Followers

Showing posts with label Perur Temple. Show all posts
Showing posts with label Perur Temple. Show all posts

Wednesday, May 30, 2012

சுவடுகளைத் தேடி ( பகுதி 5)



வரலாற்று சுவடுகள் |  பேரூர் கல்வெட்டுகள் | கொங்கு வரலாறு 


பேரூர் மற்றும் பட்டீஸ்வரர் கோவிலின் சிறப்பு கொங்கு வரலாறு பற்றியும் கல்வெட்டுகளின் ஆதரங்களின் மூலம் அறியலாம்.

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வடகிழக்கில் தெப்பக்குளத்தில் இருந்து அரசம்பலவானர் சன்னிதிக்கு செல்லும் ஒரு சந்து தடத்தில் இடிந்த பாழடைந்த கோவில் 2010ல் புதுபிக்கப் பட்டது. இது அழகிய சிற்றம்பலம் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் அடிபாகத்தில் எட்டு கல்வெட்டுகள் உள்ளன அவற்றில் ஐந்து மட்டுமே பூர்த்தியானவை.

இந்த கல்வெட்டுகளில் தானம் கொடுக்கப்பட்ட விவரங்கள் காணப்படுகிறது. இதில் குறிப்புனரப்பட்ட வார்த்தைகள் ராஜாத்தி மலசெம்பியன், கீழானடிவதி, திருவானை வாய்க்கால்,கண்ணாற்று சிவ பாத சேகர சதுர்வேதி மங்ககலத்துசபை, வீரகேரள விலாடகுல மாணிக்கவதி,அதிராஜராஜவாய்க்கால் முதலிய எல்லை பெயர்களும்.
வீரசமக்கர்கள்,அம்மணங்கார்,சேனாதிபதிகள், கடமை, எல்லை, அகவை, முதலிய பெயர்களும் காணப்படுகின்றன.

விக்கிரம சோழன் : 

இவன் கொங்குநாட்டை ஆண்டவன். சோழநாட்டு விக்கிரமன் அல்ல. இவனைப்பற்றி கொங்கு நாட்டில் 68 கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது. பேரூரில் இவனது 12 முதல் 27 ஆண்டுகள் வரையிலுமான ஆட்சியையும், வெள்ளலூரில் மூன்று ஆண்டு முதல் 18 ஆண்டு வரையிலும் சாசனங்கள் கிடைத்துள்ளன. இவனுடைய கல்வெட்டுகளில் பேரூர் பட்டீஸ்வரருக்கு அக்காலத்தில் திருவான் பட்டியுடையார் என்ற பெயர் வழங்கி வந்ததாக தெரிய வருகிறது.

வீரசோழன் :

இவனைப்பற்றிய ஒரே ஒரு சாசனம் பேரூரில் உள்ளது. இரு கொங்கும் ஆண்டவன், கலிமூர்க்கம்மன் என்ற பட்ட பெயர்களும் உண்டு. இவன் தான் உடுமலைப் பேட்டை தாலுக்கா, சங்கிராம நல்லூர் வீரசோளீசுரமுடையார் ஆலயம் கட்டியவன்.

வீரராஜேந்திர சோழன் : 

இவனைப்பற்றி 141 சாசனங்கள் கிடைத்துள்ளது. இவனது காலத்தில் ஆனையச்சு, சீயக்கி என்ற நாணயங்கள் வழங்கி வந்தன. இவன் காலத்து பேரூர் சாசனத்தில், பாண்டிய நாட்டு ஒரு வியாபாரி பாம்புணிக்கிழவன் அப்பன் என்பார், பேரூர் திருவான் பட்டியுடையாருக்கு சந்திர தீபம் இரண்டு தானம் செய்ததும், அதற்கு வேண்டிய பொருள் கோவிலில் சேர்த்ததும் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது.

வீரராஜேந்திரன் : 

இவரது பட்டப் பெயர் : கோனேரின்மை கொண்டான் இப்பெயரில் 55 கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன.  அவைகளில் பேரூரில் மட்டும் மூன்று கிடைத்துள்ளது. இவன் காலத்து பேரூர் சாசனத்தில் ராஜதுரோகிகளின் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு, கோவில் களுக்கு கொடுக்கப்பட்டது.  திரிபுவனசிங்கதேவன் என்பான் ராஜ துரோகி ஆனதால் அவனது சொத்துக்கள் எல்லாம் கைப்பற்றி, பேரூர் திருவான்ப்ட்டியுடையாருக்கு ராஜராஜசந்தி என்ற விழாவுக்காக உச்சி சந்து அமுதுக்காக அந்த ராஜதுரோகியின் புத்தூர், கோளூர், குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள பேரூர் நாட்டு விளைநிலங்களை எல்லாம் மார்கழி மாதம் 4ம் நாள் கொடுத்ததாக விபரங்கள் உள்ளன.

வரலாற்று சுவடுகள் தொடர்கிறது ...


பிற பகுதிகள் :


சுவடுகளைத் தேடி

சுவடுகளைத் தேடி(பகுதி 2)

சுவடுகளைத் தேடி(பகுதி 3)

சுவடுகளைத் தேடி(பகுதி 4)


Download As PDF

Friday, May 4, 2012

சுவடுகளைத் தேடி... (பகுதி 4)


                           << சுவடுகளை தேடி பகுதி(3) படிக்க இங்கு சொடுக்கவும்>>

பேரூர் கோவில் பற்றிய குறிப்புகளை பெரிய புராணத்தில் ஆயர்கோன் கலிகாமர்), பேரூர் புராணம், மும்மணிக்கோவை பாடல்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆறாம் நூற்றாண்டில் (A.D) ராஜசிம்மவர்மன் என அழைக்கப்பட்ட நரசிங்க போதரன்யா -II பல்லவ ஆட்சியின் போது இக்கோயில் சீரமைக்கப்பட்டதாக குறிப்பு உள்ளது.

இந்துக்கள் மற்றும் முஸ்லிம் களிடையேயான உறவு திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலிகான் பேரூர் விஜயக்குறிப்புகளில் அறியலாம். மேலும் "தீவட்டி சலாம் " எனும் மாலை பூசை அவர்களின் பெயரால் செய்யப்படுவதை எடுத்துக்காட்டாக காண முடிகிறது.

திருவாதிரை, பங்குனி உத்திரம் சிறப்பான விழாக்கள். இன்றும் கேரளத்தினர் ஒவ்வொரு ஆண்டும் "மகாலய அமாவாசைக்கு " வந்து நொய்யலில் முன்னோர்க்கு வழிபட்டு செல்கின்றனர்.

பேரூர் கோவிலை சிறப்பித்து பாடல்கள் எழுதிய சான்றோர் :

அவிநாசிக் கவிராயர் (திங்களூர் நொண்டி நாடகம்), கந்தசாமி சுவாமிகள்(பேரூர் கோவை மற்றும் ராமானந்த சுவாமி பிள்ளைத்தமிழ்), சிற்றம்பல கவிராயர் (பாசுரம் (Hymn) பேரூர் மற்றும் அவிநாசி கோவில்கள்), பெரும்புலவர் நடேச கவுண்டர்(மயில் விடு தூது), 12ஆம் நூற்றாண்டிணன் குணவீர பண்டிதர் (கலந்தை  -கிணத்துகடவு அருகில் உள்ள ஊர்) தமிழ் இலக்கணம் மற்றும் நேமிநாதம், நந்தி மாலை) குறிப்பிடத்தக்கவர்கள்.

பேரூர் கனகசபை மண்டபத்தில் யானை யுரி போர்த்த மூர்த்தி, ஆறுமுகப்பெருமான், ஊர்த்துதாண்டவர், நர்த்தன கணபதி, பிச்சாடனார், அக்னி வீரபத்ரர், அகோர வீரபத்ரர், ஆலங்காட்டு காளி, உள்ளிட்ட எட்டு சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களாகும். வியத்தகு வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.









யானையுரி போர்த்த மூர்த்தி :

ஒரு யானையை பிளந்து அதன் தலை மேல் ஒற்றை காலில் நிற்பது போன்றதோற்றம். நேர்த்தியான நீள்வட்ட வடிவம் யாணையின் நான்கு கால்கள் வெளி தெரிகிறது. நான்கு ஜோடி கைகளின் அபிநயம் நான்குவிதமான தேற்றப் பொழிவு. . விரல்களின் நக அமைப்பு, அணிந்துள்ள அணிகலன்களின் துள்ளியம் நம்மை வியக்க வைக்கிறது.













ஆறுமுகப்பெருமான் :

தமிழ் கடவுள் முருகன் மயில் வாகனத்தின் மேல் அமர்ந்துள்ள நிலை.மயிலின் வாயில் பாம்பு. மயில் இறகின் தெளிவு.  ஒரே வடிவமைப்பிளான அறு முகங்கள், ஆறு சோடி கைகள். ஒவ்வொரு கையும் ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்துகிறது.













ஊர்த்துதாண்டவர் :

பார்ப்பவர்களை ஒருகணம் ஸ்தம்பிக்க செய்யும் தாண்டவம் புரியும் நிலை. ஒவ்வொரு கையையும் மறைத்து பார்பதாக கற்பனை செய்தால் நேரிலே நடனம் புரியும் அற்புதத்தை உணரலாம். எட்டு திசைக்கு எட்டு சோடி கைகளின் அபினயம்.














நர்த்தன கணபதி :

எலி வாகனத்தின் மீது நடம்புரியும் தோற்றம்.


















பிச்சாடனார் :

நளினமான அழகிய தேற்றப் பொழிவு.















அக்னி வீரபத்ரர் :

கோபத்துடன் வாலேந்தி நிற்கும் தோற்றம்.














அகோர வீரபத்ரர் :

சூலாயுத்தால் முயலகனை குத்துவது போன்ற தேற்றம். தீயதை (தீவினை) அழிப்பதை நினைவு படுத்துகிறது.














ஆலங்காட்டு காளி :

சிலையின் இடப்புறம் நின்று நோக்கினால புன்முருவலும்.  வலப்புறம் நின்று நோக்கினால் ருத்ரமும் ஒருங்கே கொண்டு விளங்கும் காளி.









குறிப்பு :  இச்சிலைகளை நேரில் நீங்கள் பார்த்தால் முன்புரம் கம்பி வலை போட்டிருப்பார்கள்.  படத்தில் வலை இல்லா தோற்றம்.

Download As PDF

Friday, April 20, 2012

சுவடுகளைத் தேடி... (பகுதி 3)

                                                                 <<முதல் பகுதியை படிக்க இங்கு சொடுக்கவும்>>

கோயில் கட்டிடக்கலைக்கு பல்வேறு அம்சங்கள் அல்லது நுணுக்கங்கள் தேவைப்படும்.  கட்டிட சாஸ்திரங்கள் அடுத்து கலை நுணுக்கம் இவை இரண்டும் அடிப்படை எனலாம்.  சிலை மற்றும் கற்தூண்கள் செய்ய தேர்ந்தெடுக்கப்படும் கல்வகை மற்றும் கற்பாறையின் ஸ்திரதன்மை முக்கியமானது.

ஓவியம் மற்றும் நாட்டிய முத்திரைகள், பாவம், நளினம், கணக்கீடு, கற்பனை திறன், நுணுக்கம், முக்கியமாக பொருமை, கலையின் மேலான பக்தி இவையெல்லாம் இல்லாமல் ஒரு கற்சிலை உயிர்ப்பு தன்மை பெருவதில்லை.

சிதம்பரம் கோவில் சிலைகள், தூண் அமைப்பு, இடவமைப்பு, தத்துவங்கள், இப்படி பல ஒப்புமைகளை உடையதாக பேரூர் கோயில் திகழ்கிறது அதனாலே இது "மேலை சிதம்பரம்" என அழைக்கப்படுகிறது. இவ்வளவுக்கும் காரணம் அக்கோவிலின் நிர்மானித்தவரும் அக்குழுவும் இங்கும் பணிசெய்திருப்பது தான்.

கனகசபை மண்டபம் :

நடராஜரும், சிவகாமசுந்தரியும் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் இந்த கனகசபை மண்டபத்திற்கு தனி வரலாற்றுச் சிறப்பு உண்டு.

பேரூர் கோவிலின் கனகசபை மண்டபம் கி.பி. 1625 முதல் 1659 வரை தொடர்ந்து 34 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்ப்பட்டது. அதாவது சுமார் 382 ஆண்டுகளுக்கு முன் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் சகோதரர் அழகாத்திரி நாயக்கரால் கட்டப்பட்டது.

இந்த கனகசபை மண்டபம் 36 தத்துவங்களை உணர்த்தும் வகையில் 36 தூண்களை கொண்டது. மண்டபத்தின் மேற்கூரையில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது.  இவை பல்வேறு கதைகளை சொல்கிறது.

சபை மண்டபத்தின் மேற் கூரையின் மையத்தில் நான்கு கற் சங்கிலிகள் மற்றும் அதன் உள்வட்டத்தில் தாமரை வடிவம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது.  இந்த கற் சங்கிலியில் பல ஆண்டுகளுக்கு முன் ஊஞ்சல் கட்டி விக்கிரக  வழிபாடு நிகழ்த்தப்பட்டு வந்தது.   அப்படி ஊஞ்சல் ஆட்டப்படும் போது கூரையின் தாமரை வடிவ கற்சிலையின் நடு மொட்டு கரகரவென சுழழும் என கேள்விப்பட்டுள்ளேன். அதனாலெயே இது "சுழழும் தாமரை" என அழைக்கப்படுகிறது.  கற்சங்கிலி ஒரு கண்ணி உடைந்த பிற்பாடு இப்பூசை வழிபாடு வேறு மண்டபத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது.

கனகசபை மண்டபத்தில் யானை யுரி போர்த்த மூர்த்தி, ஆறுமுகப்பெருமான், ஊர்த்துதாண்டவர், நர்த்தன கணபதி, பிச்சாடனார், அக்னி வீரபத்ரர், அகோர வீரபத்ரர், ஆலங்காட்டு காளி, உள்ளிட்ட எட்டு சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களாகும். வியத்தகு வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.  (இச்சிற்பங்களின் படங்களை அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்)

கற்தூண் சிற்பங்களில் ஒரு உண்மை சம்பவத்தின் ஆதாரம் ஒன்று அறியக் கிடைக்கிறது.



"முன்னங்கால்கள் இரண்டை தூக்கி கொண்டுள்ள மூர்க்கமான குதிரையின் மீது ஒரு வீரன். குதிரை தூக்கிய கால்களின் கீழே சிறுத்தையுடன் போரிடும் மற்றொரு வீரன். அவ்வீரன் ஒருகையில் கேடயம் மறுகையில் இருக்கும் வால் சிறுத்தையின் உடலில் புகுந்து மறுபுறம் வெளிப்படும் அதன் முனை"

இன்னொரு சிறப்பு மேற்சொன்ன தோற்றம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அச்சு அசலாக எதிர் எதிரெ இடது வலது நிலைகளுடன் பார்பவர்களை பிரமிக்க வைக்கிறது. தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலையின் மகோன்னதத்தை பறைசாற்றுகிறது.

மேற்சொன்ன கற்தூண் சிற்பங்கள் நான்கில் ஒன்று உடைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. அதாவது அந்த தூணின் குதிரையின் இருகால்கள் மற்றும் குதிரைவீரனின் இரு கால்கள் மட்டுமே எஞ்சி நிற்கிறது. மேற்சொன்ன மற்ற எவையும் இல்லை.

இது பற்றிய காலங்காலமாக ஒரு உண்மை சம்பவம் சொல்லப்பட்டு வருகிறது.

ஒரு இளைஞன் தம் தகப்பனாரை தேடி நெடுந்தூரத்திலிருந்து பேரூர் வருகிறான். சிறு குழந்தையாக இருக்கும் போதே இங்கு சிற்பம் செய்ய வந்த தன் தகப்பனை பார்பதற்காக இங்கு தேடி வருகிறான்.

அப்போது இக்கோயிலின் கனகசபை மண்டபம் முக்கால் பாகம் முடிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.

சிற்பக்கலை தெரிந்த அவன் இங்கேயே பணி செய்து சிற்பியான தமது தந்தையை தேட முடிவு செய்கிறான்.  பல நாட்கள் சென்ற நிலையில் மேற்சொன்ன கற்றூணை காண்கிறான்.  அந்த தூணில் ஒச்சம் இருப்பதாக கூறுகிறான்.   அதாவது நன்கு ஆராயாமல் சிலை வடிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தூணில் நீரோட்டம் மற்றும் மிகச்சிறு தவளை போன்ற தேரை கல்லினுள் இருப்பதாக அருதியிட்டு கூறுகிறான். (கல்லினுள் தேரை என்பது மாம்பழத்தினுள் வண்டு எப்படியோ அது போல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்)


இது போன்று ஒச்சம் உள்ள கற்கலில் சிலை வடிக்க கூடாது என்பது மரபு. பிற்காலத்தில் இந்த தூண் பழுதடையும் அல்லது சுவாமி சந்நிதியில் கல்லினுள் உயிர் உள்ள சிலை இருக்ககூடாது.

இந்த சர்சையின் இறுதியில் இந்த கல் தூண் உடைக்கப்படுகிறது. அதிலிருந்து தேரை இருப்பது நிரூபிக்கப்பட்டது.   அந்த இளைஞன் தேடிவந்த தந்தை வேறு யாருமல்ல அழகாத்திரி நாயக்கர் என்று சொல்கிறார்கள்.  இந்த இளைஞன் பிரதி உபகாரமாக தன் கையால் செய்து கொடுத்த சந்தன மரத்தாலான கலை வேலைப்பாடு மிக்க பெரிய ஜன்னல் இன்றும் கலை நயத்தை பறைசாற்றுகிறது.

                                                               <<சுவடுகளைத் தேடி ...தொடர்கிறது >>
Download As PDF

Saturday, April 14, 2012

சுவடுகளைத் தேடி... (பகுதி 2)



இதற்குமுன்னர் பிறவா பனை எனும் அதிசய மரத்தை பற்றி எழுதி இருந்தேன்.

             இன்னொரு மரம் "பிறவா புளி" எனும் புளிய மரம் பேரூர் பேருந்து நிறுத்ததின் அருகில் உள்ளது. பல நூற்றாண்டுகளை கடந்த இம்மரத்தின் புளியங்கொட்டையை எங்கு விதைத்தாலும் முளைப்பதில்லை.  இது குறித்து ஆராயும் போது சில உண்மைகள் பிடி பட்டன. அதாவது இந்த புளியம் பழமானது பழுத்த நிலையில் புளியங்கொட்டை முற்றி நிலத்தில் விதைத்தால் முளைக்கும் ஆனால் இந்நிலைக்கு வரும் சூழ்நிலையில் விதையில் துளை ஏற்பட்டு பட்டுபோய் விடுகிறது.  ஆனால் எது எப்படியோ மக்களிடம் ஒரு நம்பிக்கையை மட்டும் ஆணித்தரமாக விதைக்கிறது அது

"இவ்விடம் பிறந்தோருக்கு மறுபிறப்பில்லை என்பதை உணர்த்துகிறது "

           முற்பிறவி, மறுபிறவி இந்த ஆராய்ச்சிக்கு நாம் செல்ல போவதில்லை. நம்புவதும் நம்பாமையும் அவரவர் கருத்து சுதந்திரம் அதில் பிறர் கருத்துகளை திணிப்பது அல்லது தலையிடுவது சரியல்ல என்பது எனது கருத்து.


           அடுத்து கொங்கு மண்டலத்தின் நாகரீகம், பண்பாடு,கலாச்சாரம்  நொய்யலாறு தொடங்கி முடியும் இடம் வரை கரையோர கிராமங்களில் வேறூன்றி ஒரேமாதிரியாக காணப்படுகிறது.  நொய்யல் குறித்த எனது கவிதை ;

நுரைதெறித்து மனங்குளிர வருவாய் குதித்தோடி 
சப்தமென்ன சந்தமென்ன இசைப்பாய் செந்தமிழே ! 
கருவாகி கதிர்தழைக்க உருவானாய் தமிழ்மகளே - தமிழர் 
வீரமென்ன வெற்றியென்ன? கதைப்பாய் முத்தமிழே !

(கவிதை எழுதுவதில் எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை சொற்பிழை ஏதேனும் இருப்பின் தெரிவிக்கவும்)

   
          காஞ்சிமாநதியான நொய்யலின் பிறப்பிடம் மேற்கு மலைத்தொடரின் வெள்ளியங்கிரி மலை. இங்கு பெரியார், சேயார் எனும் சிற்றாறுகள் நொய்யலுடன் சாடிவயலில் துணை சேர்கின்றன.

         பெரியார் சிறுவாணி மலையிலிருந்து கோவைக்குற்றால அருவியாக விழுகிறது.

         நொய்யல் 160 கிலோமீட்டர்கள் மேற்கிலிருந்து கிழக்காக பாய்ந்து கொடுமுடி (ஈரோடு) அருகில் காவிரியுடன் கலக்கிறது இவ்விடம் நொய்யல் கிராமம் (கரூர்) என அழைக்கப்படுகிறது.

         கரை புரண்டோடும் நொய்யல் வழியில் 23 அணைக்கட்டுகள், 23 கால்வாய்களின் வழி பாசணத்திற்கு செல்கிறது.  100 சதுரகிலோ மீட்டர்கள் நீளம் கொண்ட 31 குளங்களை நிரப்புகிறது எண்ணற்ற ஓடைகள் இதனுடன் சேர்கிறது. 20,000 ஏக்கர் நிலங்களை பசுமையாக்குகிறது.  30,000 ஏக்கர்கள் பாசனவசதி பெருகின்றன. இந்நதி, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு,கரூர் மாவட்டங்களின் வழிபாய்ந்து செழிப்பாக்குகிறது.

         இவ்வாற்றின் மொத்த பரப்பு 3500 சதுர கிலோ மீட்டர்கள்.

        வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழையில் இருந்து இந்நதிக்கு நீர் சேகரமாகிறது. கோயமுத்தூரின் நீர் மட்டம் நடுநிலையுடன் இருக்க இங்குள்ள குளங்களே நீர் ஆதாரம் என்பது மிகையல்ல.

        சாளுக்கிய சோழவம்சம் நொய்யல் ஆற்றின் வழித்தடங்களில் அனேக கால்வாய்களை வெட்டி குளங்களை அமைத்து நீர் வளம் பெருக்கினார்கள்.  வெள்ளம் பெருக்கெடுத்து சொல்லும் போது சுற்றியுள்ள கிராமங்களுக்கு எவ்வித சேதரமும் ஏற்படுத்தாமல் இந்த கால்வாய்களின் மூலம் ஏரி குளங்களை நிறப்ப சமயோசித ஏற்ப்பாட்டினை வழிவந்த கொங்கு மன்னர்கள் திறம்பட செய்திருந்தார்கள். குளங்களங்களின் கொள்ளலவும் மீறும் போது வாய்கால்களின் மூலம் திரும்ப நொய்யலுக்கு வந்து சேரும்படி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

கொங்கு வரலாற்றின் சுருக்கம் அறிவோமா ?

         தமிழகத்தின் மேற்கு பாகம் கொங்குநாடு என அழைக்கப்படுகிறது. சேரர்களின் பிரதான பகுதி கொங்குநாடு. இதன் தலை நகராக கரூர் விளங்கியது.

அதன் பிறகு வந்த கொங்கு வம்சத்தினரின் தலைநகர் தாராபுரம் (பழங்கால பெயர் தர்க்கபுரி மற்றும் விஜயஸ்கந்தபுரம்) அதன்பின் சோழர்களின் வம்சாவழியினர் கட்டுப்பாட்டில் வந்தது (ஐந்து அரசர்கள் வீரசோழா முதல் ராஜராஜன் வரை கொங்குதேச ராஜாக்கள் என குறிப்பிடப்படுகிறது)

அதன்பின், ஹொய்சால வம்சத்தினரின் துணைகொண்டு பாளையக்காரர்கள் சோழர்களை தோற்கடித்தனர். சில காலம் விஜயநகரம்,மைசூர் ராஜ்ஜியங்களின் கீழும், தீரன் சின்னமலையின் கீழும் கொங்கு ஆளப்பட்டது.  இறுதியில் ( 1805 ) பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியக் கம்பெனியுடன் இணைக்கப்பட்டது.

       கிரேக்கர்கள் மற்றும் ரோமானியருடனான வணிகத்தொடர்பு இருந்ததற்காண நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. (இது குறித்த மற்றொரு பதிவு)


      சிற்பக்கலையின் சிறப்புடன் திகழும் பேரூர் கோயிலின் சிறப்புகளை அடுத்து காண்போம்.
                               
Download As PDF

Wednesday, April 11, 2012

சுவடுகளைத் தேடி...


                  சுவடுகளைத் தேடி எனும் இத்தொடர் கட்டுரை குறிப்பாக நொய்யல் ஆறு மற்றும் கொங்கு மண்டலத்தின் கோவை மாநகரின் மையப்பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழமையான ஊர் பேரூர் குறித்த வரலாற்று தகவல்களை எழுத இருக்கிறேன் வாசகர்களாகிய தங்களின் மேலான ஆதரவுடன்.                        >>>>>கலாகுமரன்<<<<<<<


வரலாற்றுப் பெட்டகம் பேரூர்.

            கொங்கு மண்டலத்தின் வரலாற்றைப்பற்றி எழுதுபவர்களின் டைரியில் தவிர்க்க முடியாத அங்கம் பேரூர்.




           பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை இது ஒரு அரசவனமாக இருந்துள்ளது.   பேரூரில் கோவில் எழுப்பப்பட்ட பிறகு சுற்றியுள்ள நிலங்கள் அதற்கு தானமாக கொடுக்கப்பட்டு இருந்தது.  கிழக்கு எல்லை யாக முத்தண்ணன் குளம் இருந்தது. அதாவது இன்றைய காந்தி பார்க் பகுதி.   அக்காலத்தில் மக்களின் போக்குவரத்து மிகுந்த ஊராக பேரூர் இருந்தது.

           பேரூரை சிறப்பு பெற்ற தளமாக விளங்க முக்கிய வரலாற்று சாட்சியாக கம்பீரமாக வீற்றிருக்கும் பட்டீஸ்வரர் (சிவன்) கோவில்.

          எந்த ஒரு நாகரீகமும் நதிக்கரையில் தொடக்கம். நாமும் ஜீவ நதியாக ஓடும் நொய்யல் நதியில் இருந்து தொடங்குகிறோம். காவிரியின் செல்ல மகள் என கருதப்படுவது.   செலிப்பான வற்றாத ஜீவநதி இன்று அதன் தன்மையை இழந்து நிற்பது நிதற்சன உண்மை. மனிதன் தன் சுயநலங்களுக்காக ஏற்படுத்திய பல ஆக்கிரமிப்புகள்,  இயற்கை வள சுரண்டல்கள். தனக்கு தானே அழிவைத் தேடுகிறான் என்றே சொல்லவேண்டும்.   இயற்கையின் சீறழிவுகளுக்குப் பிறகும் நமக்கு நன்மை ஒன்றையே செய்பவை ஆறுகள் என்பது மிகையில்லை. (...இந்நதியை பற்றி பிறகு விரிவாக பார்போம்.)

           காஞ்சிமாநதி எனும் நொய்யல் ஆற்றின் பேரூர் படித்துறை சோழர்களால் கட்டப்பட்டது.

           இவ்வூரில் கிடைத்த கல்வெட்டுகள் மற்றும் பட்டையங்கள், ஓலை சுவடிகளில் இருந்து பல பெயர்கள் நாம் அறிய கிடைக்கிறது.  விக்கிரம சோழன், வீரசோழன், வீரராஜேந்திர சோழன், கரிகாற்சோழன், வீரபாண்டியன், மாதையன், மூன்றாம் வீரவல்லாளன் ...இப்படி பல.

இவர்களைப்பற்றிய வரலாற்று சான்றுகளை பின்னர் விரிவாக காண்போம்.

          கச்சியப்ப முனிவரால் எழுதப்பட்ட பேரூர் புராணத்தில் இம் மேலை சிதம்பரம் குறித்து பல ஆதாரங்களை நாம் காண முடிகிறது.

          நாம் வழிவழியாக கேள்விப்பட்ட ஒரு செய்தி இப் பகுதி ஆற்றில் எலும்பைப் போட்டால் 48 நாட்களில் அது கல்லாக மாறுவது.  ( கேள்விப்பட்ட செய்தி இபோது உண்மை தான் என்று ஆராய்ச்சி மூலம் நிரூபிப்பது கடினம் என்று நினைக்கிறேன்.)

           இப்பகுதியில் வளர்ந்த புற்கள் மற்றும் இலைகளை மட்டுமே சாப்பிட்டு வளரும் கால்நடைகள் போடும் சாணம் புழுப்பதில்லை.  அதாவது புழுக்கள் ஊறி வளர்வதில்லை அப்படியே மண்னோடு மக்கிப்போய்விடுகிறது. ( கவனிக்கவும் இயற்கை உணவு உண்ணும் மாடு அல்லது பசு போடும் சாணம். அவற்றிக்கு வைக்கப்படும் தவிடு, பிண்ணாக்கு  இத்யாதி  இத்யாதி.. இதில் சேர்த்தி இல்லை.) இன்னொரு குறிப்பு, அவை இயற்கையாக இறக்கும் போது அவற்றின் வலது காதை மேல் நோக்கி வைத்த வண்ணமே இறக்கின்றன.  (இங்கு பிறந்த எவ்வுயிரும் என்றும் சொல்வர்)

        இங்குள்ள ஆற்றின் கரைப்பகுதியில் வடகைலாயநாதர் கோவில் அருகே இருக்கும் ஒரு பனை மரம் நெடு நெடுவென உயர்ந்து நிற்கிறது. இது இறவாப்பனை என்று அழைக்கப்படுகிறது.  இது இயற்கைக்கு அப்பாற்பட்டு பல தலைமுறை கடந்து இன்னும் செழிப்புடன் இருக்கும் ஒரு அதிசயமாக கருதப்படுகிறது.       இது நமக்கு சொல்லும் தெரிவிக்கும் உண்மை அல்லது தத்துவம் என்ன?




அதிகபட்சமாக சாதாரணமாக நல்ல செழிப்பான ஒரு பனை மரம் 80 முதல் 120 ஆண்டுகள் வாழும் என்று சொல்கிறார்கள்.  
 
கற்சிலையும் கவிபாடுமா?, களிநடனம் புரியுமா ? ஒவ்வொரு கல்தூணும் சிற்பங்களும் பல சம்பவங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் மௌனமாய்  கூறும்.... இன்னும் பல அரிய தகவல்களுடன் தொடர்கிறேன்.

Download As PDF

தமிழ் எழுதி (உதாரணம்) - ammaa =அம்மா, aRam=அறம், thamiz=தமிழ்,manjsaL=மஞ்சள்

மேலும் படிக்க பக்க எண்களை காண பழைய இடுகையை [OLD POSTS ]மீது கிளிக் செய்யவும் !


பிரபலமான இடுகைகள்

கடந்த 30 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Labels of this Blog

Alien (1) amphibians (1) ancient people (2) ancient scripts (1) ancient tamil poets (1) anteater (1) antibiotics (1) archaeologist (5) art (4) Artic (1) Asteroid (1) astronomy (4) atom (1) bangalore lalbagh (2) bats (1) beauty (1) Bees (2) Belmez faces (1) Bermuda Triangle (1) Birds (7) birthday song (1) black holes (1) brain activity (5) brains (2) Brown Drawfs (1) carnivorous plants (2) chennai conference (1) cloning (2) Cockroach farrms (1) Concisious mind (3) conjoined animals (1) conjoined twin (1) Contest approach (1) crinoids (1) curiosity (1) darwin (2) dhasavadaram (1) dinosaur bird (1) Draco (1) dreams (4) earth worm (1) earthday (1) environment (2) Firefly (1) Fugu (1) G.D.NAIDU (4) Galaxies (2) general knowledge (1) Genetic (1) Ghost (1) Gillette razor (1) golden buddha (1) Gulf streem (1) H.Erectus (1) Hess (1) highway of kongu culture (1) Hindusim (1) Historical Famous Faces (1) human (1) HumanMilk (1) humanoid (1) ice melting (1) indian iron pillar (1) infrared (1) interview (1) jellyfish (1) Jokes (12) KaKapo (1) Kongu culture (6) land scape (1) Library of Alexandria (1) life of bees (2) life science (3) Life Sciences (11) Liger Tigon (1) long life (1) M.Metha (1) mamies milk (1) Mars (1) meat-eating plants (1) milkyway (2) mind (1) MIR Diamond mine (1) Moscow Kremlin (1) Mosquito (1) mushroom (2) Mystery (14) mystry (2) nanban (1) Nasca (1) Nazca Lines (1) Northern Hawk owl (1) Number 108 (1) oddity (1) Omen (1) paranormal interpretation (1) Penquins (1) peru (1) Perur (1) Perur Temple (5) philosophers (1) Piri Reis Map (1) poet Kannadasan (2) QUIZ (2) rare animal (2) Religion (1) RHINOCEROS (2) Richard III (1) RMS Queen Mary (1) Rongorongo script (1) Russian royal bell (1) save trees (2) Science (3) Sea level Rise (1) sediba (1) self confidence (1) Shark (1) Short Stories (1) silambam (1) sleep (3) Sloth (1) smallpox (1) song-birds (3) Space (2) space scientist (1) sphere Robo (1) Spider (2) Sprit (1) Stars (1) story (3) strangeness (1) Superstitious behavior (1) swami vivekanandar (1) tamil artist maruthu (1) tamil history (6) Telescope (1) tibet (3) tickle (1) Tsar Bell (1) twins (1) ultraviolet (1) universe (2) vairamuthu (1) Virus (1) water (2) whales (1) windmill (1) அணு (1) அமானுஷ்யம் (4) அலெக்ஸாண்டிரியா (1) அறிவியல் துணுக்குகள் (14) அறிவியல் புதிர் (9) அனுபவம் (87) அனுபவம். பயணம் (4) அஸ்ட்ராய்டுகள் (2) ஆதி மனிதன் (2) ஆய்வு (11) ஆர்டிக் (1) ஆவி (1) ஆழ்கடல அனுபவம் (2) ஆழ்கடல் அனுபவம் (1) ஆனந்தம் இதழ் (1) ஆன்டிபாயாடிக்ஸ் (1) இரட்டை உயிர்கள் (1) இரும்பு தூண் (1) ஈஸ்டர் தீவு (2) உணவு (1) உணவுப்பழக்கம் (2) உயிர்நிழல் (1) உள்ளுணர்வு (3) உறக்கம் (1) எகிப்து (2) எண்ணங்கள் (2) எண்ணியல் (1) எறும்புதின்னி (1) ஏமாற்றம் (1) ஏன் எதற்கு எப்படி (26) ஐன்ஸ்டீன் (1) ஒளிஉமிழ்காளான் (1) ஓவியம் (6) கடல் ஆய்வு (2) கடல் சுழல் ஆய்வுக்கூடம் (2) கடல் மட்டம் (1) கடல் லில்லி (1) கடல்பல்லிகள் (1) கட்டுரை (125) கணினி (1) கண்காட்சி (3) கண்டுபிடிப்பு (5) கதை (6) கரப்பான்கள் (1) கருந்துளை (1) கல்வெட்டு (1) கவிஞர் கண்ணதாசன் (6) கவிஞர் வைரமுத்து (2) கவிதை (2) கவிதைகள் (2) கற்பாறை சித்திரங்கள் (2) கனவு (1) கனவுகள் (4) காடுறை உலகம் (1) காண்டாமிருகம் (2) காதல் (1) காந்தி (1) காளான் (2) கிச்சுக்கிச்சு (1) குளவி (1) குளோனிங் (2) கேலக்ஸி (3) கொங்கு (7) கொங்கு வரலாறு (1) கொசு (1) கொசு ஒழிப்பு (2) கொசுக்கள் (2) கோபிநாத் (1) கோவை புத்தக வெளியீடு (2) கோவை வரலாறு (7) சகுணம் (1) சலீம் அலி (1) சவரம் (1) சாதனை (1) சார்லி சாப்ளின் (1) சார்லிசாப்ளின் (1) சிங்கம்புலி (1) சிந்தனை (6) சிரோ டிகிரி. சிறுகதை (1) சிலம்பம் (1) சிறுகதை (4) சினிமா (2) சுறா (1) செண்டினல் தீவு (1) செப்பேடு (1) செய்தி (3) செய்திகள் (10) செவ்வாய் (2) டார்வின் தவளை (1) டாவின்சி (1) டிசைனர் பேபி (1) டிராட்ஸ்கி மருது (2) தங்க புத்தர் சிலை (1) தண்ணீர் (1) தத்துவம் (3) தமிழர் (2) தமிழர்கலை (1) தமிழன் (4) தமிழ் (7) தவளைகள் (1) தாய்ப்பால் (1) திபெத்திய குகைகள் (3) திமிங்கிலம் (1) தினமலர் (1) தீவு வாசிகள் (1) துணுக்குகள் (16) தூக்கம் (4) தூப்ளே (1) தேவிகா (1) தேனீ (3) தொலைநோக்கி (1) நகைச்சுவை (17) நடிகர் சிவகுமார் (3) நட்சத்திர குள்ளர்கள் (1) நட்சத்திரம் (1) நாசா (1) நாயக்கர் மகால் (2) நானோ டெக்னாலஜி (1) நானோ-தொழிநுட்பம் (1) நானோபாட்கள் (1) நாஸ்க்கா (1) நீண்ட ஆயுள் (1) நீர் சிலந்தி (1) நொய்யல் (4) பதிவுதிருட்டு (1) பயணம் (2) பறவை (7) பறவை மனிதன் (1) பறவைகள் (2) பாக்தாத் பேட்டரி (3) பாமரன் (1) பால்வீதி (1) பால்வெளி (2) பிரபஞ்சம் (5) பிரிரெயிஸ் (1) பில் கேட்ஸ் (1) பிளாஸ்டிக் (1) பிளேட்டோ (2) பிறந்தநாள் பாடல் (1) புதுவை (1) புத்தகம் (2) புவி தினம் (1) புவி வெப்பமாதல் (1) புழு (1) புனைவுகள் (1) பூச்சியுண்ணும் தாவரங்கள் (1) பூமி தினம் (1) பெங்களூரு (2) பெரிய ஆலமரம் (1) பெருவழிப்பாதை (1) பெல்மீஸ் (1) பேரூர் (7) பேரூர் கல்வெட்டு (1) பொன்மொழிகள் (3) போலியோ (1) ப்ளாஸ்மான்கள் (1) மங்கள்யான் (1) மணிகள் (1) மதுரை (1) மரங்களின் பாதுகாப்பு (2) மரபியல் (5) மருத்துவம் (18) மனம் (2) மனித மூளை (1) மனோவலிமை (2) மாமிச உண்ணி தாவரம் (1) மின்மினிப் பூச்சிகள் (1) மீன்கள் (2) மு. மேத்தா (1) முதுமக்கள் தாழி (1) மூடபழக்கவழக்கம் (2) மூளை (4) மேஜிக் (1) ராசாளி ஆந்தைகள் (1) ராஜநாகம் (1) ரூபிக் க்யூப் (1) ரேசர் (1) வரைபடம் (1) வலைப்பதிவர்கள் விழா (1) வாழ்க்கை (1) விச சிலந்தி (1) விண்கற்கள் (1) விண்ணியல் (3) விண்வெளி (6) விண்வெளி வாகனங்கள் (3) விண்வெளி விஞ்ஞானிகள் (2) விநோதங்கள் (1) விமர்சனம் (1) விலங்குகள் (2) வெப்பமயமாதல் (1) வெளவால் (1) வேற்றுகிரகவாசி (1) வைர சுரங்கம் (1) வைரஸ் (1) வொயுனிச் (1) வௌவாள் (1) ஜி.டி.நாயுடு (3) ஜெல்லி மீன் (1) ஜோக்குகள் (3) ஜோக்ஸ் (10) ஸ்டெம் செல் (1) ஸ்லவுத் (1)