வரும் நவம்பர் 5 (2013) இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் செயற்கை கோளை விண்ணில் ஏவ தயாராகி விட்டது. அன்று மதியம் 2.36 க்கு பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலமாக செய்வாய் நோக்கி புரப்பட்டு விடும். அன்றைய தினம் உலக வல்லரசு வரிசையில் இந்தியா 2 ம் இடம் பெரும். அதாவது சொந்த முயற்சியில் செவ்வாய் கிரகத்தை நோக்கி செயற்கை கோள் அனுப்பிய வரிசையில் இந்த இடம். இதற்காக ரூ.450 கோடிகள் செலவு ஆகிறது. இதில் PSLV -C25 ஏவுகணைக்கு மட்டும் ரூ.110 கோடிகள்.(செவ்வாய் அன்று செவ்வாய்க்கு ! )
வெட்டி வீண் செலவு, வீன் பெருமிதம் தேவையா ? என்று ஒரு சாரரின் கருத்தும் நிலவுகிறது. இஸ்ரோ முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயரும் நாட்டுக்கு வீண் செலவு என்கிறார். தற்போதைய சூழ்நிலையில் இது தேவையில்லாத ஒன்று என்ற வாததின் அடிப்படையில் திட்டத்தை தள்ளிப் போட முடியாது (முன்பே வெளியான தகவல்) ஏன் என்றால் இந்த தேதியை விட்டால் அடுத்த 2016 ல் தான் இந்த செயற்கை கோளை ஏவ முடியும்.
தேசிய பெருமிதத்தை விட்டு தள்ளுங்கள் என்று முன் வைக்கப்படும் விவாதங்கள்.
செவ்வாய் வளி மண்டலத்தில் மீதேன் ஆராய்சி தேவையா ? இந்திய குடிமகனுக்கு அடிப்படை தேவையான சுகாதாரமான குடிநீருக்கு வழி செய்யாமல் அங்கு காற்றிருந்தால் என்ன ? தண்ணீர் இருந்தால் என்ன? சாதாரண குடிமகனுக்கு இது தேவை இல்லை.
இந்தியாவிற்கு ஏறாளமான சிக்கல்கள் இருக்க அதை தீர்ப்பதை விட்டுட்டு இதெல்லாம் தேவையா ?
40 கோடிப்பேர்களுக்கு சரியான மின்சார வசதி இல்லை, 70 கோடி பேர்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. மொத்த மக்கள் தொகையில் 47 % பேர்கள் ஊட்ட சத்து குறைபாடால் தவிக்கிறார்கள். 50 ஆயிரம் கோடி தானியங்களை, உணவுப் பொருட்களை பாதுகாக்க வசதி இல்லை, வீணாகிறது. மொத்த உற்பத்தியில் 24 % கோதுமை வீணாகிறது.
Photos from ISRO
(இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகள் ஆனாலும் இந்த பிரச்சனைகள் தீருமா என்பது ? )
மார்ஸ் ஆர்பிட்டர் மிஸன் (MOM) பற்றி சில தகவல்கள் :
ராக்கெட்டுடன் சேர்த்து மங்கள்யான் 1350 கிலோகிராம் எடை கொண்டது. பூமியின் சுற்றுப்பாதையில் 25 நாட்கள் சுற்றிவிட்டு, நவம்பர் 30 ல் செவ்வாயை நோக்கி தன் பயணத்தை துவக்கும். அப்போது இதன் எடை 14.49 kg. 55 மில்லியன் மைல் தூரத்தில் செவ்வாயின் சுற்றுப்பாதையை நெருங்க 9 மாதங்கள் (300 நாட்கள்) ஆகும். இன்னும் சரியாக சொன்னால் செப்டம்பர் 22, 2014 ல் இது நடக்க வேண்டும். மன்னிக்க செவ்வாயை சுற்ற வேண்டும்.
செவ்வாய் வளி மண்டலத்தில் மீத்தேன் ஆய்வு மற்றும் சுற்றுபுற சூழல் ஆய்வுகளுக்கு கீழ்காணும் உபகரணங்கள் (5) இணைக்கப்பட்டிருக்கு.
LAP - Lyman Alpha photometer மீத்தேன் வாயுவைக் கண்டறியும் (to measure atomic hydrogen in the Martian atmosphere)
MSM - Methane Sensor for Mars (capable of scanning the entire Martian disc within six minutes)
MCC - Mars Colour Camera
TIS - Thermal Infrared imaging Spectrometer ஹைட்ரஜன் மூலம் தாது வள ஆய்வு (Deuterium Hydrogen ratio ) to Map the surface composition of Mars.
MENCA - Mars Exospheric Neutral Compostion Analyser செவ்வாயின் மேல் மண்டல வெளியேற்ற முறைகளை ஆய்வு செய்யும். (to study the martian atmosphere)
மீத்தேன் சென்ஸார் இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் பயன் படுத்தப்படாத கருவி.
செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆய்வுகள் 18 நூற்றாண்டிலேயே துவங்கிவிட்டது எனலாம். ரஷ்யா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி கழகம் ஆகியவை இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன.
1960 முதல் 45 மிஸன்களில் இரண்டு மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்திய தேசத்தின் செவ்வாய் ஆய்வு முக்கியமாக சீனாவிற்கு போட்டி என்று சொல்லலாம். ஏன் என்றால் சீனாவின் செவ்வாய் கிரகத்திட்டம் தோல்வி அடைந்தது. இதே போல 1998ல் ஜப்பானின் திட்டமும் (நோசோமி) தோல்வி.
உலக அளவில் மாம் இந்தியாவின் மீது கவனத்தை திருப்பி உள்ளது.
செவ்வாய்க்கு ஒரு வழி பயணம் செய்ய காத்திருக்கும் 8000 இந்தியர்கள்:
”மார்ஸ் ஒன் 2023“ செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு உலக அளவில் 2 இலட்சத்து இரண்டாயிரம் பேர் பதிவு செய்திருப்பதாக ஒரு தகவல். அதில் 8000 பேர் இந்தியர்கள்.
மணிகண்டன் என்பவர் அந்த 8000 பேரில் ஒருவர். அவர் சொல்கிறார். இது ஒரு முட்டாள் தனமான தற்கொலை முயற்சின்னு சொல்றாங்க, இருந்து விட்டு போகட்டும். எதிர்பாராத வாகன விபத்தில் நம் உயிர் போவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இத்துணை காலம் நான் உயிருடன் இருப்பேன் என்பதற்கும் கியாரண்டி இல்லை. அதனால் திரும்பி வரமாட்டோம் என்பது எனக்கு கவலை அளிக்கவில்லை. இதுக்கு ஒரு அர்தம் இருப்பதாக இருக்கும்
இத்துணை பேரில் 40 பேர்கள் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப் படுவர் அதிலும் முதலில் 4 பேருக்கு மட்டுமே செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
Labels :Mars Orbiter Mission - Mangalyaan, இஸ்ரோ