Followers

Showing posts with label ஜி.டி.நாயுடு. Show all posts
Showing posts with label ஜி.டி.நாயுடு. Show all posts

Thursday, August 1, 2013

இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு வாழ்க்கை சம்பவங்கள் (இறுதி பகுதி)

விளைச்சல் விநோதம்

துவரை,வாழை,ஆரஞ்சு,பப்பாளி இவைகளில் இஞ்சக்சன் ஊட்ட மருந்து முறையில் பல புதிய கண்டுபிடிப்புகளை செய்தார்.  (குட்டை ரக) விதையில்லா ஆரஞ்சு, பப்பாளி இன்றைக்கும் விவசாயிகள் மத்தியில் ஒரு ஆச்சர்யமான விளைச்சல்.

வாழைப்பழம் போல் ஆரஞ்சை தோலுரித்து அப்படியே சுவைக்கலாம்(விதை இல்லை)
திருமதி.லக்ஷ்மிபாய் அம்பேத்கர்,திரு.அம்பேத்கர்,திரு.ஜி.டி.நாயுடு

அவருடைய கோபால் பாக் இல்லத்தில் 18-1/2 அடி உயர சோளச்செடி 26 கிளைகளுடன் 39 கதிர்கள் உருவாக்கி அசத்தினார். 11 அடி உயரம் வளர்ந்த ராட்சச பருத்தி செடி 24 ராத்தல் பருத்தியை கொடுத்தது. ஜெர்மானியர் இதற்கு “நாயுடு காட்டன் “ என்று பெயர் வைத்தனர். இந்த டெக்னாலஜியை ரகசியமாக வைத்திருந்தார் ஆனால் ஒரு கட்டத்தில் அமெரிக்க பல்கலைக் கழக நண்பருக்கு தொழில் ரகசியத்தை சொல்லி விட்டார். நினைத்திருந்தால் பெருந் தொகைக்கு அந்த இரகசியத்தை விற்றிருக்கலாம்.

பின்புலத்தில் 15 அடி உயர தினை மற்றும் 11 அடி உயர பருத்தி செடி

ஒரு துவரை செடி ஆறடி உயரமும் எட்டு அவுன்ஸ் துவரையும் கொடுக்கும் ஆனால் நாயுடு வளர்த்த செடி ஒரு மரமாக வே வளர்ந்தது அது 65 அவுன்ஸ் துவரை கொடுத்தது.

ராட்சச செடிகளை பார்த்து பிரமித்த சர்.சி.வி.ராமன் இது "தாவரவியல் விநோதம் (Botanic marvels) " என்று குறிப்பிட்டார்.

"மினி கார்"

இந்தியாவிலேயே முதன் முதல் எலெக்ட்ரிக் மோட்டார் உற்பத்தி தொழிற்சாலை இவரால் ஆரம்பிக்கப்பட்டது(நேஷனல் எலக்ட்ரிக் ஒர்க்ஸ்).  பல தொழில் ஸ்தாபனங்கள் இவரை பின்பற்றின. தற்போது வரைக்கும் கோவையின் மோட்டார் பம்பு செட்டுகளுக்கு வடநாட்டில் கிராக்கி உண்டு முக்கிய காரணம் அதன் உழைப்பு மற்றும் தரம்.

அரசாங்க அனுமதி அப்போது மறுக்கப்பட்டதால் வெளிநாட்டு கம்பெனிகளுடனான ஒப்பந்தங்களை இவர் நிறைவேற்ற முடியாமல் போனது. அப்போதே நானோ கார் ரகங்கள் (டாட்டா நானோ), அதிக மைல் ஓடக்கூடிய டயர்கள். மெசின் டூல்கள், ரேடியோ இப்படி பலதும் அடங்கும். ஆட்டோமொபைல் சம்பந்தமாக இங்கிலாந்தில் இருந்து இங்கு வந்து இவரிடம் குறிப்பு எடுத்து கொண்டு போனார்கள்.

தற்போதும் சொல்லப்படும் ஒரு கருத்து இந்நாடு ஒரு ஜீனியஸை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை.


முனிசிபல் தேர்தலில் இருந்து பாராளுமன்ற தேர்தல் வரை போட்டியிட்டார். காமராஜரை எதிர்த்து போட்டியிட்டவர் தேர்தல் முடிவு அறிவிக்கப் பட்டபின் நண்பருக்கு அனுப்பிய தந்தி “சக்ஸஸ்புல் டிபீட் இன் எலெக்‌ஷன்”
எதிர்த்து நிற்பவருக்கே ஓட்டு போடுங்கள் என்றால் இவர் எப்படி ஜெயிப்பது? அப்படிபட்ட வித்தியாசமான மனிதர்.

பல கருவிகளுக்கு இவர் பேடண்ட் உரிமை கோரவில்லை.

1948 லேயே பூமிக்கடியில் எலெக்ரிக் வயர்கள் (கன்சீல்ட்) இணைப்பு கொண்ட கட்டிடம் இன்றும் கண்காட்சியாக உள்ளது.

விருந்தின் முதல் சாப்பாடு இவருக்கே பரிமாரப்பட வேண்டும் ருசி இல்லாத உணவு விருந்தினருக்கு கொடுக்கப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு.

கண்டுபிடிப்புகள் :

நுணுக்கமாக அளவிடும் கருவி

இரும்பு சட்டத்தில் உள்ள நசுக்கல்களையும், வெடிப்புகளையும் கண்டறியும் கருவி (magno flux testing unit)

விநோத உருவம் காட்டும் கண்ணாடி பிளேட்டுகள்

மோட்டாரின் அதிர்வை சோதிக்கும் இயந்திரம் (auto vibrator testing machine)

காசை போட்டதும் பாடும் தானியங்கி இயந்திரம் (slot singing machine)

ஆரஞ்சு பிழியும் கருவி

மண்ணென்னையில் ஓடும் மின் விசிறி

''1952 ல் 70 ரூபாய்க்கு ரேடியோ''

கேமரா லென்ஸ் டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர்

எடிசன் செய்து பார்க்க முயன்ற ஒரு கருவி  “வோட் ரெக்கார்டிங் மெசின்” அப்படி ஒரு கருவியை நாயுடு உருவாக்கிக் காட்டினார். இது தலையிட்டு கெடுக்க முடியாத (tamper-proof) பாதுகாப்பு தன்மை கொண்டது.

ஒரு அங்குலத்தில் இருநூறில் ஒரு பாகம் (1/200) அளவுள்ள மெல்லிய பிளேடு. இதற்கு நார்வே நாட்டு உருக்கு பயன்படுத்தப் பட்டது. இதை கொண்டு ஓர் ஆண்டிற்கு சேவ் செய்து கொள்ளலாம். நார்வே நாட்டு உருக்கை தருவிக்க அரசு அனுமதி தரவில்லை.

கையடக்க எலெக்ட்ரிக் ரேஸர்

நீரிழிவு நோய்க்கு ஒரு மருந்து

இது போல எண்பதிற்கு அதிகமான கண்டுபிடிப்புகள்.

டீசல் எஞ்சின், கார், ரேடியோ தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் நிறுவ ஆசைப்பட்டார். அரசின் அனுமதி மறுக்கப்பட்டதால் அப்படியே கைவிடப்பட்டன.


பல்துறை வித்தகர் ஜீ.டி நாயுடு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.




இவரின் கோவை அருங்காட்சியகத்தில் 1930 ' நாற்பதுகளில் பயன் படுத்த  பட்ட எலக்ட்ரிக்,எலெக்ட்ரானிக்,கம்யூட்டர்கள்,போன்கள், கேமராக்கள், ப்ரொஜெக்சன் டி.விக்கள்,கம்யூட்டர்கள், பிரிண்டர்கள், டைப்ரைட்டர்கள், கார்கள்,(all in one) இயந்திரங்கள்...இன்னும் பல்வேறு பொருட்கள் இவரின் கலெக்சனில் உள்ளது நம்மை பிரமிக்க வைக்கிறது. நேரில் பார்க்க முடியாதவர்கள் சிலவற்றை இந்த லிங்கில் பார்த்து ரசிக்கலாம்.


தொடர்புடைய பதிவுகள்: பகுதி 1, பகுதி 2

source of book : உழைப்பால் உயர்ந்த ஜி.டி.நாயுடு by மெர்வின் (1985)
source of some photos: http://site4preview.in/gm/index.php   
Download As PDF

Tuesday, July 30, 2013

இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு வாழ்க்கை சம்பவங்கள் (பகுதி 2 )

தம் கண்டுபிடிப்புகளையே உடைத்தெறிந்த‌ தீரன்

ஒருசமயம் வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்களை கொண்டுவந்த போது ரூ.80,000/-  வரி போடப்பட்டது. இதை எதிர்த்து அரசுடன் போராடினார். வசூலித்த வரி மிக அதிகம் என்றும் இல்லையெனில் அந்த மிஷின்களை உடைக்கிறேன் என்றார். ஆனால் எந்தவித பிரியோசனமும் இல்லை.

சென்னையில் அத்தனை இயந்திரப்பொருள்களையும் கண்காட்சி வைத்தார். தன் கருத்துக்களை முன்வைத்து உடைப்பதாக சொன்னார். கூட்டத்திற்கு வந்திருந்த ராஜிலு நாயுடு, காமராஜ், டாக்டர் சுப்பராயன் இவர்களெல்லோரும் அப்படி செய்யவேண்டாம் என வற்புறுத்தினர்.  அப்போது, உடைக்கும் எண்ணத்தை கைவிட்டார்

ஆனால் இயந்திரங்களை உடைக்கும் எண்ணம் அவர் உள்ளத்தை குடைந்து கொண்டே இருந்தது.

இன்னொரு சமயத்தில் இதே போன்ற கண்காட்சியில் அவர் திட்டமிட்ட படி இயந்திரங்களை உடைத்தார். கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கப் பட்ட உண்மைகளை, பொருளை உடைப்பது என்பது எந்த ஒரு விஞ்ஞானிக்கும் இயலாத செயல். ஆக்கம் அழிவிற்கே என்ற சித்தாந்தத்தை உறுதிப்படுத்தினார்.

தன்னுடைய கண்டுபிடிப்புகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வில்லையே என்ற ஆதங்கத்தின் விளைவே இது என்றாலும் அரசாங்கத்தை எதிர்க்கும் மனோபாவம் அவருக்கு இருந்தது அதை வெளிப்படையாக காட்டி போராடியவர் ஜி.டி.நாயுடு. 


பெரியாருடன்..

ஒரே அறையில் நான்கு பெண்கள் 

புத்தாண்டு தினத்தில் சிகாகோ நகரில் எல்லாப்பகுதிகளிலும் ஒரே கொண்டாட்டமாக இருந்தது. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துவிட்டு தன் அறைக்கு திரும்பினார். அவர் தங்கியிருந்த அறைக்கு நான்கு பெண்கள் குடி போதையில் வந்து தொந்தரவு செய்தனர். அவர்களை வெளியே தள்ளி கதவை சாத்தினார். ஆனால் மீண்டும் ஜாமத்தில் வந்து ஏதேதோ பிதற்றி அவர் அறையில் வலுகட்டாயமாக நுழைந்து அங்கேயே தூங்கி விட்டனர். தூக்கம் வராமல் இரவு முழுவதும் விழித்திருந்தார். மறுநாள் காலை தெளிந்து தவறுக்கு மன்னிப்பு கேட்டனர்.

பிற்பாடு அவர்களில் ஒருத்தி அவரை மணந்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்தாள். இந்தியரின் பழக்க வழக்கம் வேறு என சொல்லி மறுத்துவிட்டார்.

அதே போல ஜெர்மனி தொழிற்சாலையில் இருந்த ஒரு பணக்காரப் பெண்மனி  மூன்றாவதாக இவரை மணக்க விருப்பப்பட்டார்.  அந்த வெளிநாட்டு பெண்கள் "இந்திய கணவர்கள் அன்பானவர்கள்..பண்பானவர்கள் " என நினைத்திருக்கலாம்.  இந்த பெண்மனியின் விருப்பத்திற்கும் அன்புடன் மறுத்து விட்டார்.

நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனுடன்



கழுத்தில் மாலையுடன் இருப்பவர் சர்.ஆர்தர் ஹோப் அருகில் ஜி.டி.நாயுடு
அப்போது துவக்கப் பட்ட ஆர்தர் ஹோப் பாலிடெக்னிக் பின்னாளில் கோவை அரசினர் தொழில் நுட்பக் கல்லூரி ஆனது. இந்த கல்வி நிலையத்திற்காக கட்டிடங்கள் மற்றும் பொருள் உதவிகள் பல செய்தவர் ஜி.டி.நாயுடு.

புத்தகப் பித்தர்

நாயுடுவுக்கு புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். வெளிநாட்டு பத்திரிக்கைகள் படிப்பார் தேவையான தகவல்களை குறிப்பு எடுத்து கொள்வார். நூல்களை போல் வீட்டை அலங்கரிக்கும் அழகான பொருள் இல்லை என்பது அவர் கருத்து. படிப்பதற்காகவே ரயில் பயணங்கள் போவார். ஒருசமயத்தில் 80 ஆயிரம் மதிப்புள்ள 30,000 நூல்கள் இருந்தது. புத்தகங்களையும் பத்தாயிரம் ரூபாய் நன்கொடையையும் கோவை நகராட்சிக்கு கொடுத்தார். (புத்தகங்களை அவர்கள் வாங்கி கொண்டார்களா என்பது தெரியவில்லை)   

இளவயதில் இவர் பாட புத்தகங்களை வெறுத்தவர். படிப்பின் மேல் நாட்டம் இல்லாதவர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

அரசுக்கு அநியாய வரி கட்டுவதை எதிர்த்த அவர் கல்விக்காகவும் தொழில் அபிவிருத்திக்காகவும் நன்கொடை அளித்தார். போர்காலத்தில் அரசுக்கு யுத்த நிதியும், யுத்த நிதி பத்திரங்களில் முதலீடும் செய்தார்.

கோவையில் தொழிற்கல்வி நிலையங்கள் ஏற்படுத்தி நடத்துவதில் இவர் முன்னோடி. குறுகிய காலங்களில் (short term certificate course) படித்து முடிக்கும் தொழில் கல்வி முறையை புகுத்தினார் .தனது மகன்(கோபால்) அவர்களுக்கும் தொழிற் கல்வியையே படிக்க வைத்தார். தொழிற்கல்வி ஒன்று தான் இந்தியா முன்னேற வழிவகுக்கும் என்பதோடு அதை செயலிலும் நிறுபித்தார்.

இன்னும் பல சுவாரசிய தகவல்களுடன் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள் :

இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு வாழ்க்கை சம்பவங்கள் (பகுதி 1 )

விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்களின் பார்வையில் சர் எம்.விஸ்வேஸ்வரய்யா 



Download As PDF

Saturday, July 27, 2013

இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு வாழ்க்கை சம்பவங்கள் (பகுதி 1 )


பிறக்கும் போதே யாரும் முதலாளியாகவோ, பேரறிஞனராகவோ பிறப்பதில்லை.  தங்களுடைய சுய முயற்சி, சிந்திக்கும் ஆற்றல், அயராத உழைப்பு, காலத்தின் ஒத்துழைப்பு இவைகளினால் தங்களுடைய தகுதியை உயர்த்திக்கொள்ள முடியும் என்பதற்கு இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயுடு சரியான உதாரணம். கோவையின் தொழில் உற்பத்தி நிறுவனங்கள் உருவாக ஒரு முக்கிய ஆளுமை ஜி.டி நாயுடு அவர்கள்.  உலக அளவில் கோவையின் பெருமையை முன் நிறுத்தியவர். அவர் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் நமக்கு அனுபவப் பாடங்கள்.  

விஞ்ஞானி சர்.சி.வி. ராமன் மனம் திறந்த வார்த்தைகள்  “கோவை வாசிகள், தங்களிடையே கல்வியிலும் இளைஞரிடமும் மிகுந்த அக்கறை கொண்டுடிருக்கும் நாயுடுவை கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப் பட்ட மனிதருடன் வசிக்க எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும்”

புரோகிதர் இல்லாமல் கலியாணமா ?

கல்யாணத்திற்கு எல்லோரும் வந்தாச்சு, எல்லாமும் தயார். புதுப் பொண்ணும்(செல்லம்மாள்) காத்திருக்கிறார் மாப்பிள்ளையான ஜி.டி நாயுடுவை காண வில்லை. நாலப்புறமும் தேடுறாங்க, கடைசில தோட்டத்தில இருக்காரு.  மாப்பிள்ளைக்கு என்ன குறை?என்ன பிரச்சினை? 

“புரோகிதர் தேவை இல்லை, சடங்கு சம்பிரதாயம் எல்லாம் தேவை இல்ல, அம்மி மிதிச்சு, அருந்ததி பார்பதெல்லாம் முடியாது, சரின்னா சொல்லுங்க கல்யாணம் செஞ்சுக்கறேன்” என்றார். 

அவரின் விருப்படியே அந்த சீர்திருத்தக் கல்யாணம் நடந்தது.

பின்னாளில் அவரின் இரண்டு பெண்களுக்கும் இது போன்றே சீர்திருத்த கல்யாணம் நடந்தது.

பட்டணத்திற்கு சென்ற கிராமத்தான்.

கலங்கல் தோட்டத்தின் வழியாக ஒருநாள், பட்..பட், பட பட வென இரைச்சலுடன் மோட்டார் சைகிளில் வெள்ளைக்கார துரை (லங்காஷியர்) அந்த கிராமத்திற்கு வந்தார். அவருக்கு இரண்டு அதிசயங்கள் ஒன்று வெள்ளை துரை இன்னொன்று அந்த மோட்டார் சைக்கிள்.  திரும்ப செல்லும் போது மோட்டார் சைக்கிள் தகராறு ஏற்பட சரி செய்ய சிறுவன் ஜீ.டி.நாயுடுவிடம் மண்ணெண்னையும் துணியும் கேட்டார், துரை.  

கொடுத்துவிட்டு உன்னிப்பாக துரை சரி செய்வதை கவனித்தார். அவரின் மோட்டார் சைக்கிள் ஆசை தான் ,பின்னாளில் அவரை மோட்டார் கம்பெனியின் முதலாளி ஆக்கியது.

அவருக்கு 20 வயதிருக்கும் போது கோவை பட்டணத்திற்கு வருகிறார். ரயில் செல்வதை நடுக்கத்தோடு.. கண் இமைக்காமல் கவனித்தார். கையில் காசில்லாத நிலையில் நடந்து வந்த அலுப்பினால் பிளாட்பாரத்திலேயே தூங்கி எழுந்தார். ஒரு ஓட்டலில் 12 ரூபாய் மாத சம்பளத்தில் சர்வர் வேலை கிடைத்தது.

அவர் தேடி வந்த அதே வெள்ளை துரை செட்டில்மெண்ட் ஆபீசராக இருந்தார். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை அவினாசி சாலையில் ஓட்ட கற்றுக்கொண்டார். பல மாதங்கள் அல்லும் பகலும் வேலை செய்து அவரிடம் 200 ரூபாய் கொடுத்து அந்த மோட்டார் சைகிளை சொந்தமாக்கிக் கொண்டார்.  அந்த மோட்டார் சைக்கிளை பிரித்து பொருத்தும் திறமை அவருக்கு இருந்தது.

தொழிலாளி முதலாளியானார்




G. D. Naidu (Gopalaswamy Doraiswamy Naidu) (Birth: 1893 - died: 1974) 
உருவ ஓவியம்:  மாருதி


கோவை மற்றும் திருப்பூரில் பஞ்சு வியாபாரம் செய்த காசெல்லாம் பம்பாய் வியாபாரத்தில் இழந்தார். செய்வதறியாது கோவை வந்த அவர் ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனியில் மெக்கானிக் வேலைக்கு விண்ணப்பித்தார்.   ஸ்டேன்ஸ் துரை ரப்பர், தேயிலை, காஃபி எஸ்டேட்டுகளுக்கு சொந்தக்காரர்.  இவரை மெக்கானிக்காக சேர்த்துக்கொள்ள விருப்பப் படாத துரை அவரிடம் ஒரு ஒப்பந்தம் வைத்துக் கொண்டார்.

 தம்மிடம் இருக்கும் ஒரு பஸ்ஸை அவருக்கு கடனாக அளிப்பதாகவும் தினமும் வசூல் ஆகும் தொகையை கொண்டு வந்து தந்துவிட வேண்டும் என்பது அந்த ஒப்பந்தம்.  அந்த பஸ் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் ஓடியது அவரே முதலாளி அவரே தொழிலாளி.  அவரது தேவைகளை சுருக்கிக்கொண்டார்.  ஒருநாளைய உணவு இரண்டு வாழைப்பழமும் அரைக்கால் படி பாலுமே.


பின்னாளில் இந்த பஸ் சர்வீஸ் 2500 தொழிலாளர்களுடன் “ யுனைடெட் மோட்டார் சர்வீஸ்(UMS)” என்ற பெரிய நிறுவனமாக உருவெடுத்தது.  டிக்கெட்டுக்களை கொடுக்க ஒரு இயந்திரம் இவரே கண்டறிந்து பயன்படுத்தினார்.

பணியாளர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க மாறுவேடத்திலும் செல்வார். பணியாளர்களின் மேல் அக்கரை கொண்டவர்.  அவர்களுக்கு நல்ல பல நலத்திட்டங்களை செயல் படுத்தினார். போனஸ் என்ற ஒரு சலுகையை இவர் தான் ஆரம்பித்து வைத்தார் எனவும் சொல்கிறார்கள். அவரிடம் 640 பூட்டுக்களை திறக்கக்கூடிய மாஸ்டர் கீ இருந்தது அதை பயன் படுத்தி அவரின் பல நிறுவனங்களின் கதவுகளை எளிதாக எப்போது வேண்டுமானாலும் திறந்து பயன் படுத்துவார்.

தன் அறையில் இருந்த படியே தொழிற்சாலையில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்கும் இரகசிய சாதனம் அவரிடம் இருந்தது. கண்டிப்பு மிகுந்தவர் குற்றம் செய்த தொழிலாளிக்கு ஒரு சிறிய சீட்டில் “வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டீர்கள்” என எழுதி கொடுத்துவிடுவார்.

அலுவலகத்தில்,அலங்கோலமாக கிடந்த டேபிலில் காகிதங்கள் மற்றும் பைல்களை அடுக்கி வைத்து ஒரு துண்டு காகிதத்தில் இப்படி எழுதி வைத்திருந்தார்.  “நீங்கள் உங்களுடைய மேசையை சுத்தமாக வைத்துக் கொள்ளப் போகிறீர்களா அல்லது உங்கள் எஜமானரை தினமும் இரவில் இது மாதிரி வந்து சுத்தம் செய்யச் சொல்லுகிறீர்களா ?”

தான் செய்யும் தவறுகளை “my own blunders" என்று தலைப்பிட்டு ஒரு பைலில் எழுதி வைத்திருப்பது இவருடைய வழக்கம்.


ஜெர்மன் அழைப்பு

ஜெர்மன் ரப்பர் வர்த்தகம் செய்துவந்த குன்ஸ்ஸீம் என்பவர் கோயம்புத்தூருக்கு வந்திருந்த போது காய்சலால் அவதிப்பட்ட அவரை நல்ல முறையில் கவனித்துக் கொண்டார்.  ஜெர்மன் திரும்பி சென்ற அவரின் அன்புத் தொல்லையால் ஜி.டி.நாயுடு ஜெர்மன் சென்றார். கொழும்பு துறைமுகத்திலிருந்து கப்பல் ஒன்றின் மூலம் ஐரோப்பாவிற்கு அவர் பயணம் தொடங்கியது. 

எதிர்பாராத விதமாக அந்த கப்பல் தீ விபத்திற்கு உள்ளானது.  தப்பிக்கும் எண்ணத்தை மறந்து தன் நண்பர்களை தேடினார்.  தப்பிப்பதற்காக சிலர் கடலில் குதித்தார்கள் அவர்களை சுறாமீன்களுக்கு இரையானார்கள்.  அவரின் அருகே இருந்த இரண்டு பெண்களும் கடலில் குதித்தார்கள். இவரும் துணிவுடன் தண்ணீரில் குதித்தார்.  பெண்கள் மூச்சு திணறி மூழ்கினர் அவர்கள் இருவரின் கூந்தலை தமது கைகளால் இறுகப் பற்றி இழுத்து சென்றார். நல்ல வேலையாக அவர்கள் அருகில் உயிர் காக்கும் படகு வந்தது. அப்பெண்களையும் காப்பாற்றினார்.  அந்த வழியாக வந்த ரஷ்ய எண்ணெய் கப்பலில் பயணத்தை தொடர்ந்தார்.  நண்பர்களும் உயிர் பிழைத்தனர். அந்த ரஷ்ய கப்பலில் உணவு தட்டுப்பாடு அவருக்கு நாய் பிஸ்கட்கள்  தான் கிடைத்தன. இதுவே கிடைத்ததே என சந்தோசப்பட்டார் தீக் காயங்களுடன் இருந்த ஜி.டி.நாயுடு.


ஹிட்லருடன் சந்திப்பு




லண்டனில் இருந்து ஜெர்மன் சென்ற ஜி.டி.நாயுடுவிற்கு ஹிட்லரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சில நாட்களுக்கு பின் ஹிட்லர் கோலோன் என்ற இடத்தில் தங்கியிருந்தார்.  அவருடன் கோயரிங், ஹெஸ், கோயப்பெல்ஸ் நாஜித் தலைவர்களும் இருந்தனர்.  அந்த ஹோட்டல் நிர்வாகியின் பெரும் முயற்சியால் ஹிட்லரை சந்திக்கும் அரிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த சந்திப்பில் டாக்டர் லே என்பவர் மொழி பெயர்ப்பாளர். ஹிட்லருடன் அரசியல் பேசவில்லை. பண்பாடு கலாச்சாரம் பற்றி பேசினார். இறுதியில் ஹிட்லருடன் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டார். நாயுடு எடுத்த போட்டோவில் அவரின் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டார்.

நாஜி ராணுவ அணிவகுப்பை புகைப்படம் எடுக்க ரகசிய போலீஸ் அதிகாரியினால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சொன்ன உண்மைகளை புரிந்து கொண்ட அதிகாரி ஹிட்லர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போன் செய்தார்.  கோயப்பெல்ஸ் இவரை விடுதலை செய்யச்சொன்னார்.

ஹிட்லரை புகைப்படம் எடுத்த ஜி.டி நாயுடு தெரிவித்த கருத்து “ஹிட்லரின் முகத்தில் காணப்படும் உணர்ச்சித் தோற்றங்கள் மிக விசித்திரமானவை.  ஒரு புகைப்படத்தில் இருப்பது போல் மற்றொன்றில் அவரது தோற்றம் இருப்பதில்லை.  சில புகைப்படங்களை பார்க்கும் போது அவர் தான என்று சந்தேகம் ஏற்படும்”

இந்தியாவிற்கு திரும்பி வரும் போது ஒரு லாரி நிறைய பொருட்களுடன் வந்தார். அவர் நாஜி உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில் ரகசிய போலீசாரால் கொச்சி துறைமுகத்தில் சோதனை செய்யப்பட்டது தனி கதை.

ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் இவரின் அரிய தயாரிப்புகளான ரேஸாண்ட் சவரக் கத்திக்கு முதல் பரிசும், பிளேடிற்கு மூன்றாம் பரிசும் கிடைத்தன.


ஜெர்மனியில் பெற்ற பரிசு (ஹிட்லர் உருவம் பொறித்த ஷீல்டு)

இதேபோல முசோலினியையும் பல புகைப்படம் எடுத்திருக்கிறார். “இவைகளினால் உங்களுக்கு என்ன உபயோகம். என் படங்களை கெடுத்துவிட மாட்டீர்களே என சிரித்து கொண்டே கேட்டார்.” முசோலினி அதற்கு ஜி.டி நாயுடு ”அதுபற்றி இன்னும் சிந்திக்கவில்லை. நிச்சமாக கெடுக்க மாட்டேன்” என்று பதில் அளித்தார்.


இன்னும் பல தகவல்களுடன் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்...

தொடர்புடைய பதிவு :விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்களின் பார்வையில் சர் எம்.விஸ்வேஸ்வரய்யா

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)