்ட் டியூப் பேபி கேள்வி படுறோம் அந்த ப்ராசஸ்ல மரபணுவை திருத்தங்கள் செய்து விதைக்கிறார்கள். Pre-implantation Genetic Diagnosis (PGD) என்று இன்னொரு டெக்னாலஜியும் இருக்கு (selected embryos are implanted back into the mother's womb.)

இதில ஆபத்து என்னென்னா எல்லோரும் ஆண் குழந்தையே வேணும்னா என்ன செய்யறது.

டிசைனர் பேபி என்றால் என்ன  விளக்கம் ஆங்கிலத்தில் இருக்கு படித்து கொள்ளுங்கள்.

What is a designer baby?

Advanced reproductive technologies allow parents and doctors to screen embryos for genetic disorders and select healthy embryos.

In-vitro fertilisation or IVF

The fear is that in the future we may be able to use genetic technologies to modify embryos and choose desirable or cosmetic characteristics. Designer babies is a term used by journalists to describe this frightening scenario. It is not a term used by scientists.

Advanced reproductive techniques involve using InVitro Fertilisation or IVF to fertilise eggs with sperm in 'test-tubes' outside the mother's body in a laboratory. These techniques allow doctors and parents to reduce the chance that a child will be born with a genetic disorder. At the moment it is only legally possible to carry out two types of advanced reproductive technologies on humans. The first involves choosing the type of sperm that will fertilise an egg: this is used to determine the sex and the genes of the baby. The second technique screens embryos for a genetic disease: only selected embryos are implanted back into the mother's womb. This is called Pre-implantation Genetic Diagnosis (PGD).

Recently scientists have made rapid advances in our knowledge of the human genome and in our ability to modify and change genes. In the future we may be able to "cure" geneticy diseases in embryos by replacing faulty sections of DNA with healthy DNA. This is called germ line therapy and is carried out on an egg, sperm or a tiny fertilised embryo. Such therapy has successfully been done on animal embryos but at present it is illegal to do this in humans.

However, it is legal to modify the faulty genes in the cells of a grown child or an adult to cure diseases like cystic fibrosis - this is called body cell gene therapy.

Download As PDF

Tuesday, May 13, 2014

வொயுனிச் புத்தக மர்மம்



"வொயுனிச் கையெழுத்துப் பிரதியின் மர்ம குறிப்புகள்"


வொயுனிச்  ஆச்சர்யங்களை உள்ளடக்கிய 600 வருட பழமையான படங்களுடன் கூடிய கையெழுத்து புத்தகம். 240 பக்கங்கள் கொண்ட இதில், உள்ளவைகளை இன்னதென்றே புரிந்து கொள்ள முடியாத மர்மம் மிக மிக நீண்ட ஆண்டுகளாக  இருந்தது (இருந்து வருகிறது !)

பெட்ஃபோர்ட்ஷயர் பல்கலைகழகத்தை சேர்ந்த மொழியியல் பேராசிரியரால் இப் புத்தகத்தில் உள்ள சில குறிப்புகள் விடுவிக்கப்பட்டது என்று சொல்லலாம்.  (இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை !! ) .   2012 ல் பிபிசியில் வெளியான செய்தியின் பின்னே புத்தகத்திலுள்ளவற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

"வொயுனிச் கையெழுத்து புத்தகம்" என இது அழைக்கப்பட்டாலும் இதை எழுதியவர் யார் ?



இந்த புத்தக எழுத்தாளரின் பெயரை விடுவிக்கவே பல வருடங்கள் ஆகியிருக்கிறது.

இறுதியாக அறியப்படும் புத்தக பரிமாற்றத்தின் படி, இப்புத்தகம் வில்ஃப்ரெட் வொயுனிச் ( Wilfrid Voynich ) எனும் புத்தக வியாபாரியால் 1912 ல் விலைக்கு வாங்கப் பட்டது. ஒரு பெரிய டிரங் பெட்டியில் கொண்டு வரப்பட்ட புத்தகங்களில் ஒன்று இந்த புத்தகம்.  தென் இத்தாலியில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது.  மேலும் இத்தாலியின் மறுமலர்ச்சி காலத்தை சேர்ந்ததாக இது இருக்கும் என்பது ( 1400 ) கார்பன் சோதனையில் உறுதிப் படுத்தப் பட்டது.  வொயுனிச் மறைவு வரைக்கும் இப்புத்தகத்தின் எழுத்துக்களும் தகவல்களும் "அவரால்" தெரிந்து கொள்ள முடியவில்லை என்பது கூடுதல் தகவல்.


இந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இரகசியங்கள் இருக்கக்கூடும் ?


நட்சத்திரங்கள், கோள்களைப் பற்றிய தகவல்களும், தாவங்கள் பூக்கள் பற்றிய விவரங்களும், மனித உடல் கூறு (அனாடமி) சம்பந்தமான தகவல்களும், விண்ணியல், இந்த பிரபஞ்சம், பல்வேறு மூலிகைகள்,மருத்துவம்,மருந்துகள், ரெசிபிகள் பற்றிய தகவல்கள் இந்த புத்தகத்தில் உள்ளன.

இப்புத்தகத்தில் இருக்கும் சில விளக்கப்படங்கள் அனுமானதில் இல்லாமல் பார்த்து வரையப்பட்டிருக்கின்றன. உதாரணமாக மைக்ரோ பயாலாஜிகல் சம்பந்தமான படங்கள் (மைக்ராஸ்கோப்பில் மட்டுமே பார்க்கக்கூடிய இமேஜ்கள்) இந்த புத்தகத்தில் உள்ளன. அப்படியாயின் இப்புத்தகம் எழுதிய கால கட்டத்தில் மைக்ராஸ்கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததா ? கூட்டு நுண்ணோக்கியானது கலிலியோவால் 1625 ல் கண்டுபிடிக்கப்பட்டது.

There are other claims that the microscope and the telescope were invented by Roger Bacon in the 1200s but this is not substantiated. Giovanni Faber coined the name microscope for Galileo Galilei's compound microscope in 1625 (Galileo had called it the "occhiolino" or "little eye").

நம் கேளக்சியை பற்றிய தகவல்களும் இதில் இருக்கு.

                                                                   " inside book view "



                         "constellation of Taurus - ஏழு நட்சத்திர கூட்டம்  Pleiades cluster"

முதலாம் உலகப்போர் காலந்தொட்டு இப் புத்தக குறியீடுகளை விடுவிக்க பல ஆண்டுகள் பல்வேறு தரப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதியில் மொழியியல் வல்லுநர் (Stephen Bax) ஸ்டீபன் பக்ஸ் இப்புத்தக மர்மம் துலங்கப்பட்டதாக அறிவித்தார். முக்கியமாக அம்மொழி எழுத்துக்களை தம்மால் படிக்க முடிந்ததாக தெரிவித்தார். இவர் மட்டுமே புத்தக ரகசியத்தை விடுவித்தார் என்று சொல்வதற்கு இல்லை அவருக்கு முன் பல ஆராய்சியாளர்கள் புத்தக ரகசியத்தை விடுவிக்கப் பாடுபட்டனர்.

"க்ளிப்" என்று சொல்லக்கூடிய 1,70,000 குறியீட்டுப் படங்கள் இப்புத்தகத்தில் நிறைந்துள்ளது. (hieroglyphs )எகிப்திய உருவ (வடிவ) எழுத்துகளை கொண்டிருந்ததன. பல தகவல்களை உள்ளடக்கிய ஒரே குறியீடு ( "குழு குறியிடு") என்ற வகை பயன்படுத்தப் பட்டு உள்ளது.
[ உதாரணமாக  Centaurea என்ற மலர் " kantairon " என்ற பெயரால் ஒரு குறியீடாக குறிப்பிடப்பட்டுள்ளது. கவுண்டமணி - செந்தில்
ஜோக் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன் பூவை... புஷ்பம் என்றும் சொல்லலாம் புய்பம் என்றும் சொல்லலாம் !! ]

                                                   Centaurea என்ற மலர் ( kantairon)



இதிலுள்ள மலர்களை பற்றிய விவரங்களே இதை எழுதியவர் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று இருப்பார் என்பது தெளிவு. ஒரு மலர் என்றால் அதை மேலோட்டமாக மட்டும் அல்லாமல் அதன் குறுக்குவெட்டு தோற்றம் அதன் உள்ளீட்டின் செல் பகுப்பாய்வு வரை விவரங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.


இன்றைக்கு ப்ரூப் பார்த்து பிரின்ட் போடப்படும் புத்தகங்களே தப்பும் தவறுகளுமாயிருக்க கையால் எழுத்தப்பட்ட இந்த புத்தகத்தில் தவறுகள் இல்லை (அடித்தல் திருத்தல் கூட) என்பது ஆச்சர்யமானது.

இதில் பயன்படுத்தி இருக்கும் வண்ணங்கள் நிறம் மங்காமல் இருப்பது. பெரிய படங்கள் இப்புத்தகத்தில்  பல சீரான மடிப்புகளுடன் இணைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.

இன்னும் இப்புத்தகத்தின் இரகசியங்களை விடுவிக்க பல்வேறு துறை வல்லுநர்களின் உதவியும் தேவைப்படுவதாக குறிப்பிடுகிறார் ஸ்டீபன் பக்ஸ் ( Code remained uncracked  !! )

மேலும் சில தகவல்கள்


புத்தகத்தை எழுதியவர் (Roger Bacon )ரோஜர் பெகான் 

காலம் 1214 - 1292 பிரத்தியேகமான மென்மையான ஆட்டு தோல் பேப்பர் போல பயன்படுத்தப் பட்டுள்ளது.

1586 ல் ரோமானிய பேரரசர் ருடால்ஃப் II இதை ரோஜர் பெகான் இடம் இருந்து 600 ட்யூகேட்ஸ் (சுமார் 2 லட்சம் பவுண்டுகள் அப்போதைய மதிப்பு ?? ) கொடுத்து பெற்றுக்கொண்டார்.

1912 ல் நியூயார்க்கை சேர்ந்த புத்தக டீலர்  வில்ஃப்ரெட் வொயுனிச்  கைக்கு வந்தது.

அதன் பின் இத்தாலிய புத்தக காப்பகத்தில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.






1921 ல் பென்சில்வேனியா பல்கலைகழக பேராசிரியர் இப்புத்தகம் வேற்று மொழியில் இருந்து மொழிபெயர்க்கப் பெற்ற பக்கங்களும் படங்களும் இருப்பதாக கண்டறிந்து சொன்னார்.

1978 ல் இப்புத்தகத்தில் இருந்து போட்டோ நகல் வடிவில் The Voynich Manuscript: An Elegant Enigma எனும் பெயரில் Mary D’Imperio என்பவரால் (அல்லது குழுமத்தால்)  பிரதி உருவாக்கப்பட்டது

2013 ல் டாக்டர் ரக் ( Dr. Gordon Rugg of Keele University ) என்பவர் புத்தகம் பற்றிய தனது ஆய்வுகளை வெளியிட்டார்.




Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)