Followers

Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

Friday, March 27, 2015

படித்ததில் பிடித்தது #ப.பி




#ப.பி படித்ததில் பிடித்தது
---------------------------------------------

யூகோஸ்லவியா நாட்டு கிராமம் ஒன்றில் நாய்,பசு, கழுதை ஆகிய மூன்றும் வாழ்ந்து வந்தன. நாட்டின் நிலைமை மோசமாக மாறி அங்கே வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அவை மூன்றும் அந்த கிராமத்தை விட்டு காட்டுக்கு ஓடின.

ஆனால் அவைகளால் தாங்கள் வாழந்த கிராமத்தை மறக்க முடியவில்லை. சிறிது காலம் கழித்து கிராமத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பதை பார்த்து வரும் படி நாயை மற்ற இரு மிருகங்களும் அனுப்பி வைத்தன.   அந்த நாய் அடுத்த நாளே ஓட்டமாக ஓடி வந்தது "கிராமத்து நிலைமை இன்னும் மோசமாக மாறி விட்டதாகவும், குரைக்க ஆரம்பிக்கும் போது ஜனங்கள் கொல்ல வந்துவிட்டதாகவும் தப்பி வந்தது தம்பிரான் புன்னியம் எனவும், தன்னால் எப்படி குரைக்காமல் இருக்க முடியும் எனவும் சொன்னது.

சிறிது காலம் கழிந்து, கிராமத்தின் நிலையை கண்டுகொள்ள பசு சென்றது. அடுத்த நாளே திரும்பி வந்து "என்னை பார்த்ததும் என்னிடம் பால் கரக்க ஆரம்பித்து விட்டார்கள் அதோடு என்னை அடிக்கவும் செய்தார்கள். நான் இனி அங்கே போக மாட்டேன் எனச் சொன்னது.

அதே போல கழுதையும் கிராமத்துக்கு போய் வந்து சொன்னது " கிராமத்தில் தேர்தல் நடக்கப் போகிறதாம் என்னை பார்த்தும் மக்கள் பிரதி நிதிக்காக நான் போட்டியிட வேண்டுமாம் அதற்கு நான் தான் தகுதியானவனாம்...யப்பா...சாமி ஓடியே வந்துட்டன் என்றது.

இது ரஷ்ய தலைவர் க்ருஷ்ச்சேவ் சொன்ன கதை


                                                         @@@@@@@@

 கவிஞர் கண்ணதாசன் ‪#‎எனது‬ சுயசரிதை புத்தகத்தில்...

சாதாரணமாகப் பாட்டெழுத உட்கார்ந்தால், ஒரு சுகமான உலகத்தில் மிதப்பது போல் எனக்கு தோன்றும், அகக் கவலை,புறக்கவலை எதுவும் தோன்றாது.
பாகப் பிரிவினையிலும், பாசமலரிலும் சில பாட்டுகள் பிறந்த இடங்கள் வேடிக்கையானவை.

நான் சிவகங்கைச் சீமைக்காக எழுதிய பல பாடல்களை படத்தில் சேர்க்காமல் விட்டு விட்டேன். திட்டமில்லாத அந்த வேலையால், நஷ்டமடைந்த பணம் சுமார் 20000 ரூபாய். சிவகங்கை அரசு எப்படித் தோன்றியது என்பது பற்றிச் சுமார் பத்து நிமிடங்கள் வரை ஓடக்கூடிய ஆயிரம் அடிப்பாடல் ஒன்று எழுதி இருந்தேன். அதில் பல வகையான மெட்டுக்கள் மாறி மாறி வரும்.
மருது பாண்டியரும், ராணி வேலுநாச்சியாரும், திண்டுக்கல்லில் இருந்து ஹைதர் அலியைச் சந்திக்கப் போவதாக ஒரு கட்டம். அந்தக் கட்டத்தில், "குடை நிழலிலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடை மெலிந்தங்கே நடக்கின்றார்" என்று ஒரு பாடல். அது அந்தப் படத்தில் இல்லை. அதே மெட்டில் "தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ"என்ற பாடலை எழுதினேன்.
அது போல் "மண்ணில் கிடந்தாலும் மடியிலிருந்தாலும் பொன்னின் நிறம் மாறுமா ? " இது எடுக்கப் படவில்லை. பாசமலரில் மலர்ந்தும் மலராத " பாடலை அதே மெட்டில் எழுதிக் கொடுத்தேன்.

பாட்டுத் தொழிலில் உச்சத்திற்குப் போய்க் கொண்டிருந்த அந்த நேரத்தில், வேறு பிடிக்காமலிருந்தால் கூட என் தொல்லைகள் வளர்ந்திருந்திருக்க மாட்டா.
சிவகங்கைச் சீமையிலே எனக்கு நஷ்டம் தொண்ணூறாயிரம் தான். அதை ஒரு வருஷத்திற்குள் தீர்த்து விட்டு நிம்மதியாக இருந்திருப்பேன். ஆனால் வலிமையான விதி என்னை மேலும் இழுத்தது. கவலை இல்லாத மனிதன் அதுவே என் கவலைகளுக்கெல்லாம் தாயாக அமைந்தது. நான்கு நாட்களில் எடுக்க வேண்டிய கிளைமாக்ஸ் கட்டத்தை நான்கு மணி நேரத்தில் எடுத்துப் படத்தை கொலை செய்தோம். முழு முதற்க் காரணம் சந்திரபாபு. தன் குணத்த்தாலே தன்னை கெடுத்துக் கொண்ட சந்திரபாபு என் படத்தையும் கெடுத்து வைத்தார்


@@@@@@@@@

அப்போது பானுமதி நடித்த ராணி என்றொரு படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த நாளில் பாடல் எழுதுவதென்பது பிரசவ வேதனை போன்றது. தானானானா என்றொரு தத்த காரத்தைக் கொடுத்துவிட்டு வார்த்தைகளையும் கருத்துக்களயும் அதற்குள் திணிக்கச் சொல்லுவார்கள்.
உள்ளம் வலிக்கும், உடம்பு வலிக்கும், நினைப்பதை சொல்ல முடியாது ஏதோ வயிற்றுப் பாட்டுக்காக எழுதி தீர்க்க வேண்டும். நானும் சித்திரவதைப் பட்டு ஒரு பாடலை எழுதி முடித்தேன். ஒத்திகை பார்க்க பானுமதி வந்தார். பாட்டை வாங்கிப் பார்த்துவிட்டு "இது என்ன பாஷை ? என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
எனக்கு அவமானமாகப் போய்விட்டது.
நமக்கும் ஒரு காலம் வரும் என்று நான் பொறுமையாக இருந்தேன்


@@@@@@@@@

ஒரு மனிதனுக்குத் திறமை மட்டுமே போதுமானதாக இல்லை; தோதான சந்தர்ப்பங்களும் வாய்க்க வேண்டும். சந்தர்ப்பம் வாய்க்காத திறமையோ, திறமை இல்லாதவனுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பமோ பயன் படுவதில்லை.



சிந்தனையிலேயே சுகமான சிந்தனை கடந்து போன காலங்களைப் பற்றிச் சிந்திப்பதாகும்

~ கவிஞர் கண்ணதாசன்
 @@@@@@@@@

 உங்களுடைய பெற்றோரை உங்களால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை உங்கள் ஒருவரால் தான் தேர்ந்தெடுக்க முடியும்

சொன்னவர் ; ஸெர்னி

( ஆனால் சுவாமி என்ன சமைக்கலாம் என்ற உரிமையை வீட்டம்மணியிடம் தந்து விட்டேனே வாட் டு டு !)

@@@@@@@@@

 கருநாடகத்துடனான ‪#‎அணைப்பிரச்சனை‬ என்பது இப்போது அல்ல
பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்த பிரச்சனை.

‪#‎ராணி_மங்கம்மாள்‬ வரலாற்றை படித்தோமானால், ஆற்றின் குறுக்கே
அணை கட்டுவதற்காக காலங்காலமாக தமிழர்கள் சண்டை போட்டு
வந்துள்ளனர்.

மைசூர் போர் என்பதை வரலாற்று ஏடுகள் இப்படி சித்தரிக்கின்றன.

முகலாய அரசு தக்காணத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர நினைத்த அதே வேளையில் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் தனது ஆட்சியை விரிவாக்க எண்ணி மதுரையின் ஆளுகைக்குக் கீழ் இருந்த சேலம் மற்றும் கோயமுத்தூரைக் கைப்பற்றினான். 1695 -ல் திருச்சிராப்பள்ளி கோட்டையையும் முற்றுகையிட்டான். இராணி மங்கம்மாளின் படைகளால் அம்முற்றுகை முறியடிக்கப்பட்டது.

சிக்கதேவராயன் தஞ்சை மற்றும் திருச்சிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நதியின் குறுக்கே தற்போது கண்ணம்பாடி அணை உள்ள பகுதியில் அணை கட்டி அதனைத் தடுக்க எண்ணினான். அப்போது மங்கம்மாள் 1700 -ல் தஞ்சையுடனான பகையை மறந்து அதனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, தஞ்சை- மதுரைக் கூட்டுப்படை ஒன்றை உருவாக்கினார். படை கிளம்பும் வேளையில் மைசூர்ப் பகுதிகளில் கடும் மழை பெய்ததால் சிக்க தேவராயன் கட்டிய அணை உடைந்தது. சிக்கல் எதுவும் இல்லாமல் இப்பிரச்சினை தற்காலிகமாக முடிவடைந்தது


@@@@@@@@@

 ஒத்தரூபாயின்மகிமை
----------------------
அதுவொரு எடை பார்க்கும் மெசின் அதுமட்டுமல்ல உயரம் இந்த நாள் இனிய நாளா என்பதையும் துக்கடா சீட்டில் சொல்லி விடும்.

சரி நம் எடையை சோதித்துப் பார்போமே என்று அருகில் சென்று மணி பர்சை துழாவினேன் ஒரு ரூபா நாணயம் ஏதும் சிக்குமா வென.

ஆஹா ...ஒன்னே ஒன்னு கண்ணே கண்னு இருந்தது. ஆனால் அது நாலணா சைசில் , இது ஏதடா வம்பா போச்சி யாரிடமாவது கேட்கலாம் ...

என் அதிர்ஷ்டம் ஒன்று உதட்டை சுழித்தார்கள், இல்லை என்று தலையாட்டினார்கள், வெரித்துப் பார்த்தார்கள். நான் என்ன கேட்டேன் இந்த காசை வைத்து விட்டு வேறு. சைஸ் காசு தானே கேட்டேன்.

பக்கத்தில் காயின் பாக்ஸ் போனில் பேச எத்தனித்தவருக்கு லைன் கிடைக்கவில்லை போல டொக்கென்று காயினை துப்பியது.
"ஏனுங்க காச மாத்திகலாமா?" தரமாட்டாராம்.
"அதையே போட்டு பாருங்க ஹி..ஹி "

ஆனது ஆகட்டும் மெசினுக்கு எதிரில் ஏறி நின்றேன்.

"காசை போடவும்"

போட்டேன். மீண்டும்

"காசை போடவும்"

" ச்சேச்சே மெசினோடு மல்லுக்கட்டுவதா? "

என் ஒத்தரூபாயை விழுங்கி விட்டு தேமேனென்றிருந்து...




@@@@@@@@@

ரோமாபுரியே அவளின் அழகில் சொக்கி போனதாக சொல்லுவார்கள். மென்மஞ்சள் உடல் நிறமும், மயக்கும் நீலவிழிகளையும் கொண்டவள் எகிப்திய பேரழகி கிளியோபாட்ரா. நூற்றுக்கணக்கான கழுதைகள் பண்ணைகளில் வளர்க்கப் பட்டன. நித்தம் கழுதைப்பாலில் குளிப்பாளாம். அதிருக்கட்டும் இத்தகவல் எதற்கு என்றால் இப்போது கழுதைப் பால் லிட்டர் ஐந்தாயிரத்திற்கு விற்கிறார்களாம். குழந்தைகள் கழுதைப் பால் குடித்தால் நோய் நொடியில்லாமல் திட காத்திரமாக இருப்பார்களாம். ஆனால் உண்மையா ? என்றால் டுபாக்கூர் தான். குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படும் சாத்தியக்கூறுகள் தான் அதிகம்.



@@@@@@@@@



Download As PDF

Thursday, May 1, 2014

பிளேட்டோவின் தத்துவங்களில் இருந்து...சில

கனவு

 நல்லவனோ கெட்டவனோ எந்த மனிதர்களின் அந்தரங்கத்
திலும் அடக்க முடியாத சில மிருகப் பிராந்தியமான இச்சைகள் இருக்கின்றன.  அவை மனிதன் உறங்கும் போது கனவுகளாக வெளிப்படுகின்றன.


அன்றாட வாழ்க்கையைப் பரிசுத்தமாகவும், நிதானமாகவும் நடத்தி செல்பவன், உறங்கப் போவதற்குமுன் மிதமாக உணவருந்தித் தன் ம்னதிலுள்ள இச்சைகளையும், கோப தாபம் முதலான உணர்ச்சிகளையும் உதறித் தள்ளிவிட்டு, உறங்குவானாகில், அவன் கெட்ட கனவுகள் காண மாட்டான்.

(கனவுபற்றிய ஆய்வுகளும் கட்டுரைகளும் எழுதி தள்ளிய பேரறிஞர் ப்ராய்டிற்கு முன் 2300 வருசங்கள் முந்தியே மனதை பற்றிய சிந்தனைகளின் மூல வேர் பிளேட்டோவின் வார்த்தைகளில் இருப்பதை காணலாம்.)

பெண்களின் முன்னேற்றம் !

ஆண்களை போலவே பெண்களுக்கும் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்.  அப்போதுதான் நாட்டின் தற்காப்பு நிலைத்திருக்கும், அதற்குமாறாக இப்போது இருப்பது போல் பெண்களுக்கு சம உரிமை வழங்காதிருந்தால், அந்த ராஜியத்தின் பாதிப் பகுதி ஊனமடைந்ததாக இருக்கும்  - பிளேட்டோ

(இந்த முற்போக்கு கருத்து இன்னும் கூட உலகில் சரியாக வேர் விடவில்லை இல்லை இல்லை முளை விட வில்லை என்பதை கவனிக்க.)



செல்வம்

அளவுக்கு மீறிய செல்வமோ.. அளவு மீறிய வறுமையோ மனிதர்களை ஒழுக்கம் கெட்டவர்களாகவும் திறமை அற்றவர்களாகவும் செய்துவிடுகிறது.

ஒரு நாட்டில் பிச்சைக் காரர்கள் இருந்தால் அங்கே திருடர்களும் கோயிலில் கொள்ளையடிப்பவர்களும் இருப்பார்கள்.

கவிஞர்கள் எவ்வாறு தங்கள் சொந்த கவிதைகளின் மேல் மோகம் உள்ளவர்களாக இருக்கிறார்களோ, பெற்றோர்கள் எவ்வாறு தங்கள் குழந்தைகளிடம் பாசம் வைக்கிறார்களோ அப்படியே சுயமாக பணம் சம்பாதிப்பவர்களும் அந்த பணத்தின் மீது அதிக மோகம் (பாசம்) உள்ளவர்களாக இருப்பார்கள்.

பகுத்தறிவு

அறிவும் சத்தியமும் நெருங்கிய உறவு உடையன.

படிப்புகள் அனைத்திலும் அதி உன்னதமான படிப்பு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை தேட வேண்டும் என்ற படிப்புதான்.

சமாதானத்திற்காக சண்டை பிறப்பிக்காமல் சண்டைக்காக சமாதானத்தைப் பிறப்பிக்கும் சட்ட சபையினன் புத்திசாலி அல்ல.

உண்மையான அறிவின் காதலனாய் இருந்தால் அவன் தன் இளமைப் பருவத்திலிருந்தே எல்லாவற்றிலும் மெய்மையை விரும்புபவனாய் இருக்க வேண்டும்.

மனிதனிடம் அறிவு உறங்கினால் மிருக இச்சைகள் கண் விழித்து எழுந்து குதியாட்டம் போடும்.

எவனொருவனுடைய ஆசைகள் ஒவ்வொரு வடிவத்திலுமுள்ள அறிவை நோக்கியே கவரப் படுகின்றனவோ, அவன் தன் மனதுக்கு ஏற்படக்கூடிய இன்பங்களிலே லயித்திருப்பானே தவிர உடலுக்கு ஏற்படக் கூடிய இன்பங்களை உணர மாட்டான்.

இளமை எனும் பக்குவமான வயதில் தான் எந்தவிதக் குணப் பண்பும் உருப்பெருகிறது; எந்த அபிப்ராயமும் ஆழமாகவே வேரூன்றுகிறது.

  தெரிந்து கொள்ள ஒன்றுமில்லை ; நாம் அறியாத ததை அறிந்து கொள்ள அலைவதில் எந்த வித உபயோகமோ இல்லை என்று அசமந்தமாக மூழ்கி கிடப்பதை : இந்த கொள்கைக்கு எதிராக என் சக்தி எல்லாம் திரட்டி சொல்லாலும் செயலாலும் போரிடத் தயாராக இருக்கிறேன்

என் அறிவின் பிரதி பலிப்பில் எனக்கு சிறந்தது என தோன்றினாலும், அந்த அறிவின் படியே எப்போதும் வழி நடக்கும் சுபாவமுள்ளவர்களில் நானும் ஒருவன்.

நான் சொல்வதில் ஏதாவது உண்மைக்கு புறம்பாக இருந்தால் என் தவரை மற்றவர் திருத்திக் கொள்ள விரும்புகிறேன்.  அதே போல பிறர் சொல்வது உண்மைக்கு மாறாக இருந்தால் பிறர் அவற்றை திருத்த விரும்புகிறேன்.  ஏனெனில் இது தான் இரு சாரருக்கும் பெருத்த லாபம்.  பிறர் தீமைகளை நான் குணப் படுத்துவதை விட எனது பெருந்தீமையைப் பிறர் குணப் படுத்துவதில் லாபம் அதிகம் உண்டு.

ஒவ்வொரு மனிதனின் அறிவிலும் 4 நிலைகள்; முதல் நிலை யூகம், இரண்டாவது நம்பிக்கை, மூன்றாவது சிந்தனை தெளிவு, நான்காவது மெய்யான பகுத்தறிவு. 

அறிவின் எதிரில் அறியாமை தலை வணங்குகிறது.

அறியாமையில் எல்லாம் பெரிய அறியாமை தெரியாதவன் தனக்கு அது தெரிந்து இருப்பதாக நினைத்துக் கொள்வது.







Download As PDF

காதலும் ; காமமும் பிளேட்டோ - [18 +]



தத்துவ ஞானி பிளேட்டோ அறிஞர் சாக்ரடீஸின் மாணாக்கர்
கி.மு 427 ல் ஏதென்ஸில் (கிரேக்கம்) பரம்பரை பரம்பரையான செல்வமும், செல்வாக்கும் உள்ள குடும்பத்தில் பிறந்தவர்.

அவர் எழுதிய 50க்கு மேற்பட்ட நூல்களில் ஒன்று சிம்போசியம் (Symposium) ”ஆன்மீக காதல்” திருக்குறளின் காமத்துப் பால் போன்றது எனச் சொல்லலாம். காதலும் காமமும் பற்றி பிளேட்டோவின் கருத்துகளின் (ஒரு பகுதி ) சுருக்கத்தை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

காதல் - ஒரு தீவிரமான மனநோய்

உன்னைக் காதலிக்க வேண்டுமானால் நீ காதலி.

காதலானது மனிதர்களை தங்கள் காதலிகளுக்காகச் சாகவும் துணியச் செய்கிறது. காதல் ஒன்றுதான் அந்தமாதிரி ஆக்குகிறது ; ஆணாக இருந்தாலும் பெண்னாக இருந்தாலும்.

அழகில் சிறந்ததை காதலிப்பது இயற்கை.  ஆத்மாவில் உள்ள குறை பாடுகளை காதல் விரும்பாதே தவிர, உடல் குறைபாடுகளை அது பெரிது படுத்துவதில்லை.

மனிதன் பல வழிகளில் இழுக்கப் படுகிறான்.  இரண்டு நோக்கங்களுக்கு இடையே இழுக்கப்படுகிறான் என்பதில் சந்தேகமே இல்லை.  இளமையின் அழகை அனுபவிக்க ஒன்று தூண்டுகிறது ; இன்னொன்று அவனை தடுக்கிறது.  ஏனெனில் முன்னவன், உடலை காதலிப்பவன், பழுத்த கனிபோல அழகைத் தேடிப் பசித்து அலைபவன்.  காதலியின் பண்பைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் தன் பசியை வேட்கையுடன் திருப்தி செய்து கொள்வான். மற்றவனோ உண்மையில் இன்னொரு ஆத்மாவை விரும்பும் ஓர் ஆத்மா ஆவான் ; உடல் இச்சையை இரண்டாவதாகத் தான் கைக் கொள்கிறான்.  சரீர காதலின் திருப்தியை மூர்க்கத்தனமானதெனக் கருதுகிறான். சுபாவத்தையும் திட நெஞ்சையும், கம்பீரத்தையும், அறிவையுமே அவன் மதித்துப் போற்றுகிறான். அவன் வாஞ்சைக்கு பாத்திரமான தூய பொருளான ஒருத்தியுடன் தூய்மையான முறையில் வாழவே ஆசைப் படுகிறான்.

[ தோழமைக்காக பழகும் காதலை தோழமைக் காதல் என்கிறோம், உடல் ஈடுபாடு இல்லாமல் உள்ள ஈடுபாட்டை விரும்பும் காதலை “பிளேடானிக் லவ்” என்கிறோம் ]

ஆண்பெண் உறவை சிற்றின்பம் என்கிறார்கள் அதைவிட வலிமையான சுகம் வேறு ஏதும் இல்லை என்பது வாஸ்தவம் தான். ஆனால் அதைப் போல வெறியூட்டும் போதையும் வேறொன்றுமில்லை.

எது சீராகவும் அழகாகவும் அமைந்திருக்கிறதோ அதை நிதானமாகவும் ஆழமாகவும் கலை உணர்வோடும் காதலிப்பது தானே உண்மையான காதல்.

எது வெறியூட்டக் கூடியதோ, மிதமிஞ்சிப் போவதோ அதற்கு உண்மையான காதலில் இடமில்லை.

உண்மையான காதல் நிலைத்திருக்க வேண்டுமானால் சிற்றின்ப ஈடுபாடு தலை காட்டக் கூடாது.   காதலர்கள் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராய் காதலிக்கிறவர்களாயிருந்தால் உடல் இன்பத்தில் அக்கரை கொள்ள மாட்டார்கள்.

காதலர்கள் ஒருவரை ஒருவர் முத்தமிடலாம்; இறுக கட்டியணைத்துக் கொள்ளலாம்.  ஓயாமல் ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் இந்த எல்லையைக் கடந்து அவர்கள் போகக்கூடாது;  சரீர சுகத்தில் நாட்டம் கொள்ளக் கூடாது.  அவ்வாறு மீறி செய்வார்களானால் காதலின் நிஜச் சுவையை உணராமல் போவதோடு, சரீர ஈடு பாடு அதிகரிக்க நாளடைவில் பலஹீன மாவார்கள்.

(திருவள்ளுவர் இதே கருத்தைத்தான் சொல்லி இருக்கிறார் காமம் மலரைவிட மென்மையனது. அதன் தன்மை அறிந்து நுட்பமாக ஈடுபடுபவர்கள் இவ்வுலகில் வெகு சிலரே )
Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)