Followers

Showing posts with label Mystery. Show all posts
Showing posts with label Mystery. Show all posts

Tuesday, May 13, 2014

வொயுனிச் புத்தக மர்மம்



"வொயுனிச் கையெழுத்துப் பிரதியின் மர்ம குறிப்புகள்"


வொயுனிச்  ஆச்சர்யங்களை உள்ளடக்கிய 600 வருட பழமையான படங்களுடன் கூடிய கையெழுத்து புத்தகம். 240 பக்கங்கள் கொண்ட இதில், உள்ளவைகளை இன்னதென்றே புரிந்து கொள்ள முடியாத மர்மம் மிக மிக நீண்ட ஆண்டுகளாக  இருந்தது (இருந்து வருகிறது !)

பெட்ஃபோர்ட்ஷயர் பல்கலைகழகத்தை சேர்ந்த மொழியியல் பேராசிரியரால் இப் புத்தகத்தில் உள்ள சில குறிப்புகள் விடுவிக்கப்பட்டது என்று சொல்லலாம்.  (இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை !! ) .   2012 ல் பிபிசியில் வெளியான செய்தியின் பின்னே புத்தகத்திலுள்ளவற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

"வொயுனிச் கையெழுத்து புத்தகம்" என இது அழைக்கப்பட்டாலும் இதை எழுதியவர் யார் ?



இந்த புத்தக எழுத்தாளரின் பெயரை விடுவிக்கவே பல வருடங்கள் ஆகியிருக்கிறது.

இறுதியாக அறியப்படும் புத்தக பரிமாற்றத்தின் படி, இப்புத்தகம் வில்ஃப்ரெட் வொயுனிச் ( Wilfrid Voynich ) எனும் புத்தக வியாபாரியால் 1912 ல் விலைக்கு வாங்கப் பட்டது. ஒரு பெரிய டிரங் பெட்டியில் கொண்டு வரப்பட்ட புத்தகங்களில் ஒன்று இந்த புத்தகம்.  தென் இத்தாலியில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது.  மேலும் இத்தாலியின் மறுமலர்ச்சி காலத்தை சேர்ந்ததாக இது இருக்கும் என்பது ( 1400 ) கார்பன் சோதனையில் உறுதிப் படுத்தப் பட்டது.  வொயுனிச் மறைவு வரைக்கும் இப்புத்தகத்தின் எழுத்துக்களும் தகவல்களும் "அவரால்" தெரிந்து கொள்ள முடியவில்லை என்பது கூடுதல் தகவல்.


இந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இரகசியங்கள் இருக்கக்கூடும் ?


நட்சத்திரங்கள், கோள்களைப் பற்றிய தகவல்களும், தாவங்கள் பூக்கள் பற்றிய விவரங்களும், மனித உடல் கூறு (அனாடமி) சம்பந்தமான தகவல்களும், விண்ணியல், இந்த பிரபஞ்சம், பல்வேறு மூலிகைகள்,மருத்துவம்,மருந்துகள், ரெசிபிகள் பற்றிய தகவல்கள் இந்த புத்தகத்தில் உள்ளன.

இப்புத்தகத்தில் இருக்கும் சில விளக்கப்படங்கள் அனுமானதில் இல்லாமல் பார்த்து வரையப்பட்டிருக்கின்றன. உதாரணமாக மைக்ரோ பயாலாஜிகல் சம்பந்தமான படங்கள் (மைக்ராஸ்கோப்பில் மட்டுமே பார்க்கக்கூடிய இமேஜ்கள்) இந்த புத்தகத்தில் உள்ளன. அப்படியாயின் இப்புத்தகம் எழுதிய கால கட்டத்தில் மைக்ராஸ்கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததா ? கூட்டு நுண்ணோக்கியானது கலிலியோவால் 1625 ல் கண்டுபிடிக்கப்பட்டது.

There are other claims that the microscope and the telescope were invented by Roger Bacon in the 1200s but this is not substantiated. Giovanni Faber coined the name microscope for Galileo Galilei's compound microscope in 1625 (Galileo had called it the "occhiolino" or "little eye").

நம் கேளக்சியை பற்றிய தகவல்களும் இதில் இருக்கு.

                                                                   " inside book view "



                         "constellation of Taurus - ஏழு நட்சத்திர கூட்டம்  Pleiades cluster"

முதலாம் உலகப்போர் காலந்தொட்டு இப் புத்தக குறியீடுகளை விடுவிக்க பல ஆண்டுகள் பல்வேறு தரப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதியில் மொழியியல் வல்லுநர் (Stephen Bax) ஸ்டீபன் பக்ஸ் இப்புத்தக மர்மம் துலங்கப்பட்டதாக அறிவித்தார். முக்கியமாக அம்மொழி எழுத்துக்களை தம்மால் படிக்க முடிந்ததாக தெரிவித்தார். இவர் மட்டுமே புத்தக ரகசியத்தை விடுவித்தார் என்று சொல்வதற்கு இல்லை அவருக்கு முன் பல ஆராய்சியாளர்கள் புத்தக ரகசியத்தை விடுவிக்கப் பாடுபட்டனர்.

"க்ளிப்" என்று சொல்லக்கூடிய 1,70,000 குறியீட்டுப் படங்கள் இப்புத்தகத்தில் நிறைந்துள்ளது. (hieroglyphs )எகிப்திய உருவ (வடிவ) எழுத்துகளை கொண்டிருந்ததன. பல தகவல்களை உள்ளடக்கிய ஒரே குறியீடு ( "குழு குறியிடு") என்ற வகை பயன்படுத்தப் பட்டு உள்ளது.
[ உதாரணமாக  Centaurea என்ற மலர் " kantairon " என்ற பெயரால் ஒரு குறியீடாக குறிப்பிடப்பட்டுள்ளது. கவுண்டமணி - செந்தில்
ஜோக் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன் பூவை... புஷ்பம் என்றும் சொல்லலாம் புய்பம் என்றும் சொல்லலாம் !! ]

                                                   Centaurea என்ற மலர் ( kantairon)



இதிலுள்ள மலர்களை பற்றிய விவரங்களே இதை எழுதியவர் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று இருப்பார் என்பது தெளிவு. ஒரு மலர் என்றால் அதை மேலோட்டமாக மட்டும் அல்லாமல் அதன் குறுக்குவெட்டு தோற்றம் அதன் உள்ளீட்டின் செல் பகுப்பாய்வு வரை விவரங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.


இன்றைக்கு ப்ரூப் பார்த்து பிரின்ட் போடப்படும் புத்தகங்களே தப்பும் தவறுகளுமாயிருக்க கையால் எழுத்தப்பட்ட இந்த புத்தகத்தில் தவறுகள் இல்லை (அடித்தல் திருத்தல் கூட) என்பது ஆச்சர்யமானது.

இதில் பயன்படுத்தி இருக்கும் வண்ணங்கள் நிறம் மங்காமல் இருப்பது. பெரிய படங்கள் இப்புத்தகத்தில்  பல சீரான மடிப்புகளுடன் இணைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.

இன்னும் இப்புத்தகத்தின் இரகசியங்களை விடுவிக்க பல்வேறு துறை வல்லுநர்களின் உதவியும் தேவைப்படுவதாக குறிப்பிடுகிறார் ஸ்டீபன் பக்ஸ் ( Code remained uncracked  !! )

மேலும் சில தகவல்கள்


புத்தகத்தை எழுதியவர் (Roger Bacon )ரோஜர் பெகான் 

காலம் 1214 - 1292 பிரத்தியேகமான மென்மையான ஆட்டு தோல் பேப்பர் போல பயன்படுத்தப் பட்டுள்ளது.

1586 ல் ரோமானிய பேரரசர் ருடால்ஃப் II இதை ரோஜர் பெகான் இடம் இருந்து 600 ட்யூகேட்ஸ் (சுமார் 2 லட்சம் பவுண்டுகள் அப்போதைய மதிப்பு ?? ) கொடுத்து பெற்றுக்கொண்டார்.

1912 ல் நியூயார்க்கை சேர்ந்த புத்தக டீலர்  வில்ஃப்ரெட் வொயுனிச்  கைக்கு வந்தது.

அதன் பின் இத்தாலிய புத்தக காப்பகத்தில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.






1921 ல் பென்சில்வேனியா பல்கலைகழக பேராசிரியர் இப்புத்தகம் வேற்று மொழியில் இருந்து மொழிபெயர்க்கப் பெற்ற பக்கங்களும் படங்களும் இருப்பதாக கண்டறிந்து சொன்னார்.

1978 ல் இப்புத்தகத்தில் இருந்து போட்டோ நகல் வடிவில் The Voynich Manuscript: An Elegant Enigma எனும் பெயரில் Mary D’Imperio என்பவரால் (அல்லது குழுமத்தால்)  பிரதி உருவாக்கப்பட்டது

2013 ல் டாக்டர் ரக் ( Dr. Gordon Rugg of Keele University ) என்பவர் புத்தகம் பற்றிய தனது ஆய்வுகளை வெளியிட்டார்.




Download As PDF

Wednesday, February 12, 2014

டாவின்சி ஓவியத்தில் ஒளிந்திருக்கும் இரகசியம் !

15 ம் நூற்றாண்டின் சிறப்பு தன்மை வாய்ந்த ஓவியமாக டாவின்சி வரைந்த சுவர் ஓவியம் "தி லாஸ்ட் சப்பர் (கடைசி இரவு விருந்து)" திகழ்கிறது. 1495 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இல்லாமல் வெவ்வேறு கால கட்டத்தில் வரைந்திருக்கிறார், 1498 ல் இது முற்றுப் பெற்றிருக்கிறது. இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின் சிறப்பான படைப்பாகவும், இயேசு அருந்திய இறுதி விருந்தைச் சித்தரிக்கும் ஓவியங்களுள் முதன்மையானதாகவும் கருதப்படுகிறது.

 கட்டிடக்கலை "ப்ரஸ்பெக்டிவ் " என்று சொல்ல கூடிய நுணுக்கமும் இந்த ஓவியத்தில் உள்ளது.  இதை பார்வையிட்ட அறிஞர்களும், ஆர்வளர்களும் இந்த ஓவியம் பற்றி பல்வேறு கருத்துக்கள் ,அபிப்ராயங்கள் சொல்லுகிறார்கள். (தத்துவ விளக்கம், ஜோதிடம், விண்ணியல், கணிதவியல், கலாச்சாரம் இப்படி)


1726 லிருந்து 1954 வரையிலும் பல கால கட்டங்களில் , பல ஓவியர்களால் இந்த ஓவியம் சிதையாமல் (ரீ கலரின்ங் / பேட்ச்) பாதுகாக்கப்பட்டது.  பார்ஸிலோன் என்பவர் சுமார் 20 ஆண்டுகாலம் (1979- 1999) துல்லியமான முறையில் இதை மறுசீரமைவு செய்து பழைய வடிவத்தை கொடுத்தார். இந்த ஓவியம் இருக்கும் சுவரின் மறுபக்கம் சமையலறை அதனாலும் ஈரம் காரணமாக இந்த ஓவியம் பொழிவிழந்தது. 1943 ல் உலகப்போரின் போது கட்டிடத்தின் அருகில் குண்டு விழுந்தது, அப்போது அதிர்ஷ்டவசமாக இந்த ஓவியம் தப்பியது. ஓவியம் இருந்த அறை சிறையாகவும் இருந்திருக்கிறது.

யேசு தன் சீடர்களுடன் விருந்துன்னும் காட்சி "தி லாஸ்ட் சப்பர்" பைபிளில் இந்த காட்சி வர்ணிக்கப்பட்டிருக்கிறது (as it is told in the Gospel of John, 13:21. Leonardo has depicted the consternation that occurred among the Twelve Disciples when Jesus announced that one of them would betray him.)


The Last Supper (1498)—Convent of Sta. Maria delle Grazie, Milan, Italy







  • மூன்று வாயில்கள் எதற்கு  ? நாம் காந்தப்புல மற்றும் மின் உலகத்தில் வசிக்கிறோம்.  யேசுவை  சூரியனாகவும் , சூரியனைச் சுற்றி 12 ராசிகளையும் உருவகப்படுத்தி வரையப்பட்டிருக்கிறது.



  • மூன்று மூன்று பேராக 4 குழுக்கள் இருக்கு, மொத்தம் 12 பேர் இது வருடத்தின் 12 மாதங்களையும், நான்கு சீசனையும் (காலங்கள்), ஒவ்வொரு சீசனும் மூனு மாசம் இருக்கும் என்பதை சுட்டி காட்டுகிறது.  முதல் குழுவில் 3பேர் இருக்காங்க இரண்டு கைகளை உயர்த்தி இருப்பது ஜெமினி, அடுத்த குழு லியோ, இப்படி ராசிகளையும் சுட்டிக்காட்டுது. மூன்று வாயில்களில் வலதில் செல்லக் கூடாது, இடதிலும் செல்லக் கூடாது, நடுவில் உள்ள வாயில் வழிதான் செல்லவேண்டும்.

  • யூதர்கள் அந்த டேபிலை சுற்றி இருக்கிறார்கள், அவர்கள் உட்கார்ந்து இருக்கவில்லை. .. இதை டாவின்ஸி ஏதோ குறிப்பால் உணர்த்துகிறார். எகிப்தியர், இந்தோனேஷியன்கள், மெக்ஸிகோ டேபிலை சுற்றி இருக்கிறார்கள்.


(in medieval )ஐரோப்பிய சர்சுகள் மற்றும் கதீரிட்ரல்களில் இந்த வாயில் வடிவங்களை காணலாம்.


  • ஐரோப்பிய கலாசாரத்தில் மூன்று எனபது வாழ்கையின் பிறப்பு, உயிர், மறு பிறப்பு இன்னும் இது போல மூன்று என்ற எண் ( triadas),செயல்கள், வழிமுறைகளில் முக்கியமாக இடம் பெற்றிருப்பதை காணலாம்.
  •  Trinity மூன்று வாயில்கள் , கட்டிடக்கலையில் அந்த கால கட்டங்களில் அப்படி அமைக்கப்பட்டிருக்கும் அதை அவர் அப்படியே யோசித்து வரைந்து இருக்கலாம்.


  • இந்த படத்தை( ஓவியத்தை) அப்படியே திருப்பி பார்த்தோமானால் பின்புலமானது பியானோ கட்டைகளை போலிருக்கும் விரல்கள் வாசிப்பதையும் பார்க்கலாம். 


                                              கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் 
(In greek mythology the stars of Pleiades represented the seven sisters)
மூன்று வாயில்கள் (கதவுகள்) ஓரியான் (Orion ) நட்சத்திர கூடங்களை குறிக்கிறது.

  • யேசுவின் உருவமே ஒரு பிரமிட் வடிவத்தில் இருப்பதை பார்க்கலாம்.
  • சிறிய வாயில் கதவுகள் இரண்டும் சூரியனையும்(ஆண்பால், ஆண்), நிலவையும் (பெண்பால்,பெண்) குறிக்கிறது நடுவில் உள்ள பெரிய கதவு யுனிவர்ஸ், அதன் வழி செல்லவேண்டும்.


  • கணிதவியலின் கூற்றுப்படி, 3, 9 , 6 தனித்த சத்தி கொண்ட எண்கள் எனலாம்.  இந்த மூன்று எண்களையும் அந்த வாயில் கதவுகள் குறிப்பிடுகின்றன.


“Philosophy [nature] is written in that great book which ever is before our eyes — I mean the universe — but we cannot understand it if we do not first learn the language and grasp the symbols in which it is written. The book is written in mathematical language, and the symbols are triangles, circles and other geometrical figures, without whose help it is impossible to comprehend a single word of it; without which one wanders in vain through a dark labyrinth.”  — Galileo Galilei

The entire Universe (including our solar system, as well as atoms, DNA and life-forms) reveals the secrets of balance, rhythm, proportion and unity in diversity, the fractal  interconnection of parts with each other and the whole. This harmony is expressed by some “key” numbers: Fibonacci Series, Phi, Pi and “e”.

The creation myths of many traditions describe the universe as the work of a Divine Architect who uses “sacred geometry” to unfold the dimensions of a beautiful cosmos, wisely designing every aspect of it, and governing by just proportions evidenced in the geometric shapes and processes of nature.

நன்றி _ கலாகுமரன்

Download As PDF

Tuesday, February 11, 2014

உருவங்களை நிஜத்தில் மறைய வைப்பது சாத்தியமா?

ஹாரி பாட்டர், ப்ரிடேட்டர் {potter , predator} போன்ற படங்களில், சயன்ஸ்பிக்ஸன் படங்களிலும், இரும்புக்கை மாயாவி போன்ற கார்டூன் கதைகளிலும் உருவங்களை மறைய வைப்பது அல்லது மறைந்து போவது என்பது இல்லாமல் இருந்தால் அது ஆச்சர்யம்.



உண்மையில் மேஜிக் போல நிஜத்திலும் நிகழ்த்துவது சாத்தியமா ? இன்னும் இல்லை ஆனால் அந்த மாதிரியான நிகழ்வை சாத்தியப் படுத்த அருகில் சென்று  கொண்டிருக்கிறார்கள்  என்று சொல்லலாம்.

இதற்கான திறப்பான் தான் மெட்டா மெட்டீரியல் (Metamaterial).   இது ஒருவகையான இயற்கையில் இல்லாத உருவாக்கப்பட்ட சிந்தடிக் பொருள். ஒளி இதனை சுற்றி சிதறச் செய்யும் தன்மையானது.  அதனால் அந்த பொருளை காணாது மறையச் செய்யலாம்.


டார்சின் முன்னால் வைக்கப்பட்ட துண்டினை(துணி) ஒளி ஊடுருவி கடந்து செல்வதாக உருவகப்படுத்திக்கொள்ளுங்கள் மெல்லிய இழையை ஒளி ஊடுருவாமல் அந்த இழைகளுக்கு இடைப்பட்ட துவாரத்தின் வழியாக செல்லும் அல்லவா.  அந்த இழையில் ஒரு நுண் துவாரம் செய்தால் ஒளியானது அதனுள் செல்ல முடியாமல் விலகி செல்லும் இல்லையா ?. அப்படி ஒளியானது விலகி செல்லும் போது அந்த பொருள் கண்ணுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது.



மிக மிகச்சிறிய தட்டியை கற்பனை செய்து கொள்ளுங்கள் அப்படி இருக்கும் இந்த மெட்டா மெட்டீரியல்.


“Such a lens would offer superior resolution over conventional technology, capturing details much smaller than one wavelength of light to vastly improve imaging for materials or biomedical applications,” says Costas Soukoulis, a physicist at Iowa State University. “A metamaterial superlens could give researchers the power to see inside a human cell or observe DNA.”

ஒரு தட்டி வடிவத்தில் உருவாக்கப்பட்ட தனிமங்களுக்கு இடையே செல்லும் ஒளியின் அலை நீளத்தை விட குறைவான இடைவெளியில் ஒளி வளைந்து செல்லுகிறது. போட்டான்கள் சல்லடை போன்ற நுண்பொறியில் சிக்கி கொள்கின்றன அவை அந்த நுண்துளையில் நுழைய முடிவதில்லை அதற்கு பதிலாக அவை அந்த பொருளை புனல் வடிவில் சுற்றி செல்கிறது.

இந்த டெக்னிகல் இன்னும் ஆய்வுக்கட்டத்தில் இருக்கிறது. மெட்டா மெட்டீரியல் எனும் இத்தனிமம் ஆனது லைட் ரேடியேசனை ஒரு குறிப்பிட்ட வேவ் லெந்தில், குறித்த அலைவரிசை நிறங்களில் மட்டுமே பரிட்சிக்கப் பட்டது. டெக்ஸாஸ் யுனிவர்சிட்டியை (ஆஸ்டின்) சேர்ந்த ஆராய்சியாளர்களின் அடுத்த கட்ட ஆய்வு " இந்த தனிமத்தில் ஒரு போர்வை அல்லது கோட் செய்வது " அப்படி உருவாக்கப்பட்டு வெற்றியடைந்தால், திரைப்படங்களில் காட்டப்படும் கிராபிக்ஸ்கள் உண்மையில் உண்மையாகும்.





"The voltage generated by this photodiode when it is illuminated with light can be used to change the resonance of the metamaterial structure," explains Shadrivov. "This means that we can control the refractive properties of the structure at will and bend the microwave light beams passing through the material in whichever direction we like."




Labels: மெட்டாமெட்டீரியல்,metamaterial

Download As PDF

Friday, November 8, 2013

புதிர் படம் Mysterious writing


Serge Raynaud de la Ferrière (18 January 1916 – 27 December 1962) செர்ஜி ரைநாட் பெரைரே என்பவர்  பிரெஞ்சு தத்துவவாதி.  இவர் 43 நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். யுனிவர்ஸல் கிரேட் ப்ராதர்குட் (Universal Great Brotherhood ) என்ற அமைப்பை 1948 ல் வெனினிசுலாவில் நிறுவி இருக்கிறார்.  அதில் அறிவியல், கலை, சமயம், (யோகா) சம்பந்தமான போதனைகளை செய்துள்ளார். இவர் எழுதிய புத்தகங்களில் ஒன்று The Psychological Proposals.

இவர் எழுதிய புத்தகங்களில் ஒன்றில் கீழ் காணும் படத்தை குறிப்பிட்டு இருக்கிறார்.  இதை இவர் இந்தியா திபெத் பயணத்தின் போது ஒரு யோகியிடம்  இந்த படத்தை பெற்றதாக சொல்லப்படுகிறது.  இந்த படம் Triangle of Light என குறிப்பிடப் பட்டு இருக்கிறது.




புதிரான இந்த படத்தில் உள்ள எழுத்துக்கள் உங்களுக்கு புரிகிறாதா ? என பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

 
Download As PDF

Tuesday, October 8, 2013

ஈஸ்டர் தீவின் விளங்காத எழுத்துக்கள்


ஈஸ்டர் தீவின் ஆதி குடிகள் ரொங்கோரொங்கோ எனும் குறியீட்டு எழுத்துக்களை (கீற்றுகள் glyphs ) பயன்படுத்தியுள்ளனர். 

ஸ்பானியர்கள் இந்த தீவிற்குள் நுழைந்ததற்கு பின்னே அதாவது 1770க்கு பின் ஸ்பானிஸ் வார்தைகளை லத்தீன் எழுத்துகளில் எழுதிவந்திருக்கிறார்கள். இது 1860 வரைக்கும் நடைமுறையில் இருந்திருக்கிறது.

1860க்கு பின்நுழைந்த மிஷனரியை சேர்ந்தவர்கள் (missionaries) ஈஸ்டர் தீவின் குறியீட்டு (Rongorongo script) எழுத்துக்களை வடிவங்களின் புதிர்களை விடுவிக்க முயன்றார்கள்.  முயற்சி தோல்வி அடைந்தது.

ரெங்காரெங்கா குறியீட்டை எழுத்தை தவிர அத்தீவு மக்கள் தவு(Ta'u and Mama) மற்றும் மமா என்ற எழுத்துக்களை பயன் படுத்தி இருக்கிறார்கள்.


ரெங்காரெங்கா ஸ்கிரிப்டில் 120  வடிவங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.  பறவைகள், மீன்கள், கடவுள்களை, தாவர குறியீட்டுகளை, பல்கோண வடிவங்களை உள்ளடக்கி உள்ளது.






                                                                  pic : thanks to wikipedia

ஒவ்வொரு குறியீடும் வார்த்தைகளையோ, ஒலியையோ, கருத்து கோர்வையை,எண்களையோ வெளிப்படுத்துவதாக இருக்கலாம்.
ரப்பானூய் பேச்சு மொழி பாலிநேசியன் மொழியை ஒத்தது என்கிறார்கள்.

ரொங்கோரொங்கோ எனும் குறியீட்டு எழுத்துக்கள் இன்னும் விளங்கிக் கொள்ளப்படாத எழுத்து வடிவமாகவும், ஒரு மர்மக் குறியீடாகவே உள்ளது.

தொடர்புடைய பதிவு :   ஈஸ்டர் தீவு சிலைகளின் இரகசியம்

label : Easter Island, Rongorongo script

Download As PDF

Monday, July 22, 2013

உலகம் வியக்கும் இந்தியாவின் பழமையான தூண்

1600 ஆண்டுகள் பழமையான இந்த இரும்புத்தூண் இந்தியர்களின் திறமைக்கு அறிவியல் தொழில் நுட்பத்திற்கு கட்டியம் கூறுகிறது.

இந்த இரும்புத்தூண் சுமார் 24 அடி (7.2 மீட்டர்) உயரம் இதனுடைய எடை ஆறு டன் இதனுடைய அடிப்பாகம் நிலத்தினுள் ஒரு மீட்டர் இருக்கும்ங்கராங்க. இத்தூணில் சமஸ்கிருத வாசகங்கள் பிராமி எழுத்துகளை கொண்டு பொறிக்கப்பட்டு உள்ளது.




குத்புதீன் டெல்லியில் கட்டிய முதல் மசூதி குவ்வாத்-அல்-இஸ்லாம் சுமார் 23 இந்து, ஜைனக் கோயில்களை இடித்து உடைந்த பகுதிகளால் கட்டப்பட்டதே.  இந்த பகுதியில் தான் இந்த இரும்புத்தூண் கம்பீரமாய் நிற்கிறது.

இந்த இரும்புத்தூணின் வரலாற்றை இன்னும் பின்னால போய் பார்த்தோம்னா இது இரண்டாம் சந்திரகுப்த விக்கிரமாதித்தியரால் கி.பி.402 ல் செய்யப்பட்டது. இது அப்போதைய உதய கிரியின் (Vishnupadagiri) விஷ்ணு கோயிலின் எதிரில் இருந்த கொடிமரம். தூணின் உச்சியில் கருடன் இருந்ததாக நம்பப்படுகிறது. பின்னாளில், அதாவது 10ம் நூறாண்டில் தற்போது இருக்கும் பகுதிக்கு ராஜபுத்திர அரசர் ஆனங்பாலினால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. இந்த இடத்திலும் விஷ்ணு கோயிலின் முன்னால் கம்பீரமான கொடிமரமாக இருந்தது.

இருந்துட்டு போகட்டும்,  ஆனால் இன்னும் இந்த தூணின் துருப்பிடிக்காத அதிசயம் தான் உலகத்தை ஆச்சர்யப்படுத்துவதாகவே இருக்கிறது.

கான்பூர் ஐ.ஐ டியை சேர்ந்த வல்லுனர்கள் இந்த தூண் துருப்பிடிக்காததன் காரணத்தை ஆராய்ந்தார்கள்.   கடினமான ஒரு முலாம் பூச்சு இதனை துருவில் இருந்து தக்கவைத்து இருப்பதாக சொல்கிறார்கள்.  மேலும் இதில் உள்ளீடு செய்யப்பட்ட பாஸ்பரஸின் (phosphorous) கலப்பு தன்மையே துருப்பிடிக்காத தன்மையை அதற்கு தருவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். ( இதை பற்றிய விரிவான ஆய்வு புத்தகம் 2001 ல் வெளியாகி இருக்கு Delhi iron Pillar new insights by R.Balasubramaniam )

முக்கியமாக இதை உருவாக்கும் போது கடைபிடிக்கப்பட்டிருக்கும் வார்பட டெக்னாலஜி ஒரு பெரும் ரகசியத்தை நமக்கு சொல்வது என்னன்னா ? அது இந்தியர்களின்  “புத்திக்கூர்மை” 

இதே வகையை சேர்ந்த பிரம்மாண்ட இரும்புத்தூண்கள் மத்தியபிரதேசத்தின் தார் மாவட்டத்தில் லாட் மசூதியில் (The Lat Masjid ) காணக் கிடைக்கின்றன. (லாட் = தூண்)



அந்த கால கட்டங்களில் இந்தியாவில் இருந்து போர்வாள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. அலெக்ஸாண்டருக்கு போர்வாள் பரிசு அளிக்கப்பட்டுள்ளதாக வரலாறு.

மேலும் குத்புதீன் பற்றி சில தகவல்கள் :

இஸ்லாமிய மதத்தை இந்தியாவில் பரப்புவதில் முழுமூச்சாக இருந்தவர் சுல்தான் குத்புதீன் அய்பெக்.  இவரால் உடைத்து தள்ளப்பட்ட இந்துக் கோயில்கள் ஏராளம். இப்படி இடிக்கப்பட்ட கோயில்களின் தூண்களையும் படிக்கற்களையும் கச்சிதமாக மசூதி கட்டுவதற்கு பயன்படுத்தி கொண்டார்.

குத்புதீன் துருக்கிய இனத்தை சேர்ந்தவன். அடிமையாக ஒரு வியாபாரிக்கு விற்க்கப்பட்டவன். முகமது கோரியின் கண் பார்வையில் பட்டு குதிரை படை பிரிவில் தலைவனான், பின் பிரதம தளபதியாக உயர்ந்தான். பின்னாலில் கோரியால் பிரதி நிதியாக அமர வைக்கப்பட்டு அடிமைகளின் சாம்ராஜியத்தை நடத்தி காட்டியவர் குத்புதீன். கோரி ஆப்கானிஸ்தானுக்கு போகும் வழியில் மர்மமாக கொல்லப் பட்டார்.

குத்புதீன் நான்கே வருசம் ஆட்சி செய்தான் எதிர்பாரத விதமா, விளையாட்டின் போது குதிரையில் இருந்து எசகு பிசகா வீழ்ந்து இறந்தான்.  குதுப்மினாரின் முதல் அடுக்கு இவரால் எழுப்பப்பட்டது.

எத்துணையோ பிரம்மாண்ட மாளிகைகள் இருந்த இடம் தெரியாமல் போக வரலாற்றில் ஒரு அடிமையால் நிறுவப்பட்ட குதுப்மினார் இன்றைக்கும் அவர் ஆட்சியின் சாட்சியாக இருக்கு.

                                                                  *********

கீழே உள்ள பிரம்மாண்ட ஆலமரம் 250 ஆண்டுகள் பழமையானது. இதுதான் ஆசியாவிலேயே பெரிய பரப்பளவை கொண்டிருக்கும் மரம்.  அதாவது இந்த ஒரு மரமே வேர்களையும் கிளை விழுதுகளையும்(3300) பரவ விட்டு பெரிய காடுபோல் காணப்படுகிறது (சுமார் 4 ஏக்ரா ). இன்னொரு ஆச்சர்யம் இந்த விருட்சம் கிளைவிழுதுகளில் தான் உயிர் வாழ்கிறது அதாவது நடு மரம் இப்ப இல்ல. இது இன்னும் கிளைவிட்டு படர்ந்து வளர்ந்துட்டே இருக்கு பல உயிர்களின் புகழிடமாய்.
இது உள்ள இடம்  ஹெளரா (Howrah, India)






Download As PDF

Saturday, July 13, 2013

டுவோ இரைச்சல் - உங்களுக்கு கேட்குதா?

“டுவோ ஹம்” என குறிப்பிடப்படும் ஒருவித ஓசை 1993 ல் விமர்சிக்கப்பட்ட ஒரு விநோத ஒலி.  நியூ மெக்ஸிகோவின் டுவோ தேசத்தில் இந்த ஒலி உணரப்பட்டது. இந்த ஒலி எதனால் ஏற்பட்டது ? ஆய்வு முடிவுகளுக்கு அறுதி இட்டு கூற முடியாததால் இது விடை தெரியாத விநோதங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டது.

இந்த விநோத இரைச்சல் எல்லோருக்கும் கேட்கவில்லை மக்களில் 2% பேருக்கு கேட்டிருக்கிறது. காதொலி கருவி மாட்டியிருந்தவர்களுக்கு பெரிய பிரச்சனையை கொடுத்திருக்கிறது. இந்த மீ ஒலி இரைச்சல் 30 முதல் 80Hz குள் என மதிப்பிடப்பட்டது.(The sound was extremely low on the frequency scale ­ between 30 and 80Hz.)

இது குறித்து அப்போது கிளரப்பட்ட சந்தேகங்கள் :

மலை இடுக்குப் பள்ளத்தாக்குகளில் விபத்துகுள்ளான வேற்றுகிரக வாகனத்தில் இருந்து இந்த சப்தம் வந்திருக்கலாம்.

இராணுவ இரகசிய கருவிகளால் ஏற்பட்ட ஒலி அல்லது Extremely Low Frequency ( or ELF) சோதனை.

எரிமலை சீற்றத்தின் அறிகுறி

நிலத்தினடியில் நகர்ந்த தட்டுகளின் ஓசை.

இப்படி இதுபற்றி பல சந்தேகங்கள் இருந்த போது நியூரோபோன் ஆராய்சியாளர்கள் தெரிவித்தகருத்து.   “ நம் காது மட்டுமே ஒலிகளை உணர்வதில்லை நம் உடலின் மேல் தோல் ஒலி அதிர்வுகளை நம் மூளைக்கு கடத்துகிறது.  இம்மாதிரியான ஒலிகளை நாம் இந்த வகையில் உணர்கிறோம். ”

இந்த நுண் ஒலியை பதிவும் செய்திருக்கிறார்கள். உங்களுக்கு கேட்குதா ?


இதை பற்றிய கணக்கெடுப்பு ஆராய்ச்சி எல்லாம் நடந்தது. மூன்றாண்டுகளுக்கும் மேலாக, உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை என்கிறார்கள்.

காணொளி

Download As PDF

Tuesday, April 16, 2013

ட்ரோபா வட்ட கல் தட்டுகளும்.. வேற்றுகிரக வாசிகளும்..


சீன தொல்பொருள் ஆராய்சியாளர் ச்சூ-பு-அய் (Chu Pu Tei ) இந்த  வட்ட (Dropa Stones) கல்தட்டுகளை 1937 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு குகையில் கண்டுபிடித்தார்.

மேற்படி, குகை சீன-திபெத் எல்லையில் உள்ள பயன்கரஉலா (BayanKara-Ula) என்ற சிகரத்தில் உள்ளது.

அந்த குகையில் பல சவக்குழிகள் இருந்தன. ஒவ்வொரு சவக்குழியிலும் மூன்றடி உயரமே உள்ள எழும்புக்கூடுகள் இருந்தன. ஒவ்வொன்றின் மேலும் ஒரு அடையாளம் போல் இந்த வட்ட கல் தட்டுகள் இருந்தன.

வட்ட தட்டில் சீரான வட்டத்துளை மையத்தில், மையத்தில் இருந்து சுழற் சுற்று கோடுகள் இருந்தன. (பழைய இசைத் தட்டுகள் போல.) பார்பதற்கே அவை கோடுகள் போல இருந்தன ஆனால் அவை (மைக்ரோ) மிக நுண்ணிய புரியாத குறியீட்டு எழுத்துக்கள்.



இவருக்கு பின், பெய்ஜிங் தொல்லியல் அகாடமியை சேர்ந்த பேராசிரியர் சும்-உம்-நூய் (Professor Tsum Um Nui, of the Beijing Academy for Ancient Studies ) இதுபற்றிய சில விளங்கங்களை கொடுத்தார். இந்த எலும்பு கூடுகள் வேற்றுகிரக வாசிகளாக இருக்கலாம் என்றும் அவர்கள் பெரிய தலைகளை கொண்ட குள்ளமான அசிங்கமான தோற்றத்தினர்.  மேலும் அந்த வேற்றுகிரக வாசிகளை ட்ரோபா மலைவாழ்மக்கள் தங்கள் மூதாதையர் என நம்பியதாகவும் தெரிகிறது.  அதனாலேயே இந்த வட்டக்கல் தட்டுகள் ட்ரோபா கற்கள் என பெயரிடப்பட்டது. ஏதோ விபத்து அல்லது ஏதேனும் காரணத்தினால் இறந்து போயிருக்கலாம் என்றும் சொன்னார்.

ஆரம்பத்தில் இந்த மண்டை ஓடுகள் மனிதக் குரங்கினுடையது (ஏப் வகை) என்றே நினைத்தனர்.

பின்னர்,இந்த தட்டுகளின் காலங்கள் 10000 முதல் 12000 வருடங்களுக்குள் இருக்குமென கணிக்கப்பட்டது.

அந்த குகைசுவர்களில் பூமி, உதய சூரியன்,நிலா,நட்சத்திரங்கள் இன்னும் ஏதேதோ புரியாத குறியீடுகள் இருக்கிறதாம், ஒரு வரைபடம் போல.


வேற்று கிரக வாசிகள் பூமியில் இறங்கி இருக்க வேண்டும் என்றும் அப்போது அவர்களின் வாகனம் விபத்துக்குள்ளாகி விட்டது. இந்த வேற்று கிரக வாசிகள் இக்குகைகளில் இருந்த பழங்குடிகளை கொன்று விட்டார்கள் அதோடு  அவர்கள் திரும்பி போக வாகனம் இல்லாமல் இறந்து போயிருக்கலாம். சுற்றியிருந்த மலைவாழ்மக்கள் அவர்களை ட்ரோப்பாக்கள் என்கின்றனர் ( கர்ண பரம்பரைக் கதைகளும் உண்டு !! ).

1965 ல் மேலும் 716 வட்டத்தட்டுகள் இந்த குகையில் கிடைத்ததாம்.

தட்டுகளில் கோபால்ட் மற்றும் பல உலோக கூறுகள் உள்ளன. மின்சாரம் செலுத்தப்பட்டால், இதனுடாக கடத்தப்படுகிறது. வெவ்வேறு குறியீடுகள் ஒவ்வொரு தட்டிலும் இருப்பதால் இது ஏதேனும் சர்க்யூட்டாக இருக்குமோ ? என்ற சந்தேகமும் உள்ளது.

(oscillograph )ஆசிலோகிராப் கொண்டு சோதனை செய்யப்பட்டதில்
” ஹம் “ என்ற ரிதம் மட்டுமே உணரப்பட்டது.

1965 உடன் இதைப்பற்றிய ஆராய்சிகள் கைவிடப்பட்டதாக தெரிகிறது.

படத்தில் காணப்படும் இந்த கற்கள் இப்போது இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் இல்லை. அப்போதைய கால கட்டத்தில் (1938ல்) இவை அனைத்தும் ரஷ்யாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதன் பின் என்ன ஆயிற்று ? தெரியவில்லை ஆனால் இந்த நிழற்படம் மட்டுமே எஞ்சியுள்ளது.

இரும்புத்திரை நாடும், பெருஞ்சுவர் நாடும் இரகசியம் காத்தன. விடை தெரியாத மர்மங்களில் இதுவும் ஒன்று.
Download As PDF

Thursday, April 11, 2013

ஈஸ்டர் தீவு சிலைகளின் இரகசியம்


பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ள தீவு ஈஸ்டர் தீவு.
இத்தீவு ஜகோப் ரோகுவீன் எனும் டச்சு மாலுமியால் (Dutch  explorer )
வெளியுலகுக்கு அறியபடும் பகுதியானது.

இத்தீவின் பெரும் அதிசயமாக கருதப்படுபவை ஒரே வடிவமைப்பில் சிறிதும் பெரிதுமான 887 கற்சிலைகள்.  இந்த சிலைகளை ”மோய்” (Moai) என குறிப்ப்பிடப்படுகின்றன. ரப்பா நூயி (Rapa Nui) எனும் பழங்குடிகளால் இது வடிவமைக்கப்பட்டது.

10000 ஆண்டுகளுக்கு முன்பு இத்தீவில் எரிமலை சீற்றம் இருந்ததாக மதிப்பிடப்படுகிறது.

ஈஸ்டர் தினத்தில் (1722) டச்சுக்காரர்கள் இத்தீவில் இறங்கியதால் ஈஸ்டர் தீவு என அழைக்கப்படுகிறது. பழைய பெயர் (Rapanui) ரபானூய். சிந்து, ஹரப்பா இப்படி வரிசையில் இது “கடைசி நாகரீகம்” என அழைக்கப்படுகிறது. இவர்களின் கலாச்சாரமும் ஒரு புதிர். ஒரே வடிவமைப்பில் உள்ள இந்த கற்சிலை ஏன் எதற்காக என்ற கேள்விக்கு பல வியாக்கியானங்கள் கொடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு சிலையும் சராசரியாக 12 அடிகள் உள்ளன.
30 முதல் 40 டன் எடையுள்ள 30 அடி உயரசிலைகளும் உண்டு.
முழு உருவச் சிலைகள் என்றில்லாமல் மார்பளவு மற்றும் இடுப்பு வரைக்குமான சிலைகள் இவை.

உருவங்களின் சாயல் ஒரே மாதிரியாக இருக்கின்றன. சிலைகளின் பின் புறம் குறியீடு அல்லது சித்திர எழுத்துகள் செதுக்கப்பட்டு உள்ளன.

சில எரிமலை கற்களால் வடிவமைக்கப்பட்ட சிலைகள்.

சிலைகளின் அமைப்பை வைத்து இத்தீவில் இரண்டு இன பழங்குடிகள் இருந்திருக்கலாம் என உறுதிப்படுத்துகிறார்கள்.  சிலைகளில் ஒருவகை குட்டை காதுகளை கொண்டும் இன்னொரு வகை நீண்ட காதுகளை கொண்டும் இருக்கிறது.

நீண்ட காதுகளை கொண்டவர்கள் ஆட்சி அதிகாரத்தை கொண்டிருக்கலாம்.  குட்டைகாதுகளை கொண்டவர்களை இவர்கள் அழித்திருக்க கூடும்.

இவர்கள் அமெரிக்க இந்தியர்கள் அல்ல பாலினீஸியன்கள்.
மூலக்கூறு (டிஎன் ஏ) ஒப்பீட்டின் படி பாலினீஸியன்களோடு ஒத்துப்போகிறது.
இவர்கள் சுமார் 400 A.D வாக்கில் இங்கு குடியேறி இருக்கலாம்.


சில எரிமலை வாய்ப்பகுதியில் தீவை நோக்கி நிறுத்தப்பட்டுள்ளன. பல டன் கொண்ட இவை எப்படி நிறுவப்பட்டது என்பது அடுத்த மர்மம்.

ஈஸ்டர் தீவு தீவின் தொன்மையான பெயர் ரப்பாநூயி, 15மைல் நீளமும் 10மைல் அகலமும் கொண்ட  ஒரு முக்கோணத்தீவு, பரப்பளவு 163 சதுர கிலோமீட்டர்கள். சிலியின் கட்டுப்பாட்டில் இத்தீவு உள்ளது.


இத்தீவில் சுமார் பதினோராயிரம் பழங்குடிகள் (பூர்வ குடிகள்) இருந்திருக்கலாம் எனவும்,ஐரோப்பியர்கள் நுழைந்த போது (1877) சில நூறு மட்டுமே இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

சில கணிப்புகள் :

இச்சமூகத்தில் நரமாமிசம் உண்ணும் பழக்கம் அல்லது நரபலி இருந்திருக்கிறது.

இந்த சிலைகள் தமது கடவுளுக்கு பிரியமானது என்று நிறுவப் பட்டிருக்கலாம்.

வேற்று கிரக வாசிகளுக்கும் இத்தீவிற்கும் தொடர்பு இருந்து இருக்கவேண்டும்.

சக்கரைவல்லிக் கிழங்கு இங்கு இருந்திருக்கிறது 2300 மைல் தொலைவில் சிலியில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம்.

வானியல் பற்றிய அவர்கள் அறிந்திருந்தனர்.

மிக கனமான இந்த கற்சிலைகளை எப்படி உயரமான இடங்களில் கொண்டு சென்று நிறுத்தினர் என்பதே ஆச்சர்யமான ஒன்று. இது குறித்து பல ஆண்டுகளாக பலவிதமான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன ( Easter Island Statue Project.) உருளைகள், நீண்டகயிறுகள், சறுக்கு பலகைகள் இப்படி இவற்றை கொண்டு சோதித்து பார்க்கப்பட்டன. சுழற்றி சுழற்றி இவை கொண்டுசெல்லப்பட்டிருக்குமா?


(ஆராய்சியின் விழைவாக சில சிலைகள் உடைந்து போய் இருக்கின்றன)

ஹவாய் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் டெரிகன்ட் என்பவரும், கலிபோர்னிய மாகாண பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் கார்ல் லிப்போ மற்றும் தொல்லியல் ஆய்வாளர் சர்ஜிகோ ராபு இவர்கள் 12 ஆண்டுகால தொடர் ஆய்வின் இறுதியில் கற்சிலைகள் இப்படித்தான் நிறுவப்பட்டிருக்கும் என்ற முடிவிற்கு வந்ததோடு 18 பேர்களை கொண்டு செயல்படுத்தியும் காட்டினர். (இதற்கு முன் பல குழுக்கள் இது குறித்த உறுதியான முடிவை எட்ட வில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்)

இந்த சிலையின் அடிப்பாக அரைவட்ட அமைப்பு, ஈர்ப்பு விசைக்கு தகுந்தாற்போல் செதுக்கப்பட்ட அளவீடு இவை சிலைகளை அவர்கள் நகர்த்தி செல்ல முடிந்திருக்கிறது.


12 அடி உயரமுள்ள 5டன் மோய் சிலையை, இக் குழு படத்தில் உள்ளது போல் மூன்று நீண்ட கயிறுகள் சிலையின் தலையில் கட்டப்பட்டு சிலையின் பின்புரம், பக்கவாட்டின் இருபுறமும் ஏற்படுத்தும் அசைவுகள் இந்த சிலையை பல மீட்டர்கள் தூரத்திற்கு உருளைகள் இன்றி நகர்த்தி காட்டியது.
                                                             விளக்கப்படம்

முன்பு கடின நார்போன்ற ஒருவகை புற்கள் இங்கு இருந்திருக்கின்ற அவற்றை அக்கால மக்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். (இப்போது இல்லை)
                                 கார்ல் லிப்போ மற்றும் பேராசிரியர் டெரிகன்ட்

பேராசிரியர் டெரிகன்ட் [Terry Hunt ] எழுதிய The Statues that Walked: [Unraveling the mystery of Easter Island ] எனும் புத்தகத்திற்கு அமெரிக்க தொல்லியல் சொசைட்டியின் 2011 ஆம் ஆண்டிற்கான விருது கிடைத்துள்ளது.

 காணொளி

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)